இலங்கையில் முஸ்லிம் சமூகம் மீது பாகுபாடு

2013 ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ள வன்முறை, துன்புறுத்தல்களை முடிவுக்குக்கொண்டு வருமாறு அரசாங்கத்தை கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபையின் புதிய அறிக்கை

0 502

(எம்.ஐ.அப்துல் நஸார்)

2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் சமூகம் தொடர்ச்­சி­யான பாகு­பாடு, துன்­பு­றுத்தல் மற்றும் வன்­மு­றையை அனு­ப­வித்து வரு­கி­றது, இது சிறு­பான்மைக் குழு­வொன்றை  வெளிப்­ப­டை­யாக இலக்கு வைக்கும் கொள்­கை­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டதன் உச்­சக்­கட்­ட­மாகும் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை அண்­மையில் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்­ளது.

‘எரியும் வீடுகள் தொடக்கம் எரியும் உடல்கள் வரை – இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான துன்­பு­றுத்தல், பாகு­பாடு மற்றும் வன்­முறை’ எனும் தலைப்­பி­லான சுமார் 80 பக்­கங்கள் கொண்ட இந்த அறிக்­கையில் 2013 முதல் இலங்­கையில் முஸ்­லிம்கள் எதிர்­கொண்டு வரும் வன்­மு­றைகள் மற்றும் பாகு­பாடு குறித்து விரி­வான ஆய்­வினை முன்­வைத்­துள்­ளது.

சிங்­க­ள-­பௌத்த தேசி­ய­வாத எழுச்­சி­யி­னி­டையே 2013 தொடக்கம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எதிர்ப்பு உணர்வு வளர்ச்சி கண்­டுள்­ளது. தண்­ட­னை­யின்றி தப்­பித்துக் கொள்ளும் கும்­பல்­க­ளினால்  தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக பாகு­பாடு காட்டும், கொவிட் – 19 தொற்று கார­ண­மாக உயி­ரி­ழக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்தல், நிகாப் மற்றும் மத­ர­சாக்கள் இரண்­டையும் தடை செய்­வ­தற்­கான தற்­போ­தைய திட்­டங்கள் உள்­ளிட்ட அர­சாங்கக் கொள்­கை­க­ளினால் தோற்றம் பெற்­றுள்­ளது.

‘இலங்­கையில் முஸ்லிம் எதிர்ப்­பு­ணர்வு என்­பது புதி­தான ஒன்­றல்ல, எனினும் அண்­மைய ஆண்­டு­களில் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள், அதி­கா­ரி­களின் மறை­முக ஒப்­பு­த­லுடன் செய்­யப்­பட்­டவை, ஆபத்­தான கால இடை வெளியில் நிகழ்ந்­துள்­ளன. முஸ்­லிம்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யாக விரோ­த­மாக இருக்கும் பேச்­சுக்கள் மற்றும் கொள்­கை­க­களை தற்­போ­தைய அர­சாங்கம் கைக் கொண்­டுள்­ள­தோடு இவ் விடயம் தொடர்­பு­பட்­டுள்­ளது’ என சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பிரதிப் பொதுச் செய­லாளர் கைல் வார்ட் தெரி­வித்­துள்ளார்.

‘இலங்கை அதி­கா­ரிகள் இந்த ஆபத்­தான போக்கை முடி­வுக்குக் கொண்­டு­வந்து முஸ்­லிம்­களை மேலும் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­வ­தி­லி­ருந்து பாது­காக்க வேண்டும், குற்­ற­வா­ளி­களை பொறுப்­புக்­கூறச் செய்ய வேண்டும் என்­ப­தோடு முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­படும், துன்­பு­றுத்­துதல் மற்றும் பாகு­பாடு காட்டும் அர­சாங்கக் கொள்­கை­ககள்  கைவி­டப்­பட வேண்டும்.’

முஸ்­லிம்கள் மீது அதி­க­ரித்து வரும் விரோதம்
முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரன வன்­முறை சம்­ப­வங்கள் 2013 முதல் அடிக்­கடி தீவி­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. இதில் முக்­கிய விடயம் என்­ன­வென்றால் தாக்­கு­தல்கள் மற்றும் வெறுப்பு பேச்­சுக்­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் தங்கள் செயல்­க­ளுக்கு தண்­ட­னை­யின்றி தப்­பித்துக் கொள்­வ­தாகும்.

இஸ்­லா­மிய விதி­மு­றைகள் மற்றும் பழக்­க­வ­ழக்­கங்­க­ளின்­படி, முஸ்­லிம்­களின் நுகர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்ட உணவைக் குறிக்கும் உணவின் ஹலால் சான்­றி­தழை முடி­வுக்கு கொண்­டு­வர சிங்­க­ள-­பௌத்த தேசி­ய­வாத குழுக்கள் வெற்­றி­க­ர­மாக பிரச்­சா­ரங்­களில் ஈடு­பட்­ட­போது, அதி­க­ரித்த விரோதம் தொடங்­கி­யது. இந்த பிரச்­சா­ரங்கள் கார­ண­மாக பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிறு­வ­னங்கள் மீது பல தாக்­கு­தல்கள் இடம்­பெற வழி­வ­குத்­தது, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் செயல்கள் தண்­ட­னை­யின்றி செய்­யப்­ப­டலாம் என்­பதை சமிக்­ஞை­யாக காட்டும் வகையில் பொறுப்­பா­ன­வர்கள் பொறுப்­புக்­கூ­றாமல் இருந்­தனர்.

2014 இல், தெற்கு கட­லோர நக­ர­மான அளுத்­க­மவில் ஒரு சிங்­க­ள-­பௌத்த தேசி­ய­வாதக் குழு பேர­ணி­யொன்­றினை நடத்­திய பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  எதிர்ப்பு கல­வரம் தொடங்­கி­யது. இங்கும், வன்­மு­றையில் ஈடு­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­ப­வில்லை அதே­போன்று  பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­கவும் அதி­கா­ரிகள் தவ­றி­விட்­டனர்.
இன மற்றும் மத சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நீதி மற்றும் பொறுப்­புக்­கூ­ற­லுக்கு 2015 இல் இருந்த அர­சாங்கம் உறு­தி­ய­ளித்த போதிலும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் தொடர்ந்­தன. தேர்­த­லுக்குப் பின்னர், 2017 ஆம் ஆண்டு தெற்கு கட­லோர நக­ர­மான ஜிந்­தோட்­டயில் முஸ்­லிம்-­வி­ரோத குழு­வொன்று வன்­மு­றையில் இறங்­கி­யது, அதே நேரத்தில் மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள திகன மற்றும் அம்­பாரை ஆகிய நக­ரங்­களில் இதே­போன்ற வன்­மு­றைகள் 2018 இல் இடம்­பெற்­றன. குற்­ற­வா­ளிகள் பொறுப்­புக்­கூ­றலில் இருந்து தப்­பி­யது மட்­டு­மல்­லாமல், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­க­ளுக்கு பொலி­ஸாரும் படை­யி­னரும் போதிய பாது­காப்பை வழங்­க­வில்லை அல்­லது வன்­மு­றையைத் தடுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான அதி­க­ரிப்பு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஐ.எஸ் அமைப்­பெனக் கூறப்­படும் உள்ளூர் இஸ்­லா­மியக் குழுவால் நடத்­தப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தல்­களில் 250 இற்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்ட பின்னர் முஸ்­லிம்கள் மீதான விரோதம் கணி­ச­மாக அதி­க­ரித்­தது.

இந்த தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து,  2019 மே 13 அன்று, இலங்­கையின் வடமேல் மாகா­ணத்தில் உள்ள பல நக­ரங்­களில் முஸ்­லிம்கள் புனித மாதங்­களில் ஒன்­றான ரம­ழானின் போது தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கினர். நாடு முழு­வதும் உள்ள பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்­டன மற்றும் சமூக வலை­த­ளங்­களில் ‘வெறுப்பு பேச்சு’ பதி­வுகள் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான விஷமப் பிரச்­சா­ரங்கள் பதி­வி­டப்­பட்­டன. தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை தன்­னிச்­சை­யாக கைது செய்ய அதி­கா­ரி­களால் துரி­த­மாக அவ­ச­ர­கால விதி­மு­றை­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து, அர­சியல் மற்றும் பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து திசை திருப்ப முஸ்லிம் மக்­களை குறி­வைத்து பலி­க­டா­வாக்கி வரு­கி­றது.

கொவிட் -19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்ய வேண்டும் என்ற கொள்­கையில் இது தெளி­வாகத் தெரி­கி­றது, இஸ்­லாத்தில் தகனம் செய்­யப்­ப­டு­வது வெளிப்­ப­டை­யாகத் தடை­செய்­யப்­பட்­டி­ருக்கும் நிலை­யிலும், உயி­ரி­ழந்­த­வர்­களை  அடக்கம் செய்­வது நோய்த் தொற்­றினை மேலும் பரவச் செய்யும் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான விஞ்­ஞா­ன­பூர்வ சான்­றுகள் இல்­லாத போதிலும் அது செயல்­ப­டுத்­தப்­பட்­டது.

முஸ்­லிம்­களை இலக்­காகக் கொண்ட அர­சாங்­கத்தின் கொள்­கைகள்
ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை மீதான வாக்­கெ­டுப்பு கார­ண­மாக சர்­வ­தேச அழுத்­தத்­திற்கு அரசு அடி­ப­ணிந்­தது. கட்­டாய தகனம் கொள்கை விலக்கிக் கொள்­ளப்­பட்­டது. எனினும், அதி­கா­ரிகள் நிகாப் தடை மற்றும் மத­ரஸா மீதான தடை உட்­பட பார­பட்­ச­மான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முயல்­கின்­றனர். இக் கட்­டுப்­பா­டுகள் நடை­மு­றைப்படுத்தப்­படும் பட்­சத் தில், இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பினால் உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட்­டுள்ள  மதத்தின் அடிப்­ப­டை­யி­லான பாகு­பா­டு­க­ளி­லி­ருந்து சுதந்­தி­ரத்தை மீறு­கின்ற செய­லாக இருக்கும் என்­ப­தோடு இலங்­கையைக் கட்­டுப்­ப­டுத்தும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டத்­தையும் மீறும் செயற்­பா­டா­கவும் இருக்கும்.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் (பிடிஏ) உட்­பட, முஸ்­லிம்­களை இலக்கு வைப்­ப­தற்­காக, தற்­போ­துள்ள சட்­டங்­களை அதி­கா­ரிகள் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர், இது சந்­தேக நபர்­களை 90 நாட்கள் வரை குற்­றச்­சாட்டு இன்றி, நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தாமல் தடுத்து வைக்க அனு­ம­திக்கும். இது ICCPR சட்­டத்தின் தவ­றான பயன்­பா­டாகும், இது பாகு­பாடு, விரோதம் அல்­லது வன்­மு­றையைத் தூண்டி இன அல்­லது மத வெறுப்பை பரப்­பு­வதைத் தடை­செய்யும் சட்­ட­மாகும்.

15 மாதங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­த­ர­ணியும் செயற்­பாட்­ட­ள­ரு­மான  ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் தமிழ் மொழிக் கவிதை பற்றிய ஆதாரமற்ற கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு 2020 மே மாதம் 16 ஆந் திகதியன்று  கைது செய்யப்பட்ட கவிஞர் மற்றும் ஆசிரியர் அஹ்னாப் ஜசீம் உட்பட தனிநபர்களை இலக்கு வைத்து இந்த சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பான பல சந்தர்ப்பங்களை இந்த  இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.

‘பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கட்டாய தகனங்கள் முதல் நிகாப் மற்றும் மதரஸாக்கள் தடை வரை, இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான அப்பட்டமான பாரபட்சமான கொள்கை நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி வருகிறது. தற்போது பரிசீலனையில் உள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம்  கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,’ எனவும் கைல் வார்ட் தெரித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.