கரங்காவட்டையில் முஸ்லிம்களின் விவசாய காணிகளை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள்

0 240

எஸ்.அஷ்ரப்கான்

அம்­பாறை மாவட்­டத்தின் முஸ்லிம் பிர­தே­சங்­களில் நில ஆக்­கி­ர­மிப்பு சம்­ப­வங்கள் அடிக்­கடி இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளது. அந்த அடிப்­ப­டையில் சம்­மாந்­து­றை-­, வ­ளத்­தாப்­பிட்டி, கரங்­கா­வட்டை விவ­கா­ர­ம் தற்­போ­து பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.
பரம்­பரை பரம்­ப­ரை­யாக அதா­வது கடந்த 60 க்கும் மேற்­பட்ட வருட கால­மாக முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான, அவர்­களால் தொட­ராக விவ­சாயம் செய்து வந்த நூற்­றுக்­க­ணக்­கான ஏக்கர் நிலங்­களை சிங்­க­ள­வர்கள் ஆக்­கி­ர­மிப்பு செய்­வ­தா­கவும் விவ­சாயம் செய்­ய­வி­டாது அத்­து­மீ­று­வ­தா­கவும் அதனை மீட்­டுத்­த­ரு­மாறும் பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரிக்­கை­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

அம்­பாறை – சம்­மாந்­துறை பிர­தேச எல்­லையில் அமைந்­துள்ள வளத்­தாப்­பிட்­டியில் உள்ள முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணி­யான கரங்­கா­வட்டை தற்­போது சிங்­க­ள­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது.

1943 ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்தக் காணியில் முஸ்­லிம்கள் விவ­சாயச் செய்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர் என்­பது வர­லா­றாகும். இப்­போது இந்த காணியில் முஸ்­லிம்கள் கால்­வைக்­க­மு­டி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது என விவ­சா­யிகள் கவலை தெரி­விக்­கின்­றனர்.
விவ­சா­யிகள் 2013 ஆம் ஆண்டு அம்­பா­றையில் நடை­பெற்ற ‘தேசத்­துக்கு மகுடம்’ கண்­காட்­சியின் பின்னர் அந்தக் காணிகள் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து திட்­ட­மிட்டு பறிக்­கப்­பட்­டன. தற்­போது அந்தக் காணிக்குள் அத்­து­மீறி சிங்­க­ள­வர்கள், வேளாண்மைச் செய்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். தொடர்ச்­சி­யாக குறித்த காணியில் சிங்­கள மக்கள் விதைப்­புக்­கான உழவு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
இது­வி­ட­ய­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள் பிர­தேச அர­சி­யல்­வா­திகள் அர­சாங்க அதி­கா­ரிகள் உட்­பட ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கும் தங்­க­ளது பிரச்­சி­னை­களை எடுத்­துக்­கூ­றி­யி­ருந்­தனர்.

இது தொடர்பில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் பண்­டா­ர­நா­யக்கா தலை­மையில் மாவட்ட செய­ல­கத்தில் விவ­சா­யி­களின் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வை காணும் நோக்கில் உயர்­மட்ட கலந்­து­ரை­யா­ட­லொன்றும் அண்­மையில் இடம்­பெற்­றது.
கரங்கா வட்­டையில் விவ­சா­யிகள் விவ­சாயம் செய்­வதில் தடை­யாக இருந்து ஒரு குழு­வினர் அத்­து­மீறி செயற்­பட்­டதை தடுத்து நிறுத்தி நிரந்­த­ர­மான தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கில் இடம்­பெற்ற இந்த கலந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிம், சட்­டத்­த­ரணி முஷாரப் முது­னபின், சம்­மாந்­துறை பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம். நௌஸாத், அம்­பாறை அர­சாங்க அதிபர், அம்­பாறை மேல­திக அர­சாங்க அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர், சம்­மாந்­துறை மற்றும் அம்­பாறை பிர­தேச செய­லா­ளர்கள், விவ­சாய அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் என பலரும் கலந்து கொண்­டனர்.

இங்கு இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் சம்­மாந்­துறை – அம்­பாறை கரங்­கா­வட்­டையில் விவ­சா­யிகள் எவ்­வித தடை­க­ளு­மின்றி விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள் என்றும் அதற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் தான் செய்ய தயா­ராக உள்­ள­தாக அர­சாங்க அதிபர் உறு­தி­ய­ளித்­த­தா­கவும் மேலும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் இவ்­வி­டயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தி பாது­காப்பு ஏற்­பா­டு­களை செய்து கொடுக்க உள்­ள­தா­கவும் யாரையும் அத்­து­மீறி இந்த பிர­தே­சங்­களில் செயற்­பட அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்று உறு­தி­ய­ளித்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.
இக்­க­லந்­து­ரை­யாடல் இடம்­பெற சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் அத்­து­மீ­றி­ய­வர்­க­ளுடன் அம்­பாறை அர­சாங்க அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஆகி­யோரின் பங்­கு­பற்­ற­லுடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் தொடர்ந்தும் அத்­து­மீறும் செயற்­பா­டு­களை செய்தால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன் போது அவர்கள் தொடர்ந்தும் இவ்­வா­றான செயற்­பா­டு­களில் தாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம் என்று அர­சாங்க அதி­ப­ரிடம் உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் அர­சாங்க அதிபர் இக்­கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­க­ளிடம் தெரி­வித்தார்.

ஆனால் இது­வரை எந்த முன்­னேற்­றமும் இல்லை என்றும் ஊட­கங்­க­ளுக்கு அறிக்கை விடு­வ­தி­லேயே அர­சி­யல்­வா­திகள் முதற்­கொண்டு அரச அதி­கா­ரி­களும் குறி­யாக இருக்­கின்­றனர் என்றும் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யிகள் கவ­லை­ தெரி­விக்­கின்­றனர்.
இந்த விவ­காரம் குறித்து பாதிக்­கப்­பட்ட காணி உரி­மை­யாளர் றிஸ்வான் குறிப்­பி­டும்­போது, “எங்­களின் காணி என்­ப­தற்­கான முழு ஆதா­ரமும், உறு­திப்­பத்­தி­ரங்­களும், வரை­ப­டங்­களும் எங்­க­ளிடம் உள்­ளன. இந்த விவ­காரம் தீர்க்­கப்­ப­டாமல் நீடித்தால் இனக்­க­ல­வரம் உரு­வாகும் வாய்ப்பும் கூட ஏற்­ப­டலாம். எனக்கு சுமார் இரண்டு ஏக்கர் காணி அங்கு உள்­ளது. நானும் இங்­குள்ள காணி­க­ளுக்கு சொந்­தக்­கா­ரர்­களும் பரம்­ப­ரை­யாக விவ­சாயம் செய்து வரு­கின்றோம். இப்­போது இவர்கள் எங்­க­ளது காணியை அப­க­ரிக்க முற்­ப­டு­வது முற்­றிலும் அநி­யா­ய­மா­னது. என்ன கூட்டம் போட்டு தீர்­வுகள் எடுத்­தாலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாத நிலையே இந்த சந்­தர்ப்பம் வரை காணப்­ப­டு­கின்­றது.
பிர­தேச மத குரு ஒருவர் குறிப்­பிட்ட சில ஏக்கர் காணி­க­ளில்தான் நீங்கள் விவ­சாயம் செய்­யலாம் என கூறு­கின்றார். 250 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட காணி­க­ளுக்­கு­ரிய அர­சாங்­கத்தின் சகல உறுதி ஆவ­ணங்­களும் எம்­மிடம் இருக்­கின்­றது. இருந்­தாலும் அந்த மத குரு நாங்கள் அவர்­க­ளது காணி­களில் அத்­து­மீ­றி­ய­தாக அரச அதி­ப­ரிடம் கூறு­வ­துடன் எங்­களைக் கைது செய்­யு­மாறும் கூறினார். ஆனால் அரச அதிபர் மற்றும் அதி­கா­ரிகள் எல்லா ஆவ­ணங்­க­ளுடன் இருக்கும் இவர்­களை எவ்­வாறு கைது செய்ய முடியும் எனக்­கூ­றி­யது மன ஆறு­தலைத் தந்­தது. இருந்­தாலும் இது­வரை எமது பிரச்­சி­னைக்கு தீர்வு கிட்­ட­வில்லை என வேத­னை­யுடன் தெரி­வித்தார்.

பாதிக்­கப்­பட்ட மற்­றொரு விவ­சா­யி­யான மீரா­சா­ஹிபு இஸ்­மா­லெப்பை என்­பவர் குறிப்­பி­டும்­போது, “எனக்கும் எனது சகோ­த­ரிக்கும் 4 ஏக்கர் காணி உள்­ளது. எங்கள் தாய் தகப்பன் இவ்­வ­ளவு காலமும் பரா­ம­ரித்து வந்த காணி­களே இவை, காலா­கா­ல­மாக நாம் தான் இதனை பரா­ம­ரித்தும் விவ­சாயம் செய்தும் வரு­கிறோம். இப்­போது வந்து அவர்கள் இவை தமது காணிகள் என உரிமை கோரு­கின்­றனர். இது எமது காணி நீங்கள் வரக் கூடாது என உத்­த­ர­வி­டு­கின்­றனர். அர­வாக்­கத்தி, கோடரி, அரிவாள் கொண்டு வந்து எம்மை விரட்­டு­கி­றார்கள். இது விட­ய­மாக நாங்கள் பொலிசில் முறைப்­பாடு செய்­துள்ளோம். எமக்கு நீதி வேண்டும்” என்றார்.

பாதிக்­கப்­பட்ட மற்­றொரு காணி உரி­மை­யாளர் எம்.எப். றஜாய் கூறு­கையில், “ இது எங்கள் மூத்த வாப்­பாவின் காணி. அவர் அதனை எங்­க­ளு­டைய உம்­மா­வுக்கு வழங்­கினார். இப்­போது உம்மா சுக­யீனம் கார­ண­மாக வீட்டில் இருக்­கிறார். அதனை நான் பரா­ம­ரித்து வரு­கிறேன். 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக இந்த காணியை நாம் பரா­ம­ரித்து வரு­கிறோம். என­வேதான் இந்த காணியை சிங்­கள ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீட்டுத் தரு­மாறு உயர் அதி­கா­ரி­களை கேட்­டுக்­கொள்­கின்றேன். இது தொடர்பில் அம்­பாறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்தும், அவர்கள் இது தொடர்பில் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. இந்தப் பார­தூ­ர­மான விடயம் தொடர்பில் அம்­பாறை மாவட்ட அர­சி­யல்­வா­திகள் எவரும் உரிய முறையில் கவ­னத்தைச் செலுத்­தா­மையே தங்­க­ளது காணிகள் பறி­போ­வ­தற்­கான பிர­தான காரணம். இவர்கள் கலந்­து­ரை­யா­டி­னாலும் எமக்கு சாத­க­மான எந்த தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை என்­பது கவ­லை­யாக உள்­ளது.

எங்­களின் காணிக்குள் நாங்கள் சென்று வேளாண்­மைக்கு தயா­ராகும் சந்­தர்ப்­பங்­களில் சிங்­கள மக்கள் மண்­வெட்டி, கத்தி, கரும்­ப­றுக்கும் இயந்­தி­ரங்­களை கொண்டு எங்­களைத் தாக்க வரு­கி­றார்கள்” என்றார்.

இலங்­கையின் நாலா­பு­றங்­க­ளிலும் ஆங்­காங்கே சிறு­பான்­மை­களின் காணிகள் மீது அத்­து­மீறும் இந்த நிலை மாற்­றப்­பட வேண்டும். அதற்­காக அர­சி­யல்­வா­திகள் முயற்­சி­களை மேற்­கொண்­டாலும் அம்­மு­யற்சி போதாது என்­பதே பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கருத்­தாகும். பௌத்த தேரர் இங்கு தலை­யி­டு­வதன் ஊடாக இது இன, மத ரீதி­யான பிரச்சினையாக மாற்றப்பட்டு வன்முறைகள் தோற்றம் பெறலாம் எனும் அச்சம் நிலவிவருகிறது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கின்ற போதிலும் அவர்களது நடவடிக்கைகளில் மக்கள் பூரண திருப்தி கொள்ளவில்லை என்பது தெரிகிறது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்துள்ள போதிலும் அங்கு சிங்கள காணி ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல் தொடர்வதாகவே பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இந்த விவகாரம் காரணமாக தாம் தமது காணிகளுக்குள் செல்லும் போது தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என்ற நியாயமான அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

எனவேதான் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மீட்க அரசியல்வாதிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் மிகவும் கரிசனையோடு செயற்பட வேண்டும். அதன் மூலமே கரங்காவட்டை காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.