உலமா சபை, சூரா சபை உட்பட முஸ்லிம் தலைமைகள் மௌனம்

எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அழைக்கிறார் கிறிஸ்தவ செயற்பாட்டாளர் செஹான்

0 512

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்­ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல் என்­பதே பெரும்­பான்­மை­யோரின் கருத்­தாகும். இது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டு­விட்­டது. இந்த தாக்­கு­தலில் அனைத்து சமூ­கமும் பாதிக்­கப்­பட்­டாலும் குறிப்­பாக கிறிஸ்­த­வர்­களும் முஸ்­லிம்­க­ளுமே பெரிதும் பாதிக்­கப்­பட்­டார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் உலமா சபை, சூரா சபை உள்­ள­டங்­கிய அனைத்து முஸ்லிம் தலை­மை­களும் இன்று ஆழ்ந்த மௌனத்தில் இருக்­கி­றார்கள். இது தொடர்பில் நாம் அதி­ருப்தி அடைந்­துள்ளோம். கவ­லைப்­ப­டு­கிறோம். நாம் முஸ்­லிம்­க­ளுடன் தொடர்ந்தும் கை கோர்த்­தி­ருந்தோம். ஆனால் இப்­போது அவர்கள் மௌனித்து விட்­டார்கள். நாம் அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயார். ஆனால் அவர்கள் வெளியே வரு­கி­றார்கள் இல்லை’ என இளம் கிறிஸ்­தவ சமூக செயற்­பாட்­டாளர் செஹான் மாலக கமகே தெரி­வித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கோரியும் இன நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தியும் தொடர்ச்­சி­யாக செயற்­பட்டு வரும் இவர் தனது காணொளி பதிவில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ‘கத்­தோ­லிக்­கர்­க­ளா­கிய நாம் முஸ்­லிம்­க­ளுடன் தொடர்ந்து கைகோர்த்து நல்­லு­ற­வுடன் வாழ்ந்து வந்­துள்ளோம். இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் கல­வ­ரங்கள் ஏற்­ப­டாத வண்ணம் பாது­காத்து வந்­துள்ளோம்.

போரு­தொட்ட சம்­ப­வத்தின் போது பேராயர் மல்கம் ரஞ்சித் காலை­யிலே அங்கு வந்து வன்­செ­யல்கள் இடம்­பெ­றாத வண்ணம் தடுத்து நிறுத்­தினார். நான் முஸ்­லிம்­க­ளுக்­காக அங்கு முன் நின்றேன். அவர்­க­ளுக்­காக பேசினேன்.

சம்­பவ தினத்­தன்று ஒருவர் தனது முகநூல் பக்­கத்தில் ‘தம்­பி­க­ளுக்கு அடிப்போம்’ என பதி­வினை வெளி­யிட்டார். கத்­தோ­லிக்க முகநூல் பக்­கங்­களில் இது வைர­லா­னது. சிறிது நேரத்தில் பாரிய கல­வ­ர­மொன்று ஏற்­பட இருந்­தது. அது எம்மால் தடுக்­கப்­பட்­டது.
நாம் சி.ஐ.டி.க்கும் அறி­வித்தோம். பின்பு கத்­தோ­லிக்க முகநூல் பக்­கங்­களை முகா­மைத்­துவம் செய்­ப­வர்­களை ஒன்று கூட்டி இனக் கல­வ­ரங்­களை தூண்டும் வகை­யான பிர­சா­ரங்கள் மேற்­கொள்ளக் கூடாது. முஸ்­லிம்­க­ளுடன் நல்­லு­றவைப் பேண வேண்டும் என்றோம். இதற்கு நானே தலை­மைத்­துவம் வழங்­கினேன். முக­நூலில் பதி­விட்­ட­வரை தேடிச்­சென்று அறி­வுரை வழங்­கினேன். சுமார் 28 மாதங்­க­ளாக முகநூல் குரோத பேச்­சுக்கள் அறிக்­கைகள் இடம்­பெ­றாது தவிர்த்தோம்.

இன்றும் கூறு­கிறேன். இது முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்­ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல். இந்த நிலைப்­பாட்­டிலே பெரும்­பான்­மையோர் இருக்­கின்­றனர். இந்­நி­லைப்­பாடு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

உலமா சபை, சூரா சபை உட்­பட அனைத்து முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களும் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் தொடர்பில் செயற்­ப­ட­வில்லை. அவர்கள் மீது நாம் எமது அதி­ருப்­தியை வெளி­யி­டு­கிறோம். கவ­லைப்­ப­டு­கிறோம். அவர்கள் ஆழ்ந்த மௌனத்தில் இருக்­கி­றார்கள். நாங்கள் அவர்­க­ளுடன் தொடர்ந்து கைகோர்த்­தி­ருந்தோம். நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்தத் தயார். முஸ்லிம் தலை­மைத்­துவம் இன்னும் மௌன­மா­கவே இருக்­கி­றது.

அவர்கள் வெளியே வரு­கி­றார்கள் இல்லை. நாம் அனைத்து இன மக்­களும் வீடு­க­ளிலும், வர்த்­தக நிறு­வ­னங்­க­ளிலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரி­விக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளோம். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்­ள­வர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கோரிக்கை. ஆனால் எமது எதிர்ப்பு போராட்­டத்­திற்கு முஸ்­லிம்கள் ஒத்­து­ழைக்­கி­றார்கள் இல்லை. பயந்து போய் இருக்­கி­றார்கள். இந்­நி­லைமை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது. ஆட்­சி­யா­ளர்கள் தொடர்ந்தும் எம் இரு சமூ­கத்­தையும் பிள­வு­ப­டுத்தி வைத்­தி­ருக்க முடியும்.

பௌத்த குரு­மார்கள் இது தொடர்பில் எம்­முடன் கைகோர்த்­துள்­ள­வர்கள். எம்­முடன் கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். என்­றாலும் எந்த முஸ்லிம் தலை­வரும் இதில் ஈடு­பா­டில்­லாமல் இருக்­கி­றார்கள். அவர் எம்மை தொடர்பு கொள்­ள­வில்லை.
முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு கூறு­கிறோம். நம்­பிக்­கை­யுடன் முன்­வா­ருங்கள். அன்­புடன் அழைக்­கிறோம். இப்­போ­தா­வது வெளியே வரா­விட்டால் எம்­முடன் கைகோர்க்­கா­விட்டால் பின்பு கவலைப்படுவீர்கள். முஸ்லிம் அரசியல் வாதிகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவில்லை. எதிர்வரும் 21ஆம் திகதி கறுப்புக் கொடி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் எம்முடன் இணைய வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக முஸ்லிம் சமூகம் இதுவரை எமக்கு அறிவிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.