உழ்ஹிய்யாவுக்கு தயாராகிய மக்களை பீதிக்குள்ளாக்கிய ‘மாடறுக்க தடை’ கடிதம்

0 392

ஏ.ஆர்.ஏ. பரீல்

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி விவ­கா­ரங்கள் இரா­ஜாங்க அமைச்சு கொழும்பு மாந­கர சபையின் ஆணை­யா­ள­ருக்கு ‘இலங்­கைக்குள் மாட­றுப்­பதை தடை செய்தல்’ எனும் தலைப்பில் அனுப்பி வைத்­தி­ருந்த கடிதம் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சல­ச­லப்­பினை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இலங்கை முஸ்­லிம்கள் உழ்­ஹிய்­யா­வுக்­காக மாடுகள் அறுப்­ப­தற்குத் தயார் நிலையில் அதற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­போதே கொழும்பு மாந­கர சபையின் ஆணை­யா­ள­ருக்கு அக்­க­டிதம் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி விவ­கா­ரங்கள் இரா­ஜாங்க அமைச்சின் செய­லாளர் எஸ்.டி.ஏ.பி.பொர­லெஸ்­ஸ­யினால் இக்­க­டிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கையில் மாட­றுப்­பதை தடை செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. என்­றாலும் கொழும்பு மாந­கர சபை இத்­தீர்­மா­னத்தை மீறி வேறு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. இதனை உட­ன­டி­யாக நிறுத்தி அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­து­மாறு கடி­தத்தில் கோரப்­பட்­டி­ருந்­தது. இக்­க­டிதம் கடந்த 11 ஆம் திகதி அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் ஆளும்­கட்சி மற்றும் எதிர்க்­கட்சி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷவைச் சந்­தித்து இத்­த­டையை நீக்கி முஸ்­லிம்கள் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்ற அனு­மதி வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்­தார்கள். இத­னை­ய­டுத்து பிர­த­மரின் தலை­யீட்­டினை அடுத்தே உழ்­ஹிய்­யா­வுக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது. மாடுகள் அறுப்­ப­தற்கு சம்­பந்­தப்­பட்ட அரச நிறு­வ­னங்கள் அனு­மதி வழங்­கின.

இரா­ஜாங்க அமைச்சின் செய­லா­ளரின் கடிதம்

நகர ஆணை­யாளர்,
கொழும்பு மாந­க­ர­சபை,

இலங்­கையில் மாட­றுப்­பதை தடை­செய்தல்

பிர­த­ம­ரினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள PMO/CM/25/2020 ஆம் இலக்க மற்றும் 2020.07.17 ஆம் திக­தி­யிட்ட அமைச்­ச­ரவை பத்­திரம் மேலும் அ.ம.ப./1404/ 302/ 008—1 இலக்க 2020.10.06 ஆம் திகதி அமைச்­ச­ரவை தீர்­மா­னத்­துக்கு அமை­வாக உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் இலங்­கையில் மாட­றுப்பு தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான அனு­மதி அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தின் படி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு இதற்­காக 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மிருக சட்டம், 1893 –ஆம் ஆண்டின் மிருக வதைச் சட்டம், மாந­க­ர­சபை சட்டம், நக­ர­சபை மற்றும் பிர­தேச சபை சட்டம் என்­ப­வற்றில் திருத்த சட்ட மூலங்கள் தயா­ரித்து அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் மாந­கர சபை­யினால் வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்தால் அத்­தீர்­மா­னத்தை உட­ன­டி­யாக நிறுத்தி அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்­தின்­படி தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறேன் என மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி விவ­கா­ரங்கள் இரா­ஜாங்க அமைச்சின் செய­லாளர் எல்.டி. ஏ.பி. பொர­லெஸ்ஸ வேண்­டி­யுள்ளார்.

கொழும்பு மாந­க­ர­சபை ஏக­ம­ன­தாக தீர்­மானம்.
கடந்த 19 ஆம் திகதி கொழும்பு மேயர் ரோசி சேனா­நா­யக்க தலை­மையில் கூடிய மாந­க­ர­சபை அமர்வில் உழ்­ஹிய்­யா­வுக்­கான மாடு­களை அறுப்­ப­தற்கு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கு­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கொழும்பு மாந­கர சபையின் பிர­தி­மேயர் எம்.ரி.எம். இக்பால் இது தொடர்­பாக முன்­வைத்த பிரே­ரணை ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

உழ்­ஹிய்­யா­வுக்­கான மாடுகள் அறுப்­ப­தற்­கான அனு­மதிப் பத்­தி­ரங்­களை வழங்­கு­வதில் நாம் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்ளோம். 21ஆம், 22 ஆம் திக­தி­களில் அதற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கினோம். ஆனால் 23 ஆம் திகதி (இன்று) நோன்­மதி தினம் என்­பதால் அனு­மதி பத்­திரம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. கொழும்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட வடிகால் கட்­ட­மைப்பு கொண்ட இடங்­களில் மற்றும் மாடு அறுக்கும் மடு­வத்தில் மாடுகள் அறுக்­கப்­பட்டு உழ்­ஹிய்யா நிறை­வேற்­றப்­பட்­டன. நாட்டின் சட்­டத்­திற்­க­மைய மாந­கர சபையின் நிபந்­த­னைகள், சட்­டத்­துக்­க­மைய உழ்­ஹிய்யா நிறை­வேற்­றப்­பட்­ட­தென கொழும்பு மாந­க­ர­ச­பையின் பிர­தி­மேயர் எம்.ரி.எம்.இக்பால் தெரி­வித்தார்.

பள்­ளி­வ­ளா­கங்­களில் குர்­பா­னுக்குத் தடை
இதே­வேளை பள்­ளி­வா­சல்­களின் வளா­கங்­களில் குர்­பா­னுக்கு மிரு­கங்கள் அறுப்­ப­தற்கு அனு­ம­தி­யில்லை என வக்­பு­சபை தெரி­வித்­தி­ருந்­தது. இது தொடர்பில் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளி­னதும் நிர்­வாக சபைக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வக்­பு­ச­பையின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் இது தொடர்பில் சுற்று நிரு­ப­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார்.

பள்­ளி­வாசல் வளா­கங்­க­ளுக்குள் குர்­பா­னுக்­கான மிரு­கங்கள் அறுப்­ப­தற்கு அனு­மதி வழங்­கக்­கூ­டாது என MRCA/A/06/Covid 19 எனும் 13.07.2021 ஆம் திக­தி­யிட்ட சுற்று நிருபம் தெரி­வித்­தது. ‘ நாட்டில் மாட­றுப்­பது தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என குரல் எழுப்­பப்­பட்டு அதற்­கான சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நிலையில் அதற்கு வலுச்­சேர்க்கும் வகையில் நாம் பள்­ளி­வா­சல்­களில் மாடு­களை அறுப்­பதை பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டாது. இவ்­வி­டயம் ஊட­கங்­களில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டும்­போது பெரும்­பான்மை சமூகம் மாட­றுப்­ப­தற்கு எதி­ராக மேலும் குரல் எழுப்பும் என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்’ என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

வக்பு சபையின் தீர்­மானம்
பள்­ளி­வா­சல்­களில் குர்பான் பிரா­ணி­களை அறுப்­ப­தற்கு ஏன் வக்பு சபை தடை­வி­தித்­தது என்­பது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் விளக்­க­ம­ளித்­தி­ருந்தார். பிற சமூ­கத்­தி­னரின் விமர்­ச­னங்கள் மற்றும் கொவிட் நிலை­மை­களை கருத்திற் கொண்டே தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

‘கொவிட் 19 தொற்­றி­லி­ருந்தும் எம்மைக் காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்­கா­கவே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தே­யன்றி சமூ­கத்தை அசெ­ள­க­ரி­யப்­ப­டுத்­த­வேண்டும் என்­ப­தற்­கா­க­வல்ல, மாடுகள் அறுப்­பதை தடை செய்யும் சட்டம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. இச்­சட்­டத்­துக்கு அமைச்­ச­ர­வையின் ஆத­ர­வுண்டு. இந்­நி­லையில் நாம் பள்­ளி­வா­சல்­களை மாடுகள் அறுக்கும் இடங்­க­ளாக உப­யோ­கப்­ப­டுத்­து­வது புத்­தி­சா­லித்­த­ன­மல்ல. உழ்­ஹிய்­யாவை வீடு­களில் அல்­லது வேறு இடங்­களில் சட்ட ரீதி­யான ஆவ­ணங்­க­ளுடன் சுகா­தார அதி­கா­ரி­களின் நிபந்­த­னை­க­ளைப்­பேணி மேற்­கொள்­வதே சிறந்­த­தாகும் என அவர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தேரர்­களின் கோரிக்கை
முஸ்­லிம்­களின் ஹஜ் பெரு­நாளை முன்­னி­றுத்தி 5000 மாடுகள் அறுப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. மாடு­களின் சாணி மூலம் இயற்கை உரம் தயா­ரிக்க முடியும். எனவே மாடுகள் எமது வள­மாகும். மாடுகள் அறுக்­கப்­ப­டக்­கூ­டாது. இவ்­வாறு அறுப்­ப­வர்கள் கைது செய்­யப்­ப­ட­வேண்டும் என முருத்­தெட்­டுவே ஆனந்த தேரர் கோரிக்கை விடுத்­த­மையும் உன்­னிப்­பாக நோக்க வேண்­டி­ய­தாகும்.

கொழும்பு அபே­ராம விகா­ரையில் இடம்­பெற்ற ஊடக மாநா­டொன்­றி­லேயே அவர் இந்தக் கோரிக்­கையை விடுத்­தி­ருந்தார். அத்­தோடு ‘மாடுகள் அறுப்­ப­தற்கு தடை விதித்து அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அரசு இச்­சட்­டத்தை உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்த வேண்டும். மாடு அறுப்­ப­வர்கள் எவ­ராக இருந்­தாலும் அவர்கள் தரா­தரம் பாராது உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட வேண்டும்’ என அவ் ஊடக மாநாட்டில் உரை­யாற்­றிய கப­கொல்­லேவ ஆனந்­த­கித்தி தேரர் தெரி­வித்­துள்­ளமை மாடுகள் அறுக்­கப்­ப­டு­வதன் எதிர்ப்பின் உச்ச நிலையை பறை­சாற்­று­கி­றது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பிர­தமர் சந்­திப்பு
20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ர­வ­ளித்து வாக்­க­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உழ்­ஹிய்யா மாட­றுப்பில் உரு­வா­கி­யி­ருந்த பிரச்­சி­னைகள் தொடர்பில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவை கடந்த திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.
இந்தச் சந்­திப்பில் இரா­ஜாங்க அமைச்சர் ரொஷான் ரண­சிங்­கவும் கலந்து கொண்­டி­ருந்தார். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தரப்பில் ஏ.எல்.எம். அதா­வுல்லா, மர்ஜான் பளீல், காதர் மஸ்தான், எம்.எஸ்.தெளபீக், பைசல் காசிம், அலி சப்ரி ரஹீம், எச்.எம்.எம்.ஹரீஸ், இஷாக் ரஹ்மான், ஹாபீஸ் நஸீர் அஹமட். முஷாரப் முது­நபீன் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட மாட­றுப்பு தடை பற்­றிய சுற்று நிருபம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

குர்பான் மாட­றுப்­புக்கு இவ்­வா­றான பல சவால்­க­ளுக்குப் பின்பே பிர­த­ம­ரினால் அனு­மதி வாய்­மொழி மூலம் வழங்­கப்­பட்­டது. ஆனால் நாட்டில் மாட­றுப்­புக்குத் தடை தொடர்பில் அமைச்­ச­ரவை தீர்­மானம் மீள வாபஸ் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதே வேளை குர்பான் மாட­றுப்­புக்கு ஏதும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் தம்மைத் தொடர்பு கொள்­ளும்­படி சில முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

பிர­த­மரின் உத்­த­ரவு
மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி விவ­கா­ரங்கள் இரா­ஜாங்க அமைச்சின் செய­லாளர் எஸ்.டி.ஏ.பி.பொர­லெஸ்ஸ கொழும்பு நகர ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் இலங்­கையில் மாடு அறுப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளார். இது அமைச்­ச­ர­வையின் தீர்­மானம் எனவும் இந்த அமைச்­ச­ரவைப் பத்­திரம் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவி­னாலே சமர்ப்­பிக்­கப்­பட்­டது எனவும் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லை­யி­லேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து அழுத்தம் பிரயோகித்ததையடுத்து குர்பானுக்கு மாடுகள் அறுப்பதற்கு அனுமதி வழங்குமாறு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களை தனது செயலாளர் மூலம் கோரியுள்ளார். ஆனால் இக்கோரிக்கை எழுத்து மூலமாக விடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த உத்தரவு குர்பானுக்காக மாத்திரமானதாகவே அமைந்துள்ளது.

நாட்டில் மாடுகள் அறுக்கும் தடைச்சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவே தெரிகிறது. பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் மாடுகள் அறுப்பது தடை செய்யப்படவேண்டும் என்பதாகும். இதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமரின் இன்றைய நிலைப்பாடு என்ன? முஸ்லிம் சமூத்துக்கு அவர் விளக்கமளிப்பாரா?

20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகவும் அமைச்சர் உதய கம்பன்பிலவின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும் கையுயர்த்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் மாடறுத்தலுக்கான தடையை பிரதமர் மீளப்பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வார்களா? இல்லையேல் அமைச்சர் பதவிகளுக்காக மெளனித்துப் போவார்களா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.