முஸ்லிம்களின் பின்னடைவுக்கு தனிக் கட்சி உருவாகியது மாத்திரந்தான் காரணமா?

0 549

மர்சூக் அகமட் லெவ்வை

“மாண்­டவர் புகழ் பாடினால் வாழ்­பவர் பிரச்­சினை தீருமோ?” என்ற தலை­யங்­கத்தில் கலா­நிதி அமீர் அலி சென்ற 07.10.2021 விடி­வெள்­ளியில் எழு­திய கட்­டு­ரைக்கு ஒரு பதில் கட்­டு­ரை­யாக இதை எழு­தலாம் என நினைக்­கின்றேன்.

முஸ்­லிம்­க­ளுக்குத் தனிக்­கட்சி உருவாக வேண்டும் என்பதில் முன்னாள் காத்­தான்­குடி பட்­டி­னாட்சி மன்றத் தலைவர் அஷ் ஷஹீத் அக­மது லெப்பை உடைய பங்­க­ளிப்­பு­களை பற்றி கலா­நிதி அமீர் அலி குறிப்­பிட தவ­றி­விட்டார். 1970களின் பிற்­ப­கு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குத் தனிக்­கட்சி வேண்டும் என்ற ரீதியில் அஷ் ஷஹீத் அக­மது லெவ்வை பல கட்­டு­ரை­களை தின­பதி, தின­கரன் போன்ற பத்­தி­ரி­கை­களில் எழு­தினார். கட்­டு­ரைகள் எழு­து­வ­தோடு மாத்­திரம் அவர் நின்­று­வி­ட­வில்லை. காத்­தான்­கு­டி­யிலே தான் அதற்­கான விதையும் நடப்­பட்­டது. காத்­தான்­கு­டியில் அஹமட் லெவ்­வையின் தலை­மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­பிக்­கப்­பட்­டது என்று முஸ்லிம் காங்­கிரஸ் யாப்­பி­லேயே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மறைந்த மாம­னிதர் அஷ்­ர­புக்கு ஒரு முன்­னோடி தலை­வ­ராக அஷ் ஷஹீத் அக­மது லெவ்வை திகழ்ந்தார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆரம்ப கர்த்­தாக்­க­ளான ஹசன் அலி, சட்­டத்­த­ரணி கபூர் போன்றோர் “முஸ்லிம் காங்­கி­ரஸை அமைப்­ப­தற்கு நாங்கள் அஷ்­ர­போடு சேர்ந்து எத்­தனை முறை அஹ­மது லெவ்வையின் இளம்­பிறை அச்­ச­கத்­திற்கு ஏறி இறங்கி இருக்­கிறோம் தெரி­யுமா?” என்று இப்­போதும் கேட்­பார்கள். அஹ­மது லெவ்வையின் தம்பி சட்­டத்­த­ரணி அப்துல் ஜவாத் தான் “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்” என்ற பெயரை முன்­மொ­ழிந்தார். கலா­நிதி அமீர் அலியின் தந்தை கவிஞர் அப்துல் காதர் லெவ்­வையும் எனது தந்தை அக­மது லெவ்­வையும் நெருங்­கிய நண்­பர்கள். கவிஞர் அப்துல் காதர் லெவ்­வையும் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­தவர் தான். கவிஞர் அப்துல் காதர் லெவ்வை மர­ணித்­தபின் அவ­ரது “பாத்தும்மா சரிதை” என்ற ஆக்­கத்தை புத்­த­க­மாக அச்­சிட்டு, வெளி­யிட்டும் வைத்தார் அஹ­மது லெவ்வை. ” பாத்­தும்மா என்­பது அமீ­ர­லியின் தாயாரின் பெயர். அஹமட் லெவ்வை மர­ணிப்­ப­தற்கு முதல் இறு­தி­யாக வெளி­யிட்ட நூல் தான் “பாத்­தும்மா சரிதை”. முஸ்லிம் காங்­கி­ரசின் வர­லாறு எழுதும் போது காத்­தான்­கு­டி­யையும், அஹ­மது லெவ்­வை­யையும், இளம் பிறை அச்­ச­கத்­தையும் விட்­டு­விட்டு எழு­தவே முடி­யாது.

வட­கி­ழக்­கிலே முஸ்­லிம்கள் செறி­வாக வாழ்ந்­தாலும் வட­கி­ழக்­கிற்கு வெளியே வாழு­கின்ற முஸ்­லிம்கள், அதா­வது தென்­னி­லங்­கை­யிலே வாழு­கின்ற முஸ்­லிம்கள் சிதறி வாழ்­வதால் வட­கி­ழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு உரு­வா­கின்ற தலை­மைத்­து­வத்­தினால் சிதறி வாழும் தென்­னி­லங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும் என்ற கார­ணத்­தினால் முஸ்லிம் தனிக் கட்­சிக்கு தான் எதிர்ப்பு வெளி­யிட்­ட­தாக கலா­நிதி அமீர் அலி தனது கட்­டு­ரை­யிலே குறிப்­பி­டு­கின்றார். இதற்கும் அக­மது லெவ்­வை­யிடம் தீர்வு இருந்­தது. அதா­வது மாம­னிதர் அஷ்ரப் முஸ்லிம் காங்­கி­ரஸை கட்­சி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்தி, அதன்பின் நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் சென்று கட்­சியை வளர்ப்­ப­தற்­கான பணியில் மிகத் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருந்த கால­கட்­டத்தில் அஹ­மது லெவ்வை அஷ்­ர­பிடம் “இக்­கட்­சியை வட­கி­ழக்­கிற்கு வெளியே எடுத்து செல்ல வேண்டாம். வடக்­கி­லேயே வைத்­துக்­கொள்­ளுங்கள். காரணம் தமிழ் கூட்­ட­மைப்பு தங்­க­ளது அர­சியல் நட­வ­டிக்­கை­களை வட­கி­ழக்­கினுள் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்தி இருப்­பதால் முஸ்­லிம்­களும் தனது கட்­சியை வட­கி­ழக்­கோடு நிறுத்திக் கொள்­வ­துதான் தென் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்­பா­ன­தாக இருக்கும்” என்று கூறினார். இந்த விட­யத்தில் அஷ்­ரபும் அக­மது லெவ்­வையும் முரண்­பட்டுக் கொண்­டனர்.

அமீ­ரலி தனது தந்­தை­யான கவிஞர் அப்துல் காதர் லெவ்­வைக்கு “முஸ்­லிம்­க­ளுக்கு தனிக்­கட்சி தேவை­யில்லை, இது முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஆபத்­தா­னது” என்று கடிதம் எழு­தி­ய­தாக குறிப்­பி­டு­கின்றார். இவ்­வா­றான ஆபத்­தான விட­யத்தை தந்­தைக்கு கடிதம் எழுதி, தந்தை மறுத்­த­துடன் தனது கடமை முடிந்­து­விட்­ட­தாக அமீ­ரலி கரு­தி­னாரா? இந்த விட­யத்தை மக்கள் மத்­தியில் மேடை போட்டு ஏன் எதிர்ப் பிரச்­சாரம் செய்­ய­வில்லை. அமீ­ரலி தான் ஒரு கல்­விமான், தீர்க்­க­த­ரிசி என்றால் ஆரம்­பத்­தி­லேயே அதனை மக்கள் மத்­தியில் கொண்டு சென்­றி­ருக்­க­வேண்டும். இப்­போது தனிக்­கட்சி தொடங்கி, அதன் விளை­வாக முஸ்லிம் சமூகம் அழிந்­தபின் இப்­போது கட்சி தொடங்­கி­யது பிழை என்று கூறு­வது ஒரு கல்­விமான் தீர்க்­க­த­ரி­சிக்­கு­ரிய பண்­பில்­லையே. அப்­போது பொது­வெ­ளியில் கூறாமல் இப்­போது பொது­வெ­ளியில் கூறு­வதால் எந்தப் பிர­யோ­ச­ன­முமில்லை. அஹமட் லெவ்வை கிழக்கு மாகாண மக்­களை ஒன்று திரட்டும் நோக்­கத்தில் கிழக்கு மாகா­ணத்தில் அனைத்து முஸ்லிம் ஊரிலும் உள்ள பள்­ளி­வா­சல்­களை எல்லாம் அழைத்து காத்­தான்­குடி மெத்தை பள்­ளி­யிலே மூன்று நாட்­க­ளாக மகா­நாடு நடாத்தி கிழக்­கி­லங்கை முஸ்லிம் மஜ்­லிஸை உரு­வாக்­கினார்.

அஹ்­மது லெவ்வை வட­கி­ழக்­கிற்கு வெளியே முஸ்லிம் காங்­கி­ரசை கொண்டு செல்ல வேண்டாம் என ஏன் தனக்கு குறிப்­பிட்டார் என்­பதை பல வரு­டங்­க­ளுக்குப் பின்னர் தெளி­வாக உணர்ந்த அஷ்­ரப்தான் “தேசிய ஐக்­கிய முன்­னணி” என்ற கட்­சியை புறாச் சின்­னத்தில் உரு­வாக்­கினார். அவ­ருக்கு முஸ்லிம் காங்­கி­ரஸை கைவிடும் நோக்கம் இருந்­தது. தேசிய ஐக்­கிய முன்­ன­ணியை தொடங்­கிய உடனே அவர் மர­ணித்து விட்­டதால் அதன் பின் வந்­த­வர்கள் அக்­கட்­சியை முன்­னெ­டுத்துச் செல்­ல­வில்லை.

பொது­வா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் தீர்வு எப்­போது தேவைப்­படும் என்றால், தமி­ழர்­க­ளுக்கு அர­சியல் தீர்வு என்று கிடைக்­க­வி­ருக்கும் போது தான் முஸ்­லிம்­களும் தீர்வு பற்றி தீவி­ர­மாக பேசு­வார்கள். அதா­வது தமி­ழர்­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைக்­கின்ற போது அதோடு சேர்த்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு வேண்டும், இல்­லா­விட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வு தேவை­யில்லை, அதா­வது தீர்வு தேவைப்­படும் அள­வுக்கு முஸ்­லிம்­க­ளுக்கு பிரச்­சினை இல்லை என்ற மனப்­பாங்­கி­லேயே தான் முஸ்­லிம்கள் நடந்து கொள்­வார்கள். முஸ்­லிம்­களின் இந்த மனப்­பாண்­மையை தமிழ் தரப்பு எள்ளி நகை­யா­டி­யது. “நாங்கள் கஷ்­டப்­பட்டு அரிசி சேர்த்து, மசாலா சேர்த்து, பிரி­யாணி சமைக்­கின்றோம். பிரி­யாணி சமைத்து முடி­கின்ற நேரத்தில் நல்ல பிரி­யாணி வாசம் வரும். பிரி­யாணி வாசம் வந்­ததும் முஸ்­லிம்கள் அதனை மணந்­து­விட்டு தாங்­களும் புரி­யாணி சாப்­பி­டுவோம், எங்­க­ளுக்கும் பிரி­யா­ணியில் பங்கு தாருங்கள் என்று கேட்டு வரு­கின்­றார்கள்” என முஸ்­லிம்­களைப் பார்த்து தமிழர் தரப்பு எள்ளி நகை­யா­டி­யது.

அதா­வது தாங்கள் ஆயுதம் ஏந்தி, பல்­லா­யிரம் உயிர்­களை இழந்து, போராடி, கஷ்­டப்­பட்டு ஒரு தீர்­வுக்­கான நிலையை எட்­டும்­போது தான் முஸ்­லிம்­களும் விழித்­துக்­கொண்டு தங்­க­ளுக்கும் தீர்வு வேண்டும் என்­கி­றார்கள் என்­ப­துதான் தமிழர் தரப்பு விவா­த­மாக இருந்­தது.

ஒரு முறை முன்னாள் வட­மா­காண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்­க­மோடு நான் பேசிக் கொண்­டி­ருக்கும் போது இந்த பிரி­யாணி கதையைச் சொன்னேன். அப்­போது சிவா­ஜி­லிங்கம் “தமி­ழர்­க­ளோடு சேர்ந்து முஸ்­லிம்­களும் போரா­டாத கார­ணத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வு கிடைக்க தேவை­யில்லை என்ற விவாதம் பிழை­யா­னது. ஏனெனில் இந்­தி­யர்கள் தங்­க­ளு­டைய சுதந்­தி­ரத்­திற்­காக மிகவும் போராட்டம் நடத்தி, பல உயிர்­களை இழந்து சுதந்­தி­ரத்தை பெற்றுக் கொண்­டார்கள். அதே­நேரம் எந்தப் போராட்­டமும் நடத்­தாமல் இலங்­கை­யர்கள் சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொண்­டார்கள். இந்­தி­யர்கள் போரா­டி­ய­தால்தான் போரா­டாத இலங்­கை­யர்­க­ளுக்கும் சுதந்­திரம் கிடைத்­தது. எனவே தமி­ழர்­களின் போராட்­டத்­தினால் தீர்வு கிடைக்கும் போது முஸ்­லிம்­க­ளுக்கும் அத­னோடு சேர்ந்து தீர்வு கிடைப்­பதில் எந்த தவறும் இல்லை” என்று சிவா­ஜி­லிங்கம் அரு­மை­யான உதா­ர­ணத்­தோடு என்­னிடம் விளங்­கப்­ப­டுத்­தினார்.

முஸ்லிம் காங்­கி­ரஸை அர­சியல் கட்­சி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதன் முக்­கிய கார­ண­மாக அஷ்ரப் முன்­வைத்­தது “இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தான போது முஸ்­லிம்கள் ஒரு தரப்­பா­கவே கரு­தப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்­களின் விருப்பு வெறுப்­புகள் அதில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இதற்குக் காரணம் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு தனிக்­கட்சி இல்­லா­ததே. இதனால் தான் முஸ்லிம் காங்­கி­ரஸை அர­சியல் கட்­சி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தினேன்” என்றார்.

இலங்கை- இந்­திய ஒப்­பந்­தமே வட­கி­ழக்­கிலே உள்ள தமி­ழர்­க­ளுக்கு ஒரு தீர்­வாக வந்­தது தான். வட­கி­ழக்கு மக்­க­ளையே மைய­மாக வைத்து வந்த இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை முஸ்லிம் கட்சி தொடங்­கு­வ­தற்கு காரணம் காட்டும் அஷ்ரப் முஸ்லிம் காங்­கி­ரஸை வட­கி­ழக்­கோடு மட்டுப் படுத்­தாமல் வட­கி­ழக்­கிற்கு வெளியே கொண்டு சென்­றது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. வட­கி­ழக்­கிற்கு வெளியே பெரிய அளவில் முஸ்லிம் காங்­கிரஸ் வள­ர­வில்லை. வட­கி­ழக்­கிற்கு வெளியே மரச் சின்­னத்தில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்ற ஒரே தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம் தான். அதுவும் ஒருமுறை தான் ரவூப் ஹக்கீம் மரத்திலே கேட்டார். பின்னர் அவரும் யானைச் சின்னத்தில் தேர்தல் கேட்டுத்தான் வெற்றி பெற்று வருகிறார்.

தென்­னி­லங்­கையில் சிங்­க­ள­வர்கள் மத்­தியில் சிதறி வாழும் முஸ்­லிம்கள் இதனால் சில கஷ்­டங்­களை அனு­ப­விக்­கின்­றார்கள். அப்­ப­கு­தியில் முஸ்லிம் காங்­கிரஸ் போட்டி போட்டு ஒரு சில ஆயிரம் வாக்­கு­களைப் பெறு­வதால் அது­வ­ரையில் முஸ்­லிம்­க­ளிடம் இருந்து வந்த சில ஆயிரம் வாக்­கு­களைப் பெற்று வெற்றி பெற்று வந்த சிங்­க­ள­வர்கள் தோல்­வி­ய­டைந்­ததால் இதற்குக் கார­ண­மான முஸ்லிம் காங்­கி­ரஸின் மீது சிங்­க­ள­வர்கள் ஆத்­திரம் அடை­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்டும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு உண்டு.
எனவே முஸ்லிம் மக்­களின் இந்த இழி­நி­லைக்கு முஸ்­லிம்­க­ளுக்கு தனிக் கட்சி உரு­வா­கி­யது மாத்­தி­ரந்தான் காரணமா என்பது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.