ஞானசார தேரரின் கருத்து முஸ்லிம்களை நிந்திக்கிறது

வன்மையாக கண்டிக்கிறோம் என்கிறது உலமா சபை

0 291

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் “சூத்­தி­ர­தாரி அல்லாஹ்” என ஞான­சா­ர­தேரர் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் இலங்கை முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மல்ல முழு உலக முஸ்­லிம்­க­ளையும் நிந்திப்­ப­தாகும். இதனை நாம் வன்­மையாகக் கண்­டிக்­கின்றோம். குர்ஆன் வசனம் இறக்­கப்­பட்ட காலம், சூழலை புரிந்து கொள்­ளாது மொழி பெயர்­ப்பினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அல்­லாஹ்வை நிந்­தித்­தமை முஸ்­லிம்­களை துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது என அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபை பொது­பல சேனா அமைப்பின் ஊட­கப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கைக்கு பதில் வழங்­கி­யுள்­ளது.
அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்க்கம் நூரா­மித்தின் கையொப்­பத்­துடன் கூடிய அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; அண்­மையில் ஊடக மாநா­டொன்றில் ஞான­சா­ர­தேரர் தெரி­வித்த மதத்­தினை அவ­ம­திக்கும் கருத்­துக்கள் தொடர்பில் பொது­பல சேனா அமைப்பு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யினால் நாம் பெரிதும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்ளோம். குறிப்­பிட்ட ஊடக மாநாட்டில் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் மிகவும் மோச­மாக மத நிந்­தனை செய்­துள்ளார். அவர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் “சூத்­தி­ர­தாரி அல்லாஹ்” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

ஞான­சா­ர­தே­ரரின் இந்தக் கருத்து இலங்கை முஸ்­லிம்­களை அவமதிப்பது மாத்­தி­ர­மல்ல முழு உல­கிலும் வாழும் சுமார் இரண்டு பில்­லி­ய­னுக்கும் மேலான முஸ்­லிம்கள் மீது சுமத்­தப்­பட்ட அவ­மா­ன­மாக நிந்­த­னை­யா­கவே நாம் கரு­து­கிறோம். பின்பு இந்த மோச­மான அவ­ம­திப்பு தொடர்­பாக எது­வித கார­ணங்­க­ளு­மின்றி அல்­குர்­ஆனின் 8:30 வச­னத்தைக் குறிப்­பிட்டு விப­ரிப்­பது எவ்­வி­தத்­திலும் அடிப்­ப­டை­யற்­ற­தாகும்.

இந்த பார­தூ­ர­மான கருத்­தினை வெளி­யி­டு­வ­தற்­காக குறிப்­பிட்ட மத குரு சிங்­கள மொழி­பெ­யர்ப்­பொன்­றி­னையே கையாண்­டுள்ளார். அவர் தேர்ந்­தெ­டுத்த அல்­குர்ஆன் வசனம் தொடர்­பான விவ­ர­ணக்­கு­றிப்­பினை அவர் வாசித்­தி­ருந்தால் இவ்­வா­றான பிரச்­சி­னைக்­கு­ரிய பர­ப­ரப்­பான கருத்­தினை வெளி­யிட்­டி­ருக்­க­மாட்டார்.

நாட்டின் இலக்­கிய கிரந்­தங்­களை எடுத்­துக்­கொண்டால் முதற் பிர­தியின் பொருள் பொது­மக்­க­ளுக்கு விளங்கிக் கொள்ள முடி­யாமல் இருப்­ப­த­னாலே விவ­ரண நூல்கள் வெளி­வ­ரு­கின்­றன. மகா­வங்ச கிரந்­தத்­துக்கும் விவ­ரண நூல் எழு­தப்­பட்­டுள்­ளது.
சிங்­கள மொழி­யி­லான காவி­யத்தின் கவி­தை­யொன்­றி­னது பொருளை சாதா­ரண மொழியில் விப­ரிப்­ப­தற்கு முன்பு அது என்ன கவிதை? அதன் கவி­ஞர்யார், கவி­ஞரின் இலக்கு என்ன? அந்தக் கவி­தைக்கு முன்­னைய கவிதை எது? அந்­தக்­க­வி­தைக்கும் இந்தக் கவி­தைக்­கு­முள்ள தொடர்பு என்ன? என்­பதை ஆராய்ந்து தேடிப்­பார்த்து தெளி­வான கட்­டு­ரை­யொன்­றினை எழு­து­வற்கு பாட­சாலை மாண­வர்­க­ளுக்­குக்­கூட தெரியும்.

அல்­லாஹ்­வினால் இறக்­கப்­பட்ட புனித குர்ஆன் வச­னங்கள் தொடர்­பாக கருத்து வெளி­யி­டு­வ­தற்கு முன்பு அந்த வசனம் இறக்­கப்­பட்ட சூழ­லையும் கருத்­திற்­கொள்­ளாது மாற்­ற­மான திரி­புபட்ட கருத்­துக்­களை வெளி­யி­டு­வது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்.

அல்­குர்ஆன் வசனம் 8:30 இறக்­கப்­பட்ட காலம் மக்கா வாசிகள் முஹம்­மது நபி­ய­வர்­களை கொலை செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு சூழ்ச்­சி­களை பின்­ன­ணி­யாகக் கொண்­ட­தாகும். என்­றாலும் அல்லாஹ் நபி­ய­வர்­களை இந்த சூழ்ச்­சி­க­ளி­லி­ருந்தும் பாது­காத்தான் என்­பதே இந்த குர்ஆன் வச­னத்தின் நோக்­க­மாகும். மக்­கா­வா­சி­களின் சூழ்ச்­சியை தோற்­க­டிப்­பது திட்­ட­மிட்ட ஏற்­பாடு ஒன்­றல்­லவா?

இந்த அல்­குர்ஆன் வசனம் இறக்­கப்­பட்­டது என்ன கார­ணத்­துக்­காக? யாருக்­காக இறக்­கப்­பட்­டது? இந்த குர்ஆன் வசனம் இறக்­கப்­பட்ட சூழலைப் புரிந்து கொள்ளாது, தான் அறியாதமொழியில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனத்துக்கு ஞானசாரதேரர் இவ்வாறான அவமதிப்பு செய்துள்ளமை தொடர்பில் நாம் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

சமயத் தலைவர் ஒருவர் முக்கியமான கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்பு அது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.