உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0 313

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. எவ்­வா­றி­ருப்­பினும் இந்த விவ­கா­ரத்தில் எவ்­வித அர­சியல் தலை­யீ­டு­களும் இன்றி சுயா­தீன விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்­பினை அர­சாங்கம் சட்­டமா அதிபர் திணைக்­களம் மற்றும் பொலிஸார் உள்­ளிட்ட தரப்­பி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளது என்று அமைச்­ச­ரவை இணை பேச்­சாளர் அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண தெரி­வித்தார்.

நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் வாராந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பிலும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு தொடர்­பிலும் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கைக்கு அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது.

அதற்­க­மைய இத­னுடன் தொடர்­பு­டைய சட்ட நட­வ­டிக்­கைகள் அனைத்தும் எவ்­வித அழுத்­தங்­களும் இன்றி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்போது சந்­தே­க­ந­பர்கள் தப்­பி­விடக் கூடாது என்ற அடிப்­ப­டையில் சட்­டமா அதிபர் திணைக்­களம் செயற்­பட்டு வரு­கி­றது. இத­னுடன் தொடர்­பு­டைய பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இது தொடர்­பான விசா­ர­ணை­களில் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சியல் அழுத்­தங்கள் எவற்­றையும் நாம் பிரயோகிப்பதில்லை. எனவே விசாரணைகளின் முழு பொறுப்பும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.