கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்­ய மஜ்மா நகரில் இடப்பற்றாக்குறை இல்லை

பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்

0 332

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தொடர்ந்தும் நல்­ல­டக்கம் செய்­வதில் எவ்­வித பிரச்­சி­னை­யு­மில்லை. மைய­வா­டிக்கு தேவை­யான காணி­யினை நான் பெற்றுக் கொடுத்­துள்ளேன். நான் அபி­வி­ருத்தி குழுவின் தலை­வ­ராக இருக்கும் வரை மைய­வா­டிக்கு தேவை­யான காணி­களை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள நட­வ­டிக்கை எடுப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் அஹமட் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் கொவிட் 19 மைய­வாடி தொடர்பில் விளக்­கங்கள் கோரிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியின் பாதை உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­காக அர­சாங்கம் 68 மில்­லியன் ரூபாவை ஒதுக்­கி­யுள்­ளது. இதற்கு நிதி­ய­மைச்சர் பஷில் ராஜ­பக்ஷ அனு­மதி வழங்­கி­யுள்ளார். விரைவில் பாதை உட்­கட்­ட­மைப்பு பணிகள் ஆரம்­பிக்­கப்­படும்.

புதி­தாக மைய­வா­டிகள் இனங்­கா­ணப்­பட்டால் அதற்­கான உட்­கட்­ட­மைப்பு வச­திகள் பாதை வச­தி­களை அமைப்­ப­தற்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நிதி­யினைப் பெற்­றுக்­கொள்ள முடியும். அந்த வகையில் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்­கான பாதை உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு 68 மில்­லியன் ரூபா அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட் 19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான காணி­களை பெற்றுக் கொடுப்­பது எனது பொறுப்­பாகும். அதனால் மக்கள் இது தொடர்பில் கவலை கொள்ளத் தேவை­யில்லை. ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடி­யாமற் போகுமோ எனப் பயப்­ப­டா­தீர்கள். அல்­லாஹ்வின் உத­வி­யினால் நான் அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் மேற்கொள்வேன்’ என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.