மொஹமட் அர்மாஷ் பெளத்தம், சிங்­களம் உட்­பட ஒன்பது பாடங்­க­ளிலும் ‘ A’ சித்தி

0 356

(ஏ.ஆர்.ஏ.பரீல், பி.எம்.முக்தார்)
அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட கல்­விப்­பொதுத் தரா­தர சாதா­ரண பரீட்சை பெறு­பே­று­க­ளின்­படி அளுத்­கம, தர்­கா­நகர், லோட்டஸ் வீதியில் வதியும் மொஹமட் ரிப்கான் மொஹமட் அர்மாஷ் பெளத்த தர்மம் மற்றும் சிங்­களம் உட்­பட 9 பாடங்­க­ளிலும் ‘A’ சித்­தி­களைப் பெற்­றுள்ளார்.

தனது ஆரம்­பக்­கல்­வியை அளுத்­கம மகா­வித்­தி­யா­ல­யத்தில் பெற்­றுக்­கொண்ட இவர், தற்­போது கொழும்பு லும்­பினி மகா­வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயல்கிறார். லும்­பினி மகா­வித்­தி­யா­ல­யத்­தி­லி­ருந்தே இவர் பரீட்சை எழு­தினார்.

இவர் தனது சிறந்த பெறு­பேறு தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில் எனது வெற்­றியில் என்­னுடன் நிழ­லாக இருந்து உற்­சாகம் தந்த எனது பெற்றோர், எனது வகுப்­பா­சி­ரியர் கெட்­ட­மானே திஸ்­ஸ­தேரர், அதிபர் பிரி­யந்த கரு­ணா­ரத்ன உட்­பட அனைத்து ஆசி­ரி­யர்­க­ளுக்கும் நன்றி பாராட்­டு­கின்றேன். நினைவு கூறு­கிறேன்.

எனது தந்தை தர்கா நகர் நாகந்­த­ல­கொட ஸ்ரீ ஞானிஸ்­ஸர மகா­வித்­தி­யா­ல­யத்தில் சிங்­கள மொழியில் பயின்று உயர்­தரப் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்தார். தனது படிப்பு பற்றி தந்தை அடிக்­கடி நினை­வு­ப­டுத்­துவார். அதை செவி­ம­டுத்து அவ­ரைப்போல் கல்­வி­கற்க எனக்கு ஆசை­யேற்­பட்­டது. ‘முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரை அளுத்­கம மகா­வித்­தி­யா­ல­யத்தில் கற்று 5 ஆம் தரபுலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியெய்தி லும்பினி மகாவித்தியாலயத்தில் இணைந்து கொண்டேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.