‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஞானசாரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி

0 342
  • மெளலவி மொஹமட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கலீலுர்ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் உள்ளடக்கம்

  • இரு முக்கிய பணிகள் ஒப்படைப்பு;  இறுதி அறிக்கை 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் பிர­தான தொனிப் பொரு­ளாக தேர்தல் காலத்தில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் எண்ணக் கருவை நடை முறை­ப்­படுத்தும் முக­மாக ஜனா­தி­பதி செய­லணி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் 13 பேரை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த ஜனா­தி­பதி செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக, ஜனா­தி­பதி செயலர் பி.பீ. ஜய­சுந்­தர ஜனா­தி­ப­தியின் பணிப்பின் பேரில் வெளி­யிட்­டுள்ள  அதி விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு, காலி உலமா சபையின் தலைவர் மௌலவி மொஹமட், விரி­வு­ரை­யாளர் மொஹமட் இந்­திகாப், கொழும்பு மாந­க­ர­சபை உறுப்­பினர் கலீ­லுர்­ர­ஹுமான் மற்றும் அர­சியல் செயற்­பாட்­டா­ளரும் எழுத்­தா­ள­ரு­மான அஸீஸ் நிசார்தீன் உள்­ளிட்­டோரும் குறித்த செய­ல­ணியில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

2021 ஒக்­டோபர் 26 ஆம் திகதி திக­தி­யி­டப்­பட்ட 2251/30 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக இந்த செய­லணி நிய­மிக்­க­ப்பட்­டுள்­ளது.

செய­ல­ணியின் தலைமை கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு வழங்­கப்பட்­டுள்ள அதே நேரம் செய­ல­ணியின் செய­ல­ராக ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் ஜீவந்தி சேன­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பின் 33 ஆம் உறுப்­பு­ரைக்கு அமைய ஜனா­தி­ப­திக்கு உள்ள அதி­கா­ரங்­களின் கீழ் இந்த செய­லணி உரு­வாக்­கப்பட்­டுள்­ளது.

அதன்­படி இந்த ஜனா­தி­பதி செய­ல­ணியில் உள்­ள­டங்­கு­வோரின் பெயர் விப­ரங்கள் வரு­மாறு:

  1. கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் ( தலைவர்)
  2. பேரா­சி­ரியர் தயா­னந்த பண்­டார
  3. பேரா­சி­ரியர் சாந்­தி­நந்­தன விஜே­சிங்க
  4. பேரா­சி­ரியர் சுமேத சிறி­வர்த்­தன
  5. என். ஜி. சுஜீவ பண்­டி­த­ரத்ன
  6. சட்­டத்­த­ரணி இரேஷ் செனெ­வி­ரத்ன
  7. சட்­டத்­த­ரணி சஞ்­ஜய மாரம்பே
  8. எரந்த நவ­ரத்ன
  9. பாணி வேவல
  10. மௌலவி மொஹமட் (காலி உலமா சபை)
  11. விரி­வு­ரை­யாளர் மொஹமட் இந்­திகாப்
  12. கலீலுர் ரஹ்மான்
  13. அஸீஸ் நிசார்தீன்

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு நீதி மற்றும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­தலும் சட்­டத்தின் பாது­காப்பும் சர்­வ­சா­தா­ர­ண­மாக அமைய வேண்டும் என்­பதை கவனத்தில் கொண்டும், இந்த விட­யத்தில்  இனம், மதம், குலம் அல்­லது வேறே­தேனும் கார­ணி­யொன்­றினை மையப்­ப­டுத்தி எந்த ஒரு நபரும் பாகு­பாட்­டுக்கு உள்­ளாக்­கப்­படல் அல்­லது விசேட கவ­னத்­துக்கு ஆளா­கக்­கூ­டாது எனும்  அடிப்­படை உரி­மை­க­ளின் கீழ் காட்­டுப்­பட்­டுள்­ளதால் ஒரே நடு ஒரே சட்டம் எனும் எண்னக் கருவை செயற்­ப­டுத்த துணிந்­துள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் கூறப்ப்ட்­டுள்­ளது.

அத்­துடன் அவ்­வாறு இந்த எண்ணக் கருவை செயற்­ப­டுத்­து­வதன் ஊடாக அது தேசிய மற்றும் சர்­வ­தேச அளவில் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க மனித விழு­மி­யங்­களை அடையும் பொறி­மு­றை­யாக அமையும் எனவும், அனைத்து பிர­ஜை­களும் சட்­டத்தின் முன் சம­மா­ன­வர்கள் என்­பதை மேலும் உறுதி செய்­வ­தா­கவும் அமையும் என வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பிடப்­பட்­டுள்­ளது.

செய­லணி உறுப்­பி­னர்­களின் தெரி­வா­னது, அவர்­க­ளது விவேகம், திறமை மற்றும் பற்­று­றுதி என்­ப­வற்­றின்­மீது ஜனா­தி­ப­திக்கு உள்ள  மிகுந்த பக்­தியும் நம்­பிக்­கையும் அடிப்­ப­டை­யாக கொண்டு தீர்­மா­னிக்­கப்பட்­டுள்­ள­தாக குறித்த வர்த்­த­மா­னியில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த செய­ல­ணிக்கு பிர­தா­ன­மாக இரு பணி­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு சாட்­டப்­பட்­டுள்­ளது.

  1. இலங்­கை­யினுள் ஒரே நாடு, ஒரே சட்டம் என்­பதைச் செயற்­ப­டுத்­துதல் தொடர்­பாகக் கற்­றா­ராய்ந்து அதற்­காகச் சட்­ட­வ­ரை­வொன்றைத் தயா­ரித்தல்.
  2. நீதி அமைச்­சினால் இது­வரை இதற்­கு­ரி­ய­தாக தயா­ரிக்­க­ப­பட்­டுள்ள சட்ட வரை­வுகள் மற்றும் திருத்­தங்­களைக் கற்­றா­ராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்­தங்கள் இருப்பின் அதற்­கான முன்­மொ­ழி­வு­களைச் சமர்ப்­பித்­தலும் ஏற்­ற­வாறு உரிய வரைவில் உள்­ள­டக்­குதல். ஆகி­ய­னவே அந்த பணி­க­ளாகும். அதன்­படி ஒப்­ப­டைக்­கப்­படும் பணி­களை நிறை­வேற்­று­வ­தற்குத் தேவை­யா­ன­வாறு விட­யங்­களை விசா­ரிப்­ப­தற்கும் ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தற்கும் இந்த வர்த்­த­மானி ஊடாக அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில், செய­ல­ணியின் உறுப்­பி­னர்கள் குறைந்­த­பட்சம் மாதத்­துக்­கொ­ரு­முறை ஜனா­தி­ப­திக்கு அறிக்­கை­ய­ளிக்க வேண்டும் எனவும், இறுதி அறிக்­கையை 2022 பெப்­ர­வரி மாதம் 28 ஆந் திகதி அல்­லது அதற்­கு­முன்னர் சமர்ப்­பிக்க வேண்டும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனைவிட, , இச்செயலணியினால் ஆலோசனை வழங்கக்கூடிய அல்லது சேவைகளை வழங்குவதற்காக உதவியினைக் கோரக்கூடிய சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் ஏனைய நபர்களும் குறித்த செயற்பாடு தொடர்பில் அவற்றைப் பின்பற்றி அததகைய ஆலோசனைகளை, தகவல்களை, உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறும், அல்லது தாமதங்களை ஏற்படுத்துவோர் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டுவருமாறும் செயலணி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“கடமையை நிறைவேற்றுவோம்’

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கொள்­கையை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக அது தொடர்பில் ஆராய்ந்து சட்­ட­வ­ரைபை மேற்­கொள்ள எனது தலை­மையில் ஜனா­தி­பதி செய­லணி நிய­மித்துள்ளார். எமது செய­ல­ணியின் கட­மைகள், செயற்­பா­டுகள் தொடர்பில் மக்­க­ளுக்கு முதலில் தெளி­வு­ப­டுத்­துவோம் என ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

செய­ல­ணியில் முஸ்லிம் சமூகம் சார்பில் நால்வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அனை­வரும் ஒன்­று­பட்டே கட­மை­யினை நிறை­வேற்­றுவோம் என்றும் கூறினார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற சட்ட வரைபு அறிக்கை அனைத்து இன மக்­களும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் முரண்­பா­டற்று தயா­ரிக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கிறேன். நீதி­ய­மைச்­சினால் இது­வரை தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சட்ட வரை­புகள் மற்றும் திருத்­தங்­களை ஆராய்ந்து  தேவையான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.