முஸ்லிம் தனியார் சட்டத்தை அகற்ற இடமளிப்பதில்லை

எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் தீர்மானம் ஹக்கீம் தலைமையில் குழு நியமனம்

0 322

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் சம­கா­லத்தில் நிலவும் சர்ச்­சை­க­ளுக்கு தீர்வு காண்­பது குறித்து எதிர்க் கட்­சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற இச்­சந்­திப்பின் போது எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், ரிஷாட் பதியுதீன் எஸ்.எம்.மரிக்கார், இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்­டனர்.

இதன்­போது அமைச்­ச­ர­வையில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்­தங்கள், குறிப்­பாக காதி நீதி­மன்றம் மற்றும் பல­தார மணத்தை இல்­லா­தொ­ழித்தல் தொடர்­பான விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது முஸ்லிம் தனியார் சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்றும் முக்­கி­ய­மான அம்­சங்­களைப் பாது­காத்­த­வாறு, தேவை­யான திருத்­தங்­களை மாத்­திரம் மேற்­கொள்­வ­தற்­கான இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்­கான தீவிர முயற்­சி­களில் ஈடு­ப­டு­வது என்றும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதற்­கென எதிர் அணி சார்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது. இதன் ஏற்­பாட்­டா­ள­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்து கொண்டு அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும், நீதியமைச்சர் அலி சப்ரியையும் அரசு தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களையும் சந்­தித்து பேசு­வது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று இலங்­கையில் உள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­களை சந்­தித்து பேசு­வது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் முஸ்லிம் சிவில் அமைப்­புகள், இந்த விவ­கா­ரத்தில் ஆர்­வத்­துடன் செயற்­படும் சிரேஷ்ட முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள், முஸ்லிம் பெண் உரி­மை­க­ளுக்­கான அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரைச் சந்­தித்தும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தரப்புகள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.