ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி மெய்ஞான அருள்வாக்கி

0 612

ஏ.ஜே. காஷிபா பர்வின்
BA (Hons) in History
பேராதெனிய பல்கலைக்கழகம்

19ஆம் நூற்­றாண்டில் கால­னித்­துவ ஆட்­சிக்குள் சிக்­குண்­டி­ருந்த ஆசிய, ஆபி­ரிக்க நாடுகள் பல­வற்­றிலும் தத்தம் சம­யங்கள் மற்றும் கலா­சா­ரங்­களைப் புத்­து­யிர்ப்­பிக்கும் நோக்கில் பல அறி­ஞர்கள், படைப்­பா­ளிகள், கலை­ஞர்கள் என பல மேதைகள் தோன்றி பங்­க­ளித்து காலத்தால் அழி­யாத புகழ் பெறும் வரம் பெற்­றுள்­ளனர். அந்த வரி­சையில் 19ஆம் நூற்­றாண்டின் இரு கடைத் தசாப்­தங்­களில் ஈழத்து இஸ்­லா­மிய இலக்­கியத் தமிழ் வரி­சையில் அறிஞர் சித்தி லெப்பை போலவே பேசவும் போற்­றவும் பட வேண்­டிய மேதையே அருள்­வாக்கி அல்லா பிச்சை அப்துல் காதிர் புலவர் ஆவார்.

பலரும் இவர் குறித்து இவர் யார்? என கேள்வி எழுப்பும் சம­கால சூழலில் அவ­ரது நினைவு நாளான பிறந்த நாளை­யொட்டி இக்­கட்­டுரை வரை­யப்­ப­டு­வதில் தெல்­தோட்டை மீடியா குழுமம் சார்­பாக பேரு­வகை கொள்­கிறோம். ஈழத்து இஸ்­லா­மிய இலக்­கி­யத்தின் கொடு­முடி என போற்­றப்­படும் அருள் வாக்கி அப்துல் காதிருப் புலவர் மலை­ய­கத்தின் தலை நகராய்த் திகழும் கண்டி மாந­கரின் தென் திசையில் 36 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள தெல்­தோட்­டையின் வீர­புரி எனப்­படும் தற்­போ­தைய போப்­பிட்­டியில் 1866 ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அல்­லாப்­பிச்சை ராவுத்தர் மற்றும் ஹவ்வா எனும் இந்­திய வம்­சா­வளி தம்­ப­தி­யி­னரின் புதல்­வராய்ப் பிறந்தார். நான்கு சகோ­த­ரர்கள் மற்றும் நான்கு சகோ­த­ரி­க­ளுடன் பிறந்த புலவர் தந்தை வழியில் இந்­திய வம்­சா­வ­ழி­யி­ன­ரா­கவும் தாய் வழியில் வெத முகாந்­திரம் மாமு நெய்னார் வைத்­திய தில­கத்தின் வம்சா வழி­யி­ன­ரா­கவம் அடை­யாளம் காணப்­ப­டு­கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
புலவர் தமது ஆரம்பக் கல்­வியை 1870- களில் போப்­பிட்­டிய இஸ்­லா­மிய மார்க்கக் கல்வி போதிக்கும் மத்­ர­ஸா­விலும், தமிழ் வித்­தி­யா­ல­யத்­திலும் கற்றுத் தேர்ந்­த­துடன் கண்­டி­யி­லுள்ள குயின்ஸ் எக­டெ­மி­யிலும் கல்வி கற்­றுள்­ள­தாக ஆவணச் சான்­றுகள் சான்று பகர்­கின்­றன. 1877 முதற் கொண்டு இலக்­கி­யத்தின் மீதி­ருந்த தனது காதலை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கிய அறிஞர் 1881 களில் யாழ்ப்­பா­ணத்தில் அருள் வாக்கி எனும் பட்டம் சூட்­டப்­பட்டு கௌர­விக்­கப்­பட்டார். புல­வரின் இலக்­கி­யத்தின் மீதான ஆர்­வத்தை இனங்­கண்டு கொண்ட அவ­ரது தந்தை அ.பி ராவுத்தர் உயர்­கல்­விக்­காக புல­வரை இந்­தி­யா­வி­லுள்ள திருப்­பத்தூர் தமிழ் வித்­தி­யா­ல­யத்­திற்கு அனுப்­பினார். அங்கு தமிழ் இலக்­கியம் கற்றுத் தேர்ந்த அருள்­வாக்கி ஈழத்து இஸ்­லா­மிய தமிழ் உல­கிற்கு அன்று முதல் பங்­காற்றத் தொடங்­கினார் எனலாம்.

அவ்­வ­கையில் புலவர் குறித்த தெளி­வா­னதும் சுருக்­க­மா­ன­து­மான வர­லாற்றுப் பார்­வையைச் செலுத்­து­வது சாலப் பொருத்­த­மாக அமையும். ஈழத்து இஸ்­லா­மிய இலக்­கிய மரபு மற்றும் பிற இலக்­கிய மர­பு­க­ளுக்கு கால­னிய ஆட்­சியின் 1880-–1930 வரை­யான கால கட்டம் மிக முக்­கி­ய­மான கால­கட்­ட­மாகத் திகழ்­கி­றது. குறிப்­பாக இக்­கால கட்­டத்தில் 1918 வரை தனது பணி­யினை அருள்­வாக்கிப் புலவர் செய்­துள்­ள­மையைக் காணலாம். முற்­றிலும் இலக்­கிய மரபு பேணி இலக்­கியம் படைக்கும் ஆற்­றலைக் கொண்­டி­ருந்த புலவர் நவீ­னத்தைப் புறக்­க­ணித்துப் பின்னர் இடைக்­கால இஸ்­லா­மிய மரபில் உறு­தி­யாகக் காலூன்றி நின்ற அதன் இறுதி தலை­மு­றையின் முக்­கி­ய­மான ஆளு­மை­யாக இஸ்­லா­மிய இலக்­கிய மரபில் அடை­யாளம் காணப்­ப­டு­கிறார்.
இந்த பின்­பு­லத்தில் அருள்­வாக்கி குறித்த தேடலை முன்­னெ­டுத்துச் செல்லும் பொழுது முஹம்மத் நபி (ஸல்) அவர்­களைப் புகழ்ந்து பாடிய காசிம் புல­வரை அடி­யொட்டிப் பாடிய சந்தத் திருப்­புகழ் அவ­ரது இஸ்­லா­மிய உல­கிற்­கான முதல் இலக்­கிய அடை­யா­ள­மாக நோக்­கப்­ப­டு­கி­றது. அதன் ஓரிரு வரி­களை இங்கு குறிப்­பி­டு­வது பொருத்­த­மாக அமையும் என நினைக்­கிறேன்.

கொத்­துற்­றம லர்த்துற் றிய­குழ
லிச்­சைக்­கெழு பொட்டிட் டொளிர்­நுதல்
கொட்­டத்­தினு ரைத்துப் பரி­மள முயர்­சேலை….
குறிப்­பாக இப்­பா­டல்கள் 15ஆம் நூற்­றாண்டின் பின் தமிழில் மேலோங்­கி­யி­ருந்த சிற்­றி­லக்­கிய மர­பிலும் அருள்­வாக்கி பெற்­றி­ருந்த ஆழ்ந்த ஞானத்தை எடுத்­துக்­காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

அந்த வரி­சையில் தொடர்ச்­சி­யா­கவே ஈழத்து இஸ்­லா­மிய ஆன்­மி­கத்­துறை மரபின் வளர்ச்­சிக்கும் அருள் வாக்­கியின் பங்­க­ளிப்­புகள் பெரு­ம­ளவில் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக சம காலத்தில் மேலோங்­கி­யி­ருந்த சூபித்­துவ ஆன்ம நெறியில் பெரு­மு­னைப்பு காட்­டி­யுள்ள இவர் காதி­ரிய்யா தரீக்கா நெறி­யிலும் அதிக ஈடு­பாடு கொண்­டி­ருந்­த­தாக அறிய முடி­கி­றது. அதைப் பறை சாற்றும் வித­மாக புல­வரின் சகல நூல்­களும் இஸ்­லா­மிய ஆன்­மிகம் பற்­றி­ய­தா­கவும், அல்­லாஹ்­வையும், முஹம்மத் (ஸல்) அவர்­க­ளையும் புகழ்­ப­வை­யா­கவும், வலி­மார்­களைப் பாடு­வ­தா­க­வுமே அமையப் பெற்­றுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த வகையில் இஸ்­லா­மிய தமிழ் இலக்­கி­யத்தின் முக்­கி­ய­மான தூண்­களுள் ஒரு­வ­ராகக் கொண்­டா­டப்­ப­டவும், நினைவு கூறப்­ப­டவும் வேண்­டிய ஆளு­மையே அருள்­வாக்கி அப்துல் காதிருப் புலவர் என்­பதை இன்­றைய தலை­மு­றை­யினர் அறிந்து கொள்ள இந்­நி­னைவுப் பேரு­ரையும் கள­ம­மைத்துக் கொடுக்கும் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கள் இல்லை எனலாம்.

மிக முக்­கி­ய­மாக புல­வரின் இஸ்­லா­மிய இலக்­கியத் தொண்­டுகள் சில­வற்றை அவரின் ஆளு­மைக்­கு­ரிய எடுத்துக் காட்­டு­க­ளாக இக்­கட்­டு­ரையில் குறித்துக் காட்­டு­வது சிறப்­பா­ன­தாக அமையும். அது குறித்துக் கவனம் செலுத்­து­கையில் தன்­பீகுள் முரீதீன் எனும் புல­வரின் உரை­நடை நூல் இஸ்­லா­மிய சமூ­கத்தின் மீதான அக்­க­றைக்குச் சிறந்த எடுத்துக் காட்­டாகும். அதா­வது 1897இல் அறிஞர் சித்தி லெப்­பையின் அஷ்­ரானுல் ஆலம் என்ற நூலுக்கு பல­ராலும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்ட வேளை, அவற்றை மறுத்து சமூ­கத்தின் மறு எழுச்சி அல்­லது புத்­தெ­ழுச்­சியின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் வகையில் சித்தி லெப்­பையின் இஸ்­லா­மியப் பணி­க­ளுக்குத் துணை நின்­ற­மைக்குச் சான்­றா­கவும் இப்­புத்­தகம் வரை­யப்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது.

இந்­நூலின் ஊடாகப் புலவர் சம­கா­லத்தில் இஸ்­லா­மிய சமூ­கத்தின் மத்­தியில் சில முல்­லாக்­களால் கடு­மை­யாகப் பின்­பற்றப் பட்ட மார்க்க விட­யங்கள் எனும் மூட நம்­பிக்­கை­களை களைந்து ஞான ஒளி பாய்ச்ச அறிஞர் சித்தி லெப்­பைக்குப் பக்க பல­மாக நின்று உழைத்­துள்­ள­தையும் எம்மால் அறிய முடி­கின்­றது. அந்த வகையில் தன்­பீகுள் முரீதீன் என்னும் நூலை இயற்­றமிழ் வசன நடைக்கு மாற்ற நூலா­சி­ரி­ய­ருக்குப் புலவர் உத­வி­யுள்­ள­மை­யா­னது அருள்­வாக்­கியின் இஸ்­லா­மிய ஆன்­மிகக் கருத்­தா­ட­லுக்குச் சிறந்த எடுத்துக் காட்­டாகும்.

இஸ்­லா­மிய ஆன்­மீகக் கவி­ஞ­னென்றும், சந்­தத்­தி­ருப்­புகழ் பாடிய பாவ­ல­ரென்றும் அடை­யாளம் காணப்­படும், புலவர் மலையின் புலமைச் சொத்து அருள் வாக்­கியின் இஸ்­லா­மிய இலக்­கியத் தொண்­டுகள் பற்றி கலா­பூ­ஷணம் எஸ். எம். ஏ. ஹஸனின் கூற்­றி­லி­ருந்து நல்ல விளக்­க­மொன்றைப் பெற முடி­யு­மாக உள்­ளது.

“அதா­வது தமிழ் இலக்­கிய மரபில் சிறந்த தமிழ் இஸ்­லா­மிய இலக்­கி­யங்­களைப் படைப்­பதில் தன்­னி­க­ரற்­ற­வ­ராகத் தன்னை அருள்­வாக்கி ஆக்கிக் கொண்டார். அறபுச் சொற்­க­ளையும், இஸ்­லா­மிய கருத்­துக்­க­ளையும் இலக்­கிய அமைப்பில் புகுத்தி அறபு கவி நயத்­தையும் தமிழ் உல­குக்கு அறி­முகம் செய்து வைப்­பதில் முதன்மை பெற்று விளங்­கினார். இவரால் படைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய இலக்­கிய பிர­பந்­தங்­களில் இதற்­கான சான்­றுகள் நிறை­யவே காணப்­ப­டு­கின்­றன. இவ­ரது பாடல்கள் பல­வற்றில் தேவை­யான இடத்தில் அற­புச்சொற்­களைக் கையாண்­டி­ருப்­பதால் இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய நயத்தை உள்­ள­வாறே அனு­ப­விக்கச் செய்­கி­றது. அதனால் இலக்­கிய நயம் எவ்­வித்­திலும் குறை­வு­ப­டாது இஸ்­லா­மிய தத்­து­வங்­க­ளோடு நிறைவு பெற்றுக் காணப்­ப­டு­கி­றது”. இக்­கூற்­றா­னது புல­வரின் இஸ்­லா­மிய இலக்­கிய பங்­க­ளிப்பின் வகி­பா­கத்தை செவ்­வனே தெளி­வூட்­டு­கி­றது எனலாம்.

மேலும் இவர் பற்றித் தேடு­கையில் காதி­ரிய்யா தரீக்­காவில் ஈடு­பாடு கொண்ட புலவர் தரீக்கா சம்­பந்­த­மாக இடம் பெறும் நிகழ்­வு­களின் போதெல்லாம் கவி பாடி­யுள்ளார். இதனால் இவர் கண்டி தர்ஹா வித்­துவான் என்ற சிறப்புப் பட்­டத்­தையும் பெற்­றுள்ளார். இது ஆன்­மிக ரீதியில் புல­வர்க்கு இருந்த ஆர்­வத்­தினை எடுத்துக் காட்­டு­கி­றது. அதே சமயம் இஸ்­லா­மிய கல்வி மேம்­பாட்­டினை முத­லாகக் கொண்டு திண்ணைப் பள்ளிக் கூடம் ஒன்­றையும் கொண்டு நடத்­தி­யுள்ளார். இது சமூ­கத்தின் மீதான அவ­ரது அக்­கறை மற்றும் ஏனை­யோ­ருடன் அவர் நெருங்கிப் பழ­கி­யமை, போன்­ற­வற்­றிற்கு ஆதா­ர­மாகக் காணப்­ப­டு­கி­றது எனலாம்.

குறிப்­பாக புல­வரால் ஆரம்­பிக்­கப்­பட்ட அத்­திண்ணைப் பள்­ளி­கூ­டமே வித்­து­வ­தீப மகா வித்­தி­யா­ல­ய­மா­கவும், இன்று க/என­சல்­கொல்ல முஸ்லிம் மத்­திய கல்­லூ­ரி­யா­கவும் தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளது என்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. அந்­த­வ­கையில் புல­வரால் விதை­யி­டப்­பட்­டதே தெல்­தோட்­டையின் கல்வி அச்­சாணி என்­பதும் அது இன்று அப்­பி­ர­தே­சத்தில் பல்­லா­யிரம் ஆசி­ரிய பெரு­மக்கள், அதி­பர்கள், வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் என நீண்டு செல்லும் கல்­வி­ய­லா­ளர்­க­ளையும், அதற்­காக முன்­னின்று உழைப்­ப­வர்­க­ளையும் தோற்­று­வித்­துள்­ளது எனலாம். அந்தப் பெரு­மையின் ஆரம்ப கர்த்தா வித்­துவ­தீபம் அ.பி. அப்­துல்­காதிர் ஆவார்.

புல­வரைப் பற்றி பேசு­கையில், அவ­ரது இலக்­கிய தொண்­டு­க­ளுக்கு கிடைத்த பட்­டங்­க­ளையும் குறிப்­பிட்­டாக வேண்டும். எடுத்­துக்­காட்­டு­க­ளாக ஞான வெண்பாப் புவிப்­பா­வலர், வித்­து­வ­சி­ரோ­மணி, கவி ராஜ­சே­கரம், பிர­பந்த ரத்­னா­கரம், சமூக வித்­துவான், கவி­வாணை, மெய்­ஞான அருள்­வாக்கி, வித்­துவ தீபம், காந்த கவி­ராயர், தர்ஹா வித்­துவான், நாவலர், திவ்­ய­கவி நாவலர், அட்­டா­வ­தானி என பல பெயர்­களால் கௌர­விக்­கப்­பட்ட பாவலர் ஈழத்து இஸ்­லா­மிய இலக்­கி­யத்தின் கொடு­முடி என கொண்­டா­டப்­ப­டு­வதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

இன்னும் புல­வரின் இஸ்­லா­மிய இலக்­கிய தொண்­டுகள் குறித்து அவ­ரது ஒவ்­வொரு படைப்­பு­களில் இருந்தும் உதா­ரணம் காட்ட முடியும். அவற்றில் சிலதை இங்கு விளக்­கத்­திற்கு எடுத்துக் கொள்­வோ­மாயின், “முஹிய்­யத்தீன் ஆண்­டகை கார­ணப்­பிள்ளைத் தமிழ்” (1895) எனும் நூலா­னது குத்­துபு நாயகம் முஹிய்­யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி குறித்து பேசு­கி­றது. இது காதி­ரியா தரீக்கா மீது புல­வரின் ஈடு­பாட்டை பறை­சாற்­று­வ­தா­கவும் அமை­யப்­பெற்­றுள்­ளது. இதே­ய­மைப்பில் பாடப்­பட்ட பிறி­தொரு நூலாக “பேரின்ப ரஞ்­சி­த­மாலை” (1899) எனும் நூலும் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றாக ஆன்­மீகம் சார்ந்து புல­வரால் பாடப்­பட்ட கவிகள் ஈழத்து இஸ்­லா­மி­யரின் இலக்­கிய அடை­யா­ளங்­க­ளாக இன்றும் இலக்­கிய உலகில் பேசப்­ப­டு­கின்­றமை முக்­கி­ய­மா­ன­தாகும்.

……பல­ரது தீராத நோய்­களைத் தீர்த்து வைத்­துள்­ளா­ரெ­னவும் கூறுவர். …….தமிழில் எல்லா சந்­தங்­க­ளிலும் கவிதை புனைந்த இவர் அறபுச் சந்­தத்­திலும் கவிதை இயற்­றி­யுள்­ளமை போற்­று­தற்­கு­ரிய செய­லாகும்.”

அடுத்து புல­வரின் இஸ்­லா­மிய இலக்­கிய படைப்­பு­களில் “பிர­பந்த பஞ்சம்” எனும் நூல் குறிப்­பி­டத்­தக்க முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. இதில் புல­வரின் ஆறு நூல்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நூலே புல­வ­ருக்­கான இஸ்­லா­மிய இலக்­கிய உலகின் அடை­யா­ளத்தை தூக்கி நிறுத்­தி­யது எனலாம். அந்த வகையில் இந்­நூலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள நூல்­க­ளாக “அடைக்­க­ல­மாலை” (அல்­லாஹ்வின் சிறப்­பு­களை கூறி அடைக்­கலம் தேடுதல்), “முனா­ஜாத்து” (முஹம்மத் நபியின் பெயரில் பாடப்­பட்­டுள்­ளது.) “என் கலை வண்ணம்” (முஹம்மத் நபியின் பெயரில் பாடப்­பட்­டுள்­ளது.) “எண்­கலை வன்­மெல்­லிசை வண்ணம்” (முஹிய்­யத்தீன் ஆண்­டகை பற்றி பாடப்­பட்­டுள்­ளது.), “கண்டி பதிற்­றுப்­பத்­தந்­தாதி” (கண்டி மீரா­மக்கம் தர்­காவில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள செய்ஹு சிஹா­புத்தீன் வலி­யுல்லாஹ் பெயரில் பாடப்­பட்­டுள்­ளது.) “அருள் மணி­மாலை” (கண்டி சிஹா­புத்தீன் வலி­யுல்லாஹ் பற்றி பாடப்­பட்­டுள்­ளது.) இவ்­வா­றாக பல்­வேறு இலக்­கிய சான்­று­களை இஸ்­லா­மிய உல­குக்கு பரி­ச­ளித்த புலவர் உலக தீபம், முத்­தமிழ்ச் சிங்கம், கலை­வல்லோன், கல்­விக்­கடல் போன்ற இன்னும் சில சிறப்புப் பெயர்­க­ளாலும் கொண்­டா­டப்­பட்­டுள்­ளமை ஈழத்து இஸ்­லா­மிய இலக்­கிய மரபில் அவர் கொண்­டா­டப்­பட வேண்­டிய அவ­சி­யத்தை மீள­மீள வலி­யு­றுத்­து­வ­தாக அமையப் பெற்­றுள்­ளது எனலாம்.
இது தவிர பிற படைப்­பு­களில் சிறப்­புப்­பா­யிரம், சாற்­றுக்­கவி, சிறப்­புக்­கவி என்­ப­னவும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. மேலும் கண்டி கலப்­பகம் (1909), காட்­டு­பாவா சாகிபு கும்மி (1905) போன்­ற­னவும் முக்­கியம் பெறு­கின்­றன. இவை­ய­னைத்தும் இலங்கை சூபித்­து­வத்­தி­னதும் சூபி இலக்­கி­யத்­தி­னதும் வளர்ச்சி நிலையின் ஓர் அங்­க­மாக பார்க்­கப்­ப­டு­கின்ற அதே­ச­மயம் இஸ்­லா­மிய இலக்­கிய மரபில் புதிய அத்­தி­யா­யத்தைத் தோற்­று­வித்­த­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றாக ஈழத்து இஸ்­லா­மிய இலக்­கிய மரபின் அச்­சா­ணி­யாக திகழ்ந்த மெய்­ஞான அருள்­வாக்கி அல்­லா­பிச்சை ராவுத்தர் அப்துல் காதிர் புலவர் 1918.09.23 ஆம் திகதி கண்­டியில் இறப்­பெய்­தினார். இறப்­பெய்தி நூற்­றாண்­டுகள் கடந்­தாலும் அவ­ரது இலக்­கிய சேவை இலக்­கியம் உள்­ள­வரை வாழும் எனும் அள­விற்கு அவர் ஆற்­றிய பணிகள் ஏராளம் கொட்டிக் கிடக்­கின்­றன. குறிப்­பாக 1894 –1918 வரை புலவர் பல நூல்­க­ளுக்கு சிறப்­புப்­பா­யி­ரங்­க­ளையும், வாழ்த்துக் கவி­ளையும், சாற்றுக் கவி­க­ளையும் வழங்கி ஈழத்­திலும், இந்­தி­யா­விலும் பரந்­து­பட்ட அறி­ஞர்கள் மத்­தியில் தனக்­கென ஓர் அழி­யாத இடத்தைப் பெற்­றுக்­கொண்டார். எவ்­வா­றா­யினும் அருள்­வாக்கி குறித்த முழு­மை­யான வர­லாறு இன்­று­வரை ஆவ­ண­மாக்கல் செயன்­மு­றைக்கு உள்­வாங்­கப்­ப­டாமை இஸ்­லா­மிய இலக்­கிய மரபில் ஓர் இடை­வெ­ளியை தோற்­று­வித்­துள்­ளது. அதனை செப்­ப­னிட்டு பூர­ணப்­ப­டுத்தி எமது சமூக இலக்­கியக் கூறு­களை இலக்­கிய உல­குக்கு பரி­ச­ளிக்க வேண்­டி­யது தெல்­தோட்டை வாழ் கல்­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி ஈழத்து இஸ்­லா­மிய சமூ­கத்­தினர் மீது­முள்ள மீதுள்ள கட­மை­யாகும். குறிப்­பாக வித்­து­வ­தீபம் குறித்த ஆய்வு செயன்­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதன் ஊடாக அருள்­வாக்கி தொடர்புடைய வெளிக்கொண்டுவரப்படாத படைப்புகளும், பதிவுகளும் இலக்கிய உலகுக்கு புதுவெளிச்சம் கொண்டுவரலாம்.

ஏனெனில் இன்று அருள்வாக்கி குறித்து பலருக்கு தெரியாதுள்ளது. அவரது நூல்கள் பல அழிந்துவிட்டன. சில மூல நூல்களே கிடைக்காதுள்ளன. இது ஒரு புலமையை தெரிந்தே ஓர் சமூகம் தவற விடுவது போன்றதாகும். இதற்கு ஈழத்தின் இலக்கிய ஆர்வலர்களும் முன்னின்று செயலாற்றி தேசிய நீரோட்டத்திலிருந்து இதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை சமூகம் சார்ந்து முன்னெடுக்க வேண்டும்.

சூபித்துவ அறிஞர் என்ற நோக்கில் இயக்க பேதங்களை இங்கு திணியாது, சமூகத்தின் ஆளுமை என்ற நோக்கில் அவரது வகிபாகம் சகலராலும் கொண்டாடப்பட வேண்டும். அது குறித்த விழிப்புணர்வுகள் செய்யப்படவேண்டும். அதனூடாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தொண்டாற்றிய இலக்கிய கொடுமுடி, அட்டாவதானி அருள்வாக்கி குறித்து சமூகத்தின் வரும் தலைமுறையினருக்கும் ஓர் நற்செய்தியை வழங்க முடியுமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்

இவ்வாறான ஓர் வரலாற்றுப் பின்புலத்தில் நிமிட வித்துவான் அருள்வாக்கியின் நினைவுப் பேருரையை ஏற்பாடு செய்திருக்கும் தெல்தோட்டை ஊடக மன்றத்தின் முயற்சிகள் பாராட்டவும், வரவேற்கவும் தக்கவை. தொடர்ந்தும் காத்திரமான பணிகள் முன்னெடுக்கப்படுவதனூடாக அருள்வாக்கியை பரிசளித்த மண்ணுக்கு இன்னும் பல பரிசுகள் கிடைக்க துணைகிட்ட முடியும் என்ற பிரார்த்தனையுடன் அருள்வாக்கி குறித்த இப்பத்திக்கு முற்றிடுகின்றேன்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.