இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் உண்மையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டாரா?

0 357

எம்.எப்.எம்.பஸீர்

நவ­ர­சம் என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரின் விவ­காரத்தில் தொடர்ச்­சி­யாக பாதுகாப்பு தரப்பின் சந்தேகத்துக்கு இடமான நட­வ­டிக்­கைகள் நீடிக்­கின்­றன. அஹ்­னாப்பின் கைது, தடுத்து வைப்­புக்கு எதி­ராக சர்­வ­தேச மட்­டத்தில், அதன் சட்ட ரீதி­யி­லான பிர­யோகம் தொடர்பில் கதை­யா­டல்கள் ஏற்­பட்­டன.

இவ்­வா­றான நிலையில் யாருக்கும் தெரி­யாமல் கடந்த ஜூன் 12 ஆம் திகதி அஹ்னாப் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­தாக பின்னர் அறி­விக்­கப்­பட்­டது.

எனினும் அதுவும் இப்­போது சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
அதா­வது, அஹ்னாப் ஜசீம் இது­வரை நீதிவான் ஒருவர் முன்­னி­லையில் நேருக்கு நேர் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை என்ற விடயம் தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது.
கொழும்பு மேல­திக நீதிவான் சந்­திம லிய­ன­கே­யிடம், அஹ்­னாபின் சட்­டத்­த­ரணி இதனை கடந்த 13 ஆம் திகதி முறை­யிட்டு அதனை பதிவு செய்­யு­மாறு கோரி­யி­ருந்தார். எனினும் அதனை பதிவு செய்­யாத நீதிவான் அது தொடர்பில் பிரச்­சினை இருப்பின் உயர் நீதி­மன்­றையோ மனித உரி­மைகள் ஆணைக்குழு­வையோ நாடி நட­வ­டிக்கை எடுக்க முடியும் என தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 9(1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­படும் சந்­தேக நபர் ஒருவர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­படும்போது, தடுப்புக் காவல் காலப்­ப­கு­தி­யி­ல் அவர் தாக்­கப்­பட்­டாரா, சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­னாராபோன்ற விட­யங்கள் நீதிவானால் ஆர­ாயப்­பட்டு , சந்­தேக நபரை மேற்­பார்வை செய்திருந்த வழக்கு ஆவ­ணத்தில் பதி­வுகள் இடப்­ப­டு­கின்­ற­மையை இது வரை நீதி­மன்­றங்­களில் நடந்து வந்த வழ­மை­யான நட­வ­டிக்­கை­யாகும். எனினும் அஹ்னாப் ஆஜர் செய்­யப்­பட்டபோது நீதி­வானால் அவ்­வா­றான பதி­வுக இடப்பட் டதாக அவ­தா­னிக்க முடி­ய­வில்லை என்­கிறார் அஹ்­னாபின் சட்­டத்­த­ரணி.

அதே போல் கடந்த ஜூன் 12 ஆம் திகதி அஹ்னாப் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட முறைமை தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி மன்றில் ஆஜ­ரான சி.ரி.ஐ.டி.யின் வழக்கு நெறிப்­ப­டுத்தல் பிரிவின் அதி­கா­ரி­க­ளுக்கும் தெளி­வான பதி­லி­ருக்­க­வில்லை.
எஸ்.எம். குமா­ர­சிங்க எதிர் சட்ட மா அதிபர், வீர­வன்ச எதிர் சட்ட மா அதிபர் ஆகிய வழக்­கு­களின் தீர்ப்பில், உயர் நீதி­மன்றம் வழங்­யுள்ள வழி­காட்­டல்கள் பின் பற்­ற­ப்பட்டதாக அஹ்னாப் விவ­கா­ரத்தில் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை. எனவே அஹ்னாப் உண்­மை­யி­லேயே நீதிவான் ஒருவர் முன்­னி­லையில் நேருக்கு நேர் ஆஜர் செய்­யப்­பட்டா விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார் எனும் பலத்த சந்தேகம் உரு­வா­கி­டுள்­ளது.

13 ஆம் திகதி வழக்கு விபரம்:
அஹ்னாப் தொடர்­பி­லா­ன வழக்கில் அவரை நீதி­மன்றில் ஆஜர் செய்த சட்ட பிரிவு தொடர்பில் எந்த சட்ட சிக்­கலும் இல்லை என கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் அறி­வித்­தது. கொழும்பு மேல­திக நீதிவான் சந்­திம லிய­னகே இதனை அறி­வித்தார்.
பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்­கப்படும் சந்­தேக நபர்கள் மன்றில் அச்­சட்­டத்தின் 7 (2) ஆவது அத்­தி­யாயம் பிர­கா­ரமே ஆஜர் படுத்­தப்­பட வேண்டும் எனவும், அஹ்­னாபும் அவ்­வாறே ஆஜர் செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் அதிலே எந்த சிக்­கலும் இல்லை என்­பது நீதி­மன்றின் நிலைப்­பாடு எனவும் நீதிவான் அறி­வித்தார்.

அத்­துடன் சந்­தேக நபர் பயங்­கர­வாத தடை சட்­டத்தின் கீழ் மன்றில் ஆஜர் செய்­யப்பட்­டுள்­ளதால், குற்­ற­வியல் நடை­முறை சட்டக்கோவையின் 120 ( 3) ஆம் பிரிவின் கீழ் முன் வைக்க வேண்­டிய சாட்­சி­களின் சுருக்­கத்தை வழங்க வேண்­டிய அவ­சி­யமும் இல்லை என நீதிவான் இதன் போது அறி­வித்தார்.

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச் சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் விசா­ர­ணையின் பின்னர் மன்றில் ஒரு­வரை ஆஜர் செய்யும்போது பெற்­றோ­ருக்கோ சட்­டத்­த­ர­ணிக்கோ அது குறித்து அறி­விக்க வேண்டும் என்ற எந்த நிய­தியும் இல்லை என்­பதால், விசா­ர­ணை­யா­ளர்கள் அவ்­வாறு அறி­விக்­காமை சட்­டத்­துக்கு முர­ணான செய­லாக கருத முடி­யாது எனவும் நீதிவான் சந்­திம லிய­னகே அறி­வித்தார்.

கடந்த ஜூன் 11 ஆம் திகதி வெள்­ளி­யன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்­காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு, மறுநாள் சனிக்கிழமை கொழும்பு, 8 ஆம் இலக்க, நீதிவான் நீதி­மன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இதன்­போது அவ­ருக்கு சட்ட உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள எந்த வாய்ப்பும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை எனவும் இந்த விடயம் 14 ஆம் திக­தியே தெரி­ய­வந்­த­தா­கவும் அஹ்­னாபின் சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர நீதி­மன்­றுக்கு அறிவித்­தி­ருந்தார்.
‘ அஹ்னாப் ஜஸீம் சட்­டத்­த­ர­ணிக்கு தகவல் அளிக்­கு­மாறு கோர­வில்லை என்­பதால் , சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அறி­விக்­க­வில்லை என சி.ரி.ஐ.டி. அதி­காரி குறிப்­பிட்டார். எனினும் சி.ரி.ஐ.டி. பிடியில் சுமார் ஒரு வரு­டத்­துக்கு மேலாக இருந்த அஹ்னாப் விட­யத்தில் அனைத்து வித­மான சட்ட விட­யங்­க­ளையும் அவ­ரது சட்­டத்­த­ரணி எனும் ரீதியில் நானே முன்­னெ­டுத்தேன் என்­பது சி.ரி.ஐ.டி.யின­ருக்கு நன்­றாக தெரியும். அவர்­க­ளுக்கு எழு­திய கடி­தங்கள், பொலிஸ் மா அதிபர், மனித உரி­மைகள் ஆணைக் குழு ஆகி­ய­வற்­றுக்கும் நானே கடி­தங்­களை எழு­தினேன்.

அப்­படி இருக்­கையில் மன்றில் அவரை ஆஜர் செய்யும்போது அவ­ரது சட்­டத்­த­ரணி எனும் ரீதியில் எனக்கு கண்­டிப்­பாக சி.ரி.ஐ.டி. அறி­வித்­தி­ருக்க வேண்டும். அது அவர்­க­ளது கடமை.

அஹ்னாப் ஜஸீமை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 6 (1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் பயங்கர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். இந் நிலையில் அவ்­வாறு கைது செய்­யப்­படுவோர் அச்­சட்­டத்தின் 7 ( 1) ஆம் பிரிவின் கீழ் மன்றில் ஆஜர் செய்­யப்பட்டி­ருக்க வேண்டும். எனினும் 7 (2) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழேயே அவரை ஆஜர் செய்­துள்­ளனர். 7 (1) பிர­காரம் ஆஜர் செய்தால், அங்கு சாட்­சி­களை ஆராய்ந்து ஒரு­வரை விடு­விக்க ஆலோ­சனை வழங்கும் அதி­காரம் சட்ட மா அதி­ப­ருக்கு உள்­ளது. எனவே அதனை தடுக்க சி.ரி.ஐ.டி. இவ்­வாறு நடந்­து­கொண்­டுள்­ளது.’ என சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே அதற்கு சி.ரி.ஐ.டி. அதி­கா­ரிகள் பதி­ல­ளித்­தி­ருந்த நிலையில், அது தொடர்பில் நீதி­மன்றம் தனது நிலைப்­பாட்டை அறி­வித்­தது. இதன்­போதே அஹ்னாப் ஜஸீம் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சி.ரி.ஐ.டி. நடந்­து­கொண்ட முறை­மை சரி­யாது என நீதிவான் அறி­வித்தார்.

முன்­ன­தாக 26 வய­தான கவிஞர் அஹ்னாப், கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை , பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்டில் வைத்து சி.ரி.ஐ.டி. வவு­னியா கிளை பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் கே.கே.ஜே. அனு­ர­சாந்­த­வினால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இதன்­போது அவ­ரது வீட்­டி­லி­ருந்து 50 இற்கும் அதி­க­மான நவ­ரசம் கவிதை தொகுப்பு புத்­த­கங்களும் மேலும் சில புத்­த­கங்­களும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.
முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப் பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேக நபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

எனினும் அவருக்கு எதிராக புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்று தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதாக பிரசாந்த ரத்னாயக்க எனும் ரி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.