தேர்தல் குறித்த நிபுணர் குழுவில் முஸ்லிம் பிரதிநிதிக்கு இடமளிக்கவில்லை

சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

0 493

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
தேர்தல் சட்­டங்கள் மற்றும் நடை­மு­றை­யி­லுள்ள தேர்தல் முறை­மையை மறு­சீ­ர­மைப்­ப­தற்­காக அர­சாங்கம் ஐவர் கொண்ட நிபுணர் குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழுவின் தலை­வரும் சபை முதல்­வரும் மற்றும் வெளி­நாட்டு அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­வினால் இந்த நிபுணர் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­புணர் குழுவில் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் ஒரு­வ­ரேனும் நிய­மிக்­கப்­ப­டாமை குறித்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் விசனம் தெரி­வித்­துள்­ளன.

தேர்தல் சட்­டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறு­சீ­ர­மைப்­புக்­கான நிபு­ணர்கள் குழுவின் தலை­வ­ராக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் சிரேஷ்ட பேரா­சி­ரியர் சுதந்த லிய­னகே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக கலா­நிதி அநுர கரு­ணா­தி­லக, சட்­டத்­த­ரணி சுரேன் பர்­ணாந்து, பேரா­சி­ரியர் பி.பால­சுந்­த­ரம்­பிள்ளை, பால­சந்­திரன் கௌதமன் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

தேர்தல் சட்­டங்கள் மற்றும் தேர்தல் முறை­மையை மறு­சீ­ர­மைப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள முன்­மொ­ழி­வு­க­ளையும், ஆலோ­ச­னை­க­ளையும் பகுப்­பாய்வு செய்­வ­தற்கே குறிப்­பிட்ட நிபுணர் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­ப­டும்­போது பிர­தான முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் நிய­மிக்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும். தெரிவுக் குழுக்­களில் கடந்த காலங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அதன் தலைவர் ரவூப் ஹக்­கீமும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யு­தீனும் இடம்­பெற்று வந்­துள்­ள­ளனர். ஆனால் தேர்தல் முறைமை மறு­சீ­ர­மைப்­புக்­கான தற்­போ­தைய விஷேட தெரி­வுக்­கு­ழுவில் ஐக்­கிய மக்கள் சக்­தியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபீர் ஹாஷிமும் மற்றும் அமைச்சர் அலி­சப்­ரி­யுமே இடம்­பெற்­றுள்­ளனர். முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை நிபுணர் குழுவில் முஸ்­லிம்கள் எவரும் இடம்­பெ­றாமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தேர்தல் சட்­டங்கள் மற்றும் தேர்தல் முறை­மையில் திருத்­தங்­களை மேற்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழு­வுக்கு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 21 அர­சியல் கட்­சிகள் மற்றும் 155 சிவில் அமைப்­பு­க­ளினால் முன்­மொ­ழி­வுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­கு­ழுவின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற பிரதி செய­லாளர் நாய­க­மு­மான குஷானி ரோஹ­ன­தீர தெரி­வித்தார். குறிப்­பிட்ட முன்­மொ­ழி­வுகள் சமர்ப்­பி­தற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த கால எல்லை கடந்த 15ஆம் திகதி (ஜூலை) யுடன் முடி­வுற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழுவில் பிர­தான இரு முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் உள்­வாங்­கப்­ப­டாமை குறித்தும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களும் புத்­தி­ஜீ­வி­களும் ஏற்­க­னவே விசனம் தெரி­வித்­தி­ருந்­த­துடன் கண்­டனம் வெளியிட்­டி­ருந்­தனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார். இந்­நி­லையில் நேற்று முன்­தினம் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிபுணர் குழுவில் பிர­தான முஸ்லிம் அர­சியல் கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தியோ அல்­லது முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தியோ ஒருவரேனும் நியமிக்கப்படாமை முஸ்லிம் அரசியல் கட்சிகளை நசுக்கும் முயற்சியாகும்.

அரசுக்கு ஆதரவு வழங்கிவரும் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிலைமையினை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிபுணர் குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளை உள்வாங்கிக் கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் என்.எம்.அமீன் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.