ஆப்­கானில் மீண்டும் தலிபான் ஆட்சி என்ன நடக்­கி­றது அங்கே?

0 412

உலகின் மிக வல்­லமை பொருந்­திய அமெ­ரிக்க இரா­ணுவம் மீண்டும் ஒரு தோல்­வியை சந்­தித்­தி­ருக்­கி­றது. சுமார் ஓர் இலட்­சத்து 30 ஆயிரம் படை­வீ­ரர்கள், உலகின் அதி­ந­வீன போர்க்­க­ரு­விகள், சக்தி வாய்ந்த போர் விமா­னங்கள் இத்­த­னையும் இருந்தும் தலி­பான்­களை வீழ்த்த முடி­யாமல் அமெ­ரிக்கா பின்­வாங்­கி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா ஆப்­கானில் கால் பதித்­ததைத் தொடர்ந்து 2001 இல் தலை­நகர் காபூ­லி­லி­ருந்து ‘மீண்டும் நாங்கள் காபூலைக் கைப்­பற்­றுவோம்!” என்று சூளுரைத்து விட்டு வெளி­யே­றிய தலி­பான்கள் 20 வரு­டங்கள் கழித்து தற்­போது மீண்டும் காபூலை முழு­மை­யாகக் கைப்­பற்­றி­யி­ருக்­கின்­றனர்.

இன்று தலி­பான்கள் மீண்டும் உல­க­ளா­விய ஊட­கங்­களில் தலைப்புச் செய்தி ஆகி­யி­ருக்­கி­றார்கள். கைகளில் துப்­பாக்­கி­களை ஏந்­தி­ய­படி ஆப்­கா­னிஸ்தான் தலை­நகர் காபூலில் இருக்கும் ஜனா­தி­பதி மாளி­கையில் கூட்­ட­மாக தலிபான் போரா­ளிகள் அமர்ந்­தி­ருக்கும் புகைப்­படம், அந்த நாட்டின் எதிர்­காலம் பற்­றிய கவ­லையை ஆப்­கா­னி­யர்­க­ளுக்கு மட்­டு­மன்றி உல­கெங்கும் தோற்­று­வித்­துள்­ளது. ஆனாலும் தலிபான் பேச்­சாளர் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிடும் கருத்­துக்கள் சற்று நம்­பிக்­கை­ய­ளிப்­ப­தாக உள்­ளன.

கட்டாரில் நடைபெற்ற
அமெரிக்கா – தலிபான் சமாதானப் பேச்சுவார்த்தை

20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அமெ­ரிக்கப் படை­களால் ஆட்­சி­யி­லி­ருந்து விரட்­டப்­பட்ட தலி­பான்கள், வெறும் இரு­பதே நாட்­களில் மீண்டும் தேசத்தைக் கைப்­பற்­றி­விட்­டனர்.
20 ஆண்­டுகள் அமெ­ரிக்கா பணத்தைக் கொட்டி பயிற்­சியும் ஆயு­தங்­களும் கொடுத்து வளர்த்த ஆப்கான் இரா­ணு­வமும் பொலிஸ் படையும் சின்ன எதிர்ப்­பு­கூட காட்­டாமல் சர­ண­டைந்­து­விட்­டன. ஆப்கான் ஜனா­தி­பதி அஷ்ரப் கானி பதவி விலகி தஜி­கிஸ்தான் நாட்­டுக்குத் தப்பி ஓடி­விட்டார். ‘போரால் காபூல் அழி­வதை விரும்­ப­வில்லை. எண்­ணற்ற தேச­பக்­தர்கள் உயி­ரி­ழப்­பதைத் தடுக்­கவே இந்த முடி­வெ­டுத்தேன்” என்று விளக்கம் கொடுத்­தி­ருக்­கிறார் அவர். அஷ்ரப் கானி, நான்கு கார்கள் நிறைய பணத்தை எடுத்து வந்து ஹெலி­கொப்­டரில் தப்பிச் சென்­ற­தாக ரஷ்ய தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

தலை­நகர் காபூலின் எல்­லையில் தலி­பான்கள் தடம் பதித்த விடயம் அறிந்­ததும், அங்­குள்ள பல நாடு­களின் தூத­ர­கங்கள் பதற்­ற­மா­கி­விட்­டன. அமெ­ரிக்கா, பிரிட்டன், இந்­தியா என வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து விமா­னங்கள் பறந்­து­வந்து தங்கள் தேசத்­த­வ­ரையும் தூத­ரக அதி­கா­ரி­க­ளையும் மீட்டுச் சென்­றன.

அமெ­ரிக்கத் தூத­ர­கத்தின் கூரையில் இறங்­கிய அமெ­ரிக்க ஹெலி­கொப்டர் அங்­கி­ருந்த அதி­கா­ரி­களை மீட்டுச் சென்ற காட்சி, வியட்நாம் போரில் ஏற்­பட்ட தோல்­வியில் தலை­கு­னிந்து கடைசி இரா­ணுவ வீரர்­களை ஏற்­றிக்­கொண்டு அமெ­ரிக்க விமா­னங்கள் திரும்­பிய காட்­சியை நினைவூட்டினஆம், உலகின் மிக வல்­லமை பொருந்­திய அமெ­ரிக்க இரா­ணுவம் மீண்டும் ஒரு தோல்­வியை சந்­தித்­தி­ருக்­கி­றது. அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நாடு­களின் சுமார் ஒரு இலட்­சத்து 30 ஆயிரம் படை­வீ­ரர்கள், உலகின் அதி­ந­வீன போர்க்­க­ரு­விகள், சக்தி வாய்ந்த போர் விமா­னங்கள் இத்­த­னையும் இருந்தும் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தலிபான் படையை வீழ்த்த முடி­யாமல் சமா­தானம் செய்­து­கொண்டு அமெ­ரிக்கா பின்­வாங்­கி­யி­ருக்­கி­றது.

‘ஆப்­கா­னிஸ்தான் மண்ணில் அல் கைய்தா அமைப்­புக்கோ, ஐ.எஸ் தீவி­ர­வா­தி­க­ளுக்கோ புக­லிடம் தர மாட்டோம்” என தலிபான் அமைப்பு கொடுத்த ஒற்றை உறு­தி­மொ­ழியை மட்டும் எடுத்­துக்­கொண்டு அமெ­ரிக்கப் படைகள் வெளி­யே­றி­யுள்­ளன.
ஆப்­கா­னிஸ்­தானில் 2001 முதல் 2021 வரை நடத்­திய போருக்­காக இது­வரை அமெ­ரிக்கா செல­விட்ட தொகை 2.26 ட்ரில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் என அமெ­ரிக்க பிரௌன் பல்­க­லைக்­க­ழகம் நடத்­திய ஆய்வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை நாண­யத்தில் அதன் பெறு­மதி 450,866,158,000,000.00 ரூபா. இந்தப் போரினால் காய­முற்ற அமெ­ரிக்க படை­யி­ன­ருக்கு கால­மெல்லாம் சிகிச்சை அளிப்­ப­தற்­கான தொகை இதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை

அமெ­ரிக்கப் படை­யினர், ஆப்கான் இரா­ணு­வத்­தினர், தலி­பான்கள், பொது மக்கள் என 20 ஆண்­டு­களில் சுமார் 2 இலட்­சத்து 40 ஆயிரம் உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

வெளி­யே­றிய அமெ­ரிக்கா!
11 செப்­டம்பர், 2001 அன்று அமெ­ரிக்­காவின் இரட்டைக் கோபுரம் மீது அல் கைதா அமைப்பு தாக்­குதல் நடத்­தி­யதில் சுமார் 3,000 பேர் உயி­ரி­ழந்­தனர். அந்தச் சம­யத்தில் அல் கைதா தலைவர் ஒசாமா பின்­லே­ட­னுக்கு தலி­பான்கள் அடைக்­கலம் கொடுத்­த­தாகக் கூறி, ஆப்­கானில் அமெ­ரிக்கப் படைகள் குவிக்­கப்­பட்­டன. இதனால், அப்­போது ஆப்­கானை ஆட்சி செய்த தலிபான் அமைப்பு அதி­கா­ரத்தை இழந்­தது. அவுஸ்­தி­ரே­லியா, கனடா, நேட்டோ படைகள் ஆகி­ய­வற்றின் உத­வி­யோடு தலி­பான்­களை ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்து அகற்­றி­யது அமெ­ரிக்கா.

அமெ­ரிக்கப் படை­களின் கண்­கா­ணிப்பு ஆப்­கா­னிஸ்தான் முழு­வதும் பல­மாக இருந்து வந்­ததால் தலி­பான்கள் இத்­தனை ஆண்டு கால­மாகப் பதுங்கி இருந்­தனர். ஆனால், தற்­போது அமெ­ரிக்க அதிபர் ஜோ பைடன் 20 ஆண்­டு­க­ளாக ஆப்­கானில் முகா­மிட்டு வந்த படை­களை அங்­கி­ருந்து திரும்­பப்­பெ­று­வ­தாக அண்­மையில் அறி­வித்தார். எதிர்­வரும் செப்­டம்பர் 11 க்குள் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படைகள் முழு­வ­து­மாக வெளி­யே­றி­விடும் என அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார். அதை­ய­டுத்தே, அமெ­ரிக்கப் படைகள் அங்­கி­ருந்து வெளி­யேறி வரு­கின்­றன. தற்­போது காபூல் விமான நிலை­யத்தில் மாத்­திரம் அமெ­ரிக்கப் படைகள் மிகச் சொற்­ப­ளவில் நிலை கொண்­டுள்­ளன.

அச்­சத்தில் ஆப்கான் மக்கள்
2001 ஆம் ஆண்­டுக்கு முன்பு தலி­பான்கள் ஆட்­சி­யி­லி­ருந்­த­போது, “இஸ்­லாமிக் எமிரேட் ஒப் ஆப்­கா­னிஸ்தான்’ என்ற பெயரில் தங்­களின் ஆட்­சியை முன்­னெ­டுத்­தனர். இதன்­போது பெண்கள் வேலைக்குச் செல்­வது, படிக்கச் செல்­வதை தலி­பான்கள் தடை­செய்­தி­ருந்­தனர். மீண்டும் அவர்கள் ஆட்­சிக்கு வந்தால் என்ன வித­மான அடக்­கு­ம­ுறை­களை விதிப்­பார்­களோ என்ற அச்­சத்தில் அந்­நாட்டு மக்கள் உள்­ளனர்.
சில மாவட்­டங்­களை தலி­பான்கள் கைப்­பற்­றிய பிறகு, ஆப்­கா­னிஸ்தான் வங்­கி­களில் பெண் ஊழி­யர்கள் இனி வேலைக்கு வரக் கூடாது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆப்கான் வங்­கி­களில் பெரும்­பாலும் பெண்கள் பணியில் இருந்­து­வந்த நிலையில், தற்­போ­தைய நெருக்­க­டி­யான சூழலில் வங்­கிப்­பணி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. தனது பணி பறி­போ­னது குறித்து நூர் கத்­தேரா என்ற 43 வயது பெண் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளி­யி­டு­கையில், ‘நான் எனது பணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளேன். சில துப்­பாக்கி ஏந்­திய தலி­பான்கள் என்­னுடன் வீடு வரைக்கும் வந்­தனர். இனி இவரை வேலைக்கு அனுப்­பா­தீர்கள். அவ­ருக்குப் பதில் வீட்டில் உள்ள ஆண்கள் யாரேனும் வேலைக்கு வாருங்கள் என்று சொல்லிச் சென்­றனர். பெண்கள் பணிக்கு வரக்­கூ­டாது என்ற உத்­த­ரவு மிகவும் விந்­தை­யாக உள்­ளது. நான் வங்­கியில் கணக்குத் துறையில் பணி புரிந்தேன். நான் பணியில் சேரும் போது நானே ஆங்­கிலம் கற்றேன். நானே கணினி அறி­வையும் வளர்த்துக் கொண்டேன். இப்­போது நான் மீண்டும் அடுப்­பங்­க­ரைக்கு செல்­லப்­போ­கிறேன்” என்று கூறினார்.

எனினும் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை தலி­பான்­களின் ஊடகப் பேச்­சாளர் சுஹைல் ஷகீன் மறுத்­துள்ளார். “ஆப்கான் பெண்கள் கல்வி கற்க அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். ஆப்கான் மக்­களை பழி­வாங்­க­மாட்டோம்” என அவர் பி.பி.சி. உள்­ளிட்ட பல ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய செவ்­வியில் குறிப்­பிட்­டுள்ளார்.

“மக்­களின் உயிரும், சொத்­து­களும் பாது­காப்­பாக இருக்கும். ஆப்­கா­னிஸ்தான் மக்­களை பழி­வாங்­க­மாட்டோம். நாங்கள் மக்­களின் சேவ­கர்கள். எங்­க­ளது தலை­மை­யி­லான ஆட்­சியில் காபூலில் தொந்­த­ர­வுகள் ஏற்­ப­டுத்தக் கூடாது என்­பதில் உறு­தி­யாக இருக்­கிறோம். நாங்கள் அமை­தி­யான முறையில் எங்கள் அதி­கா­ரத்தைப் பெற காத்துக் கொண்­டி­ருக்­கிறோம். எதிர்­கா­லத்தில் அனைத்து ஆப்கான் மக்­களும் பங்­கு­கொள்ளும் ஆட்­சி­யாக எங்கள் ஆட்சி அமையும். நாங்கள் இஸ்­லா­மிய அரசு அமைய விரும்­பு­கிறோம். நாங்கள் பெண்கள் உரி­மையை மதிப்போம். வெளியே தனி­யாக பெண்கள் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். பெண்கள் கல்வி கற்­கவும், வேலைக்குச் செல்லவும் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். அவர்கள் ஹிஜாப் அணியும் பழக்­கத்தை கடைப்­பி­டிப்­பார்கள்” என்றும் அவர் குறிப்­பிட்டார். தலி­பான்கள் முன்­னரை விட கொள்­கை­ய­ளவில் அதிக முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளதை அவ­ரது இக் கருத்­துக்கள் உணர்த்­து­வ­தா­கவும் தலி­பான்­க­ளி­ட­மி­ருந்து வித்­தி­யா­ச­மா­ன­தொரு ஆட்­சியை எதிர்­பார்க்­கலாம் என்றும் சில அர­சியல் விமர்­ச­கர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

தலி­பான்­களின் பின்­னணி என்ன?
1980 களில் அமெ­ரிக்­கா­வுக்கும் அப்­போ­தைய சோவியத் ரஷ்­யா­வுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்­தது. இந்த பனிப்­போரில் குளிர்­காய நினைத்த அமெ­ரிக்கா சோவி­யத்­துக்கு எதி­ரான முஜா­ஹிதீன் படைக்குள் சில பிரச்­சி­னை­களை உண்­டாக்­கி­யது. அதி­லி­ருந்து வில­கிய சில உறுப்­பி­னர்­க­ளுடன் 1994 இல் தலிபான் படைகள் உரு­வா­கின. 1996 இல் அதன் கை மேலோங்­கி­யது. நாட்டில் தீவி­ர­மாக இஸ்­லா­மிய ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்­தின தலிபான் படைகள். மேலும் மத சிறு­பான்­மை­யினர் கடு­மை­யான ஒடுக்­கு­மு­றைக்கு ஆளா­கினர். தலிபான் அமைப்பின் தலை­வ­ராக முல்லா முக­மது ஒமர் செயற்­பட்டார்.

அதன்­பின்னர் தலிபான் படை­களுக்கு அமெ­ரிக்கா கடும் நெருக்­கடி கொடுத்­தது. அமெ­ரிக்கப் படை­களை சமா­ளிக்க முடி­யாமல் அதன் அப்­போ­தைய தலைவர் முல்லா முக­மது ஒமர் தலை­ம­றை­வானார். 2013 ஆம் ஆண்­டு­வரை அவ­ரது நிலை­வரம் என்­ன­வென்­பது மிகப்­பெ­ரிய ரக­சி­ய­மாக பாது­காக்­கப்­பட்­டது. 2015 இல் முல்­லாவின் மர­ணத்தை அவ­ரது மகன் உறுதி செய்தார்.

இப்­போது ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான்கள் முழு­மை­யாக ஆக்­கி­ர­மித்­து­விட்ட நிலையில், அந்தப் படையில் 6 பேர் மிக முக்­கிய புள்­ளி­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றனர். அவர்­க­ளது விபரம் வரு­மாறு:

ஹைபத்­துல்லா அகுன்­சதா : இவர்தான் தலி­பான்­களின் சுப்ரீம் தலைவர் என்று அறி­யப்­ப­டு­கிறார். தலி­பான்­களின் அர­சியல், மதம் மற்றும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை இவர்தான் தீர்­மா­னிக்­கிறார்.
முல்லா முக­மது யாகூப் : இவர் தலிபான் அமைப்பை நிறு­விய முல்லா முக­மது ஒமரின் மக­னாவார். இவர்தான் தலி­பான்­களின் இரா­ணு­வத்தை மேற்­பார்வை செய்­து­வ­ரு­கிறார். ஒமர் மறை­வுக்குப் பின் இவர்தான் தலை­வ­ராக வேண்டும் என பல­முறை வலி­யு­றுத்­தப்­பட்­டாலும் கூட இவர் அதனை ஏற்­க­வில்லை. வயது குறைவு, போர்க்­கள அனு­பவம் போதாது போன்ற கார­ணங்­களை சுட்­டிக்­காட்டி தொடர்ந்து அவர் தலைமைப் பொறுப்பை தவிர்த்து வரு­கிறார். யாகூப் இன்னும் 30 வய­தைக்­கூட எட்­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.
சிரா­ஜுதீன் ஹக்­கானி: முஜா­கிதீன் கமாண்டர் ஜலா­லுதீன் ஹக்­கா­னியின் மகன் தான் இந்த சிரா­ஜுதீன் ஹக்­கானி. இவர் தலிபான் படை­களின் நிதி மேலாண்மை நிர்­வாகப் பொறுப்பில் இருக்­கிறார். உலகம் முழு­வ­து­மி­ருந்து தலி­பான்­க­ளுக்கு நிதி திரட்­டு­வது இவ­ரது பொறுப்பு.
முல்லா அப்துல் கானி பரதார்: இவர் தலிபான் நிறு­வ­னர்­களில் ஒருவர். இப்­போது அர­சியல் தலை­ம­யகப் பொறுப்பை நிர்­வ­கிக்­கிறார். இவர் தோஹாவில் நடை­பெறும் ஆப்கான் அமைதிப் பேச்­சு­வார்த்­தையில் தலிபான் பிர­தி­நி­தி­யாகக் கலந்து கொண்­டுள்ளார். இவர் ஒமரின் மிகவும் நம்­பிக்­கைக்­கு­ரிய கமாண்டர். 2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்­தானின் கராச்­சியில் பிடி­பட்டார். 8 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு 2018 இல் அவர் விடு­விக்­கப்­பட்டார். இவர்தான் ஆப்­கா­னிஸ்­தானின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
ஷேர் முக­மது அப்பாஸ் ஸ்டானிக்சாய்: தலிபான் 2001க்கு முன்­ன­தாக ஆட்­சியில் இருந்­த­போது இவர் தலி­பான்­களின் துணைத் தலை­வ­ராக இருந்தார். இவர் ஆப்கான் அர­சுடன் தலிபான் சார்பில் அமைதிப் பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்­றி­ருக்­கிறார்.
அப்துல் ஹகீம் ஹக்­கானி: இவர்தான் தலி­பான்­களின் தற்­போ­தைய சுப்ரீம் தலைவர் அகுன்­ச­தாவின் நம்­பிக்­கைக்­கு­ரிய தலைவர். இவர் தலிபான் அமைதிப் பேச்­சு­வார்த்தை குழுவில் இடம்­பெற்­றி­ருக்­கிறார்.

ஆப்­கானைக் குறி­வைக்கும் சீனா!
ஆப்­கா­னி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­றி­வரும் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி அங்கு கால்­ப­திக்கத் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது சீனா. ஆப்­கா­னிஸ்­தா­னுடன் எல்­லையைப் பகிர்ந்­து­கொள்ளும் சீனா­வுக்கு தலி­பான்கள் குழு ஒன்று கடந்த ஜூலை மாத இறு­தியில் சென்­றது. அங்கு சீன வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் வாங் யீயை சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டது தலிபான் குழு.

இதன்­போது அர­சியல், பொரு­ளா­தாரம், இரு நாடு­களின் பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்துப் பேசப்­பட்­டன. மேலும், சீனா­வுக்கு எதி­ராக ஆப்­கானின் மண்ணைப் பயன்­ப­டுத்த யாரையும் அனு­ம­திக்­க­மாட்டோம் என சீனா­வுக்கு இதன்­போது தலி­பான்கள் உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.

இனித்தான் சவால்!
“தலி­பான்கள் கைகளில் எளி­தாக ஆப்கான் விழுந்­தி­ருக்­கலாம். ஆனால், உண்­மை­யான சவால் இனித்தான் தொடங்கப் போகிறது” என்கிறார் தோஹா பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆய்வுகள் மையத்தின் இயக்குநர் சுல்தான் பரகத். “அவர்கள் இதுவரை கெரில்லா குழுக்களாக இருந்தனர். ஆனால், இப்போது அவர்கள் ஒரு நாட்டை நிர்வகிக்க வேண்டும். இரண்டும் ஒன்றல்ல” என்கிறார் அவர்.

“ஒட்டு மொத்த ஆப்கான் மக்களுக்கும் தங்களைப் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொள்ளவேண்டும். இதனை சில தலிபான் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் இது குறித்த உறுதியையும் அளித்துள்ளனர். ஆனால், நடைமுறையில் அது அவ்வளவு எளிதாக இல்லை. தலிபானில் உள்ள இளைஞர்கள் ஆக்ரோஷமாகச் செயல்படுகின்றனர், துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றும் சுல்தான் பரகத் எழுதுகிறார்.

தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளமை குறித்து அந்ந நாட்டில் மாத்திரமன்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வாதப் பிரதிவாதங்கள் மேலெழுந்துள்ளன.
தலிபான் பேச்சாளர் கூறுவது போல அவர்கள் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்சியைத் தொடர்வார்களா அல்லது சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.