உள்வீட்டு இரகசியங்களை பகிரங்கப்படுத்துவது துரோகமாகும்

0 412

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

அல்­குர்­ஆனில் அல்லாஹ் சூரா மும்­த­ஹ­னாவின் ஆரம்ப வச­னங்­களில் மதீ­னாவில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­பவம் ஒன்று பற்றி குறிப்­பி­டு­கிறான்.

ஹாதிப் இப்னு அபீ பல்­தஆ (ரழி) என்ற நபித்­தோழர் மக்­கா­வி­லி­ருந்து மதீனா வந்­தி­ருந்த ஒரு பெண்­ணு­டைய கையில் நபி­ய­வர்­க­ளு­டைய திட்­ட­மொன்று பற்­றிய தக­வலை உள்­ள­டக்­கிய கடிதம் ஒன்றை எழுதி மக்­கா­வா­சி­க­ளுக்கு கொடுக்கும் படி கொடுத்து அனுப்­பினார். அப்பெண் வழியில் போய்க் கொண்­டி­ருந்த போது அக்­க­டிதம் நபி­ய­வர்­களால் அனுப்­பப்­பட்ட சில நபித் தோழர்­களால் கைப்­பற்­றப்­பட்­டது. இந்த ஸஹா­பியின் நட­வ­டிக்­கையை அல்லாஹ் கடு­மை­யாக எச்­ச­ரித்தான்.

அல்­லாஹ்­வி­னதும் அவ­னது தூத­ரதும் எதி­ரி­களை நேசத்­துக்கும் விசு­வா­சத்­துக்கும் உரி­ய­வர்­க­ளாக எடுத்துக் கொள்­ளக்­கூ­டாது என்று அந்த சூராவின் ஆரம்ப வச­னங்கள் எச்­ச­ரிக்­கின்­றன. முஸ்­லிம்கள் நிரா­க­ரிப்­பா­ளர்­க­ளாக மாற வேண்டும் என்று அவர்கள் விரும்­பு­வ­தா­கவும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அவர்கள் போராடும் அதே நேரம் மோச­மான வார்த்­தை­களை பேசு­வ­தா­கவும் கூறு­கின்றான். அப்­ப­டி­யான நிரா­க­ரிப்­பா­ளர்­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தின் தக­வல்­களை நகர்த்­து­வது பாரிய குற்றம் என்­பதை இந்த வச­னங்கள் உணர்த்­து­கின்­றன.

மதீ­னாவில் ரசூல் (ஸல்) அவர்கள் தனது சஹா­பாக்­க­ளுடன் இருந்த பொழுது பேசிக்­கொண்ட சில முக்­கி­ய­மான கருத்­துக்­களை ஒரு நபித்­தோழர் -தனது சில தனிப்­பட்ட இலா­பங்­க­ளுக்­காக – மக்­கா­வி­லுள்ள குறை­ஷி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்தும் நோக்கில் மேற்­கொண்ட இந்த முயற்சி பயங்­க­ர­மான குற்றம் என்­பதை அல்லாஹ் சொல்லிக் காட்­டு­கிறான். இது ஒரு விரி­வான சம்­ப­வ­மாகும்.

எனவே மிகவும் பார­தூ­ர­மான, வெளிப்­ப­டுத்தக் கூடாது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்கும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­து­வது மிகப் பெரிய துரோகம் மட்­டு­மல்ல பாவ­மாகும்.
இரு நபர்­க­ளுக்கு இடையில் இடம்­பெறும் உரை­யாடல், கணவன் மனை­விக்­கி­டை­யி­லான தாம்­பத்­திய உறவு, ஒரு கூட்­டத்தில் இடம்­பெறும் கலந்­து­ரை­யாடல் போன்ற இவை அனைத்தும் ரக­சி­ய­மாக தனிப்­பட்ட முறையில் பேணப்­பட வேண்­டிய தக­வல்­க­ளாகும். அவற்றை பாது­காக்­காமல் விடு­வது அல்­லது மற்­றொரு நப­ருக்கு சொல்­வது சமூ­கத்தில் பயங்­க­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் அதே நேரம் மனதில் கவ­லை­யையும் ஆத்­தி­ரத்­தையும் இனங்­க­ளுக்கும் தனி­ந­பர்­க­ளுக்கும் இடை­யி­லான உறவு விரி­சல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும்.

நபி(ஸல்) கூறி­னார்கள்:- “ஒருவர் இன்­னொ­ரு­வ­ரோடு ஒரு செய்­தியைப் பேசி­விட்டு திரும்பிப் பார்த்தால் அது அமானத் ஆகும்” (அபூ­தாவூத் – 4868)
இதற்கு இமாம் முனாவி (ரஹ்) விளக்­க­ம­ளிக்கும் போது: தக­வலைப் பகிர்ந்த அந்த நபர் அந்த மஜ்­லிஸில் இருந்து சென்­று­விட்­டாலோ அல்­லது வல­மா­கவோ இட­மா­கவோ திரும்பிப் பார்த்­தாலோ அவர் பேசிய விட­யங்­களை அவர் யாரோடு பேசி­னாரோ அவரைத் தவிர வேறு எவரும் தெரிந்­து­கொள்­ளா­தி­ருக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்­கிறார் என்­ப­தற்­கான அடை­யா­ளங்கள் அவ­ரி­ட­மி­ருந்து வெளிப்­பட்டால் அவர் பேசி­யவை அமா­னத்­தாகும். யாருடன் அவர் பேசி­னாரோ அவ­ரிடம் அதனை அடைக்­க­ல­மாக ஒப்­ப­டைத்­தி­ருக்­கிறார் என்­ப­தனால் வேறு எவ­ரு­டனும் அவர் அதனைப் பகிர்ந்து கொண்டால் அல்­லாஹ்வின் கட்­ட­ளைக்கு அவர் மாறு­செய்­த­வ­ராவார். தனக்கு தரப்­பட்ட அமா­னி­தத்தை பொருத்­த­மற்­ற­வ­ரிடம் கொடுத்­த­தாக அது அமையும். அநி­யா­யக்­கா­ரர்­களில் ஒரு­வ­ராக அவர் மாறு­கிறார். எனவே அதனை அவர் மறைக்க வேண்டும். அவர் திரும்பிப் பார்த்­ததன் மூலம் அதனை வேறு யாரு­டனும் பேச வேண்டாம் என அவரை வேண்­டிக்­கொண்­ட­தாக கருத வேண்டும்.

நபி­ய­வர்கள் சொற்­சு­ருக்­கத்­துடன் இங்கு கூறி­யுள்­ளார்கள். மனி­தர்­க­ளுடன் பழகும் முறைகள், நட்பின் ஒழுங்­குகள், இர­க­சி­யங்­களை மறைப்­பது, அன்பை பாது­காப்­பது போன்ற விட­யங்­க­ளையும் சகோ­த­ரர்­க­ளுக்­கி­டையே பகை­மையைத் தோற்­று­விக்கும் கோள் சொல்­வதை எச்­ச­ரிக்கும் வகை­யிலும் இந்த ஹதீஸ் அமைந்­துள்­ளது. (ஃபைளுல் கதீர் 1/325)

மேலும் நபி­களார் (ஸல்) அவர்கள்:- “மஜ்­லிஸ்கள் அமா­னி­தத்­தோடு கூடி­ய­வை­யாகும். (அங்கு பேசப்­படும் தக­வல்கள் வெளியே சொல்­லப்­படக் கூடா­தவை) ஆனால், மூன்று விவ­கா­ரங்கள் அங்கு பேசப்­ப­டு­மாக இருந்தால் அவற்றைத் தவிர.
அநி­யா­ய­மாக ஒரு­வரை கொலை செய்­வது பற்­றிய தகவல்
சட்­டத்­துக்கு புறம்­பாக உட­லு­றவு கொள்­வது பற்­றிய தகவல்
ஒரு­வ­ரது சொத்தை எவ்­வித உரி­மையும் இன்றி அப­க­ரித்துக் கொள்­வது பற்­றிய தகவல்(ஹதீஸ் ஹஸன்)

மேற்­படி நபி­மொ­ழிகள் பயங்­க­ர­மான குற்­றங்கள் தொடர்­பான தக­வல்கள் ஓரி­டத்தில் பகி­ரப்­ப­டு­மாயின் சமூ­கத்தின் நலன் கருதி அதனை அந்த சபைக்கு அப்பால் நகர்த்­து­வதில் தவறு கிடை­யாது என்­பதை நபி­ய­வர்கள் உணர்த்­து­கி­றார்கள். முதலில் அது பற்றி உரி­ய­வ­ருக்கு எச்­ச­ரித்த பின்­னரும் கூட அவர் அது விட­ய­மாக கவ­ன­மாக நடக்­காத போது இவ்­வாறு சபைக்கு வெளியே தேவைப்­படும் நபர்­க­ளோடு மாத்­திரம் அதனைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

இங்கு கூறப்­பட்­டுள்ள மூன்று விட­யங்­களும் சமூ­கத்தை அழிப்­ப­தா­கவும் அத்­து­மீ­ற­லா­கவும் அமை­வ­தனால் அது பற்றி மௌனம் சாதிக்க கூடாது என்­பதும் உணர்த்­தப்­ப­டு­கி­றது. ஆனால் ஒரு சபையில் மட்டும் உள்­ள­வர்­க­ளோடு தொடர்­பான, பாவ காரி­யங்­க­ளோடு சம்­பந்­தப்­ப­டாத தக­வல்கள் சபை­யோடு வரை­ய­றுக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் அதற்­கப்பால் நகர்த்­து­வது மோச­மான துரோகம் என்­ப­தையும் இந்த ஹதீஸ் காட்­டு­கி­றது.

மேலும் ஒரு தடவை நபி­ய­வர்கள்: “ஒருவர் தனது மனை­வி­யோடு தாம்­பத்­திய உறவை மேற்­கொள்­கிறார். அவளும் அவ­ரோடு அவ்­வாறு ஈடு­பட்ட பின்னர் அவ­ளு­டைய ரக­சி­யத்தை வெளிப்­ப­டுத்­து­பவர் மறு­மையில் அல்­லாஹ்­வி­டத்தில் மிக மோச­மான அந்­தஸ்­துள்ள ஒரு மனிதர் ஆவார்” (ஸஹீஹ் முஸ்லிம்- 1437) எனக்­ கூ­றி­னார்கள்.
எனவே இஸ்­லாத்தில் உரை­யா­ட­லுக்கும் சபை நட­வ­டிக்­கை­க­ளுக்கும் மிக அழ­கான ஒழுக்­கங்கள் சொல்லித் தரப்­பட்­டுள்­ளன. சபையில் தனிப்­பட்ட முறையில் இரண்டு பேருக்கு இடையில் பேசப்­படும் தக­வல்கள் அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக இருப்பின் அவற்றை அந்த வட்­டத்­துக்கு அப்பால் பகிர்­வது பல­வ­கை­யான பாத­க­மான, மோச­மான பின் விளை­வு­களை ஏற்­ப­டுத்தி, சமூக கட்டுக் கோப்­பையும் உடைத்­து­விடும்.
எனவே சபையின் இர­க­சி­யங்­களைப் பேணு­வது, தலை­மைக்கு கட்­டுப்­ப­டு­வது, நண்­பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் அந்­த­ரங்­கங்­களை பாது­காப்­பது என்பன இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.