தொடர்ந்து வரும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த வேண்டும்

15 சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை

0 550

நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் அண்மைக் கால­மாக பதி­வாகி வரும் சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்கக் கோரி 15 க்கும் மேற்­பட்ட சிவில் அமைப்­புகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளன. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாட் பதி­யு­தீனின் கொழும்பு பௌத்­தா­லோக மாவத்­தையில் அமைந்­துள்ள அவ­ரது வீட்டில், வீட்டு வேலை­களை புரி­வ­தற்­காக வேலைக்கு அமர்த்­தப்­பட்ட ஹற்றன் டய­கம பகு­தியைச் சேர்ந்த ஜூட் குமார் இஷா­லினி எனும் சிறுமி கடந்த சனிக்­கி­ழமை (2021.07.03) அன்று அவ­ரது உடலில் பலத்த தீ காயங்­க­ளுடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் 73வது சிகிச்சை அறையில் அமைந்­துள்ள தீவிர சிகிச்சை பிரிவு 2 இல் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்­சைகள் எதுவும் பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

இதனை அடுத்து வழக்­கி­லக்கம் B/52944/2/21 க்கு அமைய கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு குறித்த சட­லத்­தினை பார்­வை­யிடச் சென்ற கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்­தி­ரா­சூ­ரிய குறித்த சிறு­மியின் மரணம் தொடர்­பான பிரேத பரி­சோ­த­னை­களை உரிய முறையில் முன்­னெ­டுக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

குறித்த பாதிக்­கப்­பட்டு மர­ணித்த சிறுமி 2004.11.12 அன்று ஹற்றன் டய­க­மவில் பிறந்­துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாட் பதி­யு­தீனின் வீட்­டுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் வேலைக்கு வரும் போது அச்­சி­று­மிக்கு 15 வயது 11 மாதங்­களே பூர்த்­தி­ய­டைந்­த­வ­ராக இருந்­துள்ளார். அச்­சி­றுமி இறக்கும் போது அவ­ருக்கு வயது 16 வரு­டங்­களும் 8 மாதங்­களும் மட்­டுமே ஆகும். குறித்த சிறுமி வீட்டு வேலைக்­காக குறித்த வீட்­டிற்கு வந்த பின்னர் அவர் தொலை­பே­சியின் ஊடாக சில தட­வைகள் குடும்­பத்­தி­ன­ருடன் தொடர்­பு­களை மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் அவர் வீட்­டிற்கு விடு­மு­றையில் செல்­வ­தற்கு கூட அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என கூறப்­ப­டு­கி­றது. உற­வி­னர்­களை பார்க்­கா­மலே குறித்த சிறுமி மர­ண­ம­டைந்­துள்ளார்.

எமது நாட்டில் வயது 16 வரை பிள்­ளை­க­ளுக்­கான கல்வி கட்­டா­ய­மாக ஆக்­கப்­பட்­டுள்­ள­துடன் அது தொடர்­பாக பிர­தேச அலு­வ­ல­கத்தில் காணப்­படும் அதி­கா­ரிகள் அதா­வது சிறுவர் நன்­ன­டத்தை உத்­தி­யோ­கத்தர், சிறுவர் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், பெண்கள் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் என்று பலர் குடும்­பங்­களில் கண்­கா­ணிப்பை மேற்­கொண்டு பாட­சாலை கல்­வியில் இருந்து வில­கிச்­செல்லும் மாண­வர்­களை பாட­சா­லையில் இணைப்­ப­தற்கு பாட­சாலை சமூ­கத்­துடன் இணைந்து பணி­யாற்ற வேண்­டி­ய­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். இந்­நி­லையில் இந்த சிறு­மி­யி­னது கல்வி இடை­வி­லகல் அவ­தா­னிக்­கப்­ப­டாமல் இருந்­துள்­ள­துடன் குறித்த உத்­தி­யோ­கத்­தர்கள் தமது கட­மையை சரி­வர செய்ய தவ­றி­யுள்­ளனர் என்­பது தெளி­வாக புலப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்­க­ளையும் இளம் ஆட்­க­ளையும் பிள்­ளை­க­ளையும் தொழி­லுக்கு அமர்த்­துதல் சட்­டத்­திற்கு அமை­வாக பொது நன்­மைக்­காக 16 வய­துக்கு மேற்­பட்­டதும் 18 வய­துக்கு இடைப்­பட்­ட­து­மான ஆட்­களை தொழி­லுக்கு அமர்த்­தலாம். ஆனால் அது தொடர்­பாக தொழில் ஆணை­யா­ள­ருக்கு அறி­வித்து அவ­சர நிலை தொடர்­பாக அறி­வித்த பின்­னரே அதனை செய்ய முடியும். இதே சட்­டத்தில் பாட­சா­லைக்கு செல்­வதை தடுப்­ப­தாக அல்­லது உட­லுக்கு பங்கம் விளை­விக்கும் தொழிலில் சிறு­வர்­களை வேலைக்கு அமர்த்த முடி­யாது என சட்டம் தெளி­வாக கூறு­கின்­றது.

இந்­நி­லையில் இச்­சி­றுமி வயது குறைந்த நிலையில் வீட்டு வேலைக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது கல்வி நிலையும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் அவ­ரது பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யின்­படி குறித்த சிறுமி தொடர்ச்­சி­யான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது. எமது தண்­ட­னைச்­சட்­ட­கோ­வையின் பிர­காரம் பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பது மிகவும் பாரிய குற்­ற­மாக காணப்­ப­டு­வ­துடன் இது வேலைத்­த­ளங்­களில் இடம்­பெ­று­வது கண்­டிக்­கப்­பட்டும் வரு­கின்­றது.

இந்த விவ­காரம் சிறு­மியை வேலைக்கு அமர்த்­தி­யது, கல்­விக்கு பங்கம் விளை­வித்­தமை மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை போன்ற பல்­வே­று­பட்ட பார­தூ­ர­மான குற்­றங்­க­ளுடன் பின்­னிப்­பி­ணைந்­த­தாக காணப்­ப­டு­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் குறித்த சிறு­மியின் மர­ணத்­திற்கும் அத­னோடு தொடர்­பு­டைய ஏனைய உரிமை மீறல் குற்­றங்­க­ளுக்கும் தகுந்த வகையில் விசா­ர­ணை­களை நடத்தி குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். குறித்த விசா­ர­ணை­களை சட்­டத்­தினை அமுல்­ப­டுத்தும் தரப்­பினர் பக்­கச்­சார்­பின்­றியும் எந்த ஒரு பின்­புல அழுத்­தங்­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது நடத்த வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் நீதி­யா­னது பல இஷா­லி­னி­களின் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கின்ற ஒன்­றாக அமைய வேண்டும்.

தற்­போ­தைய கொரோனா சூழலில் மக்கள் பொரு­ளா­தார ரீதி­யாக மிகவும் பின்­தள்­ளப்­பட்டு வாழ்­வா­தா­ரத்தை இழந்து காணப்­படும் இந்த சூழலில் குடும்ப மற்றும் பெண்கள் சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் அதி­க­ரித்­துள்ள நிலை­யினை நாம் காண முடி­கின்­றது. இந்த மாதத்தில் இஷா­லி­னியின் வழக்கு உள்­ள­டங்­க­லாக மொத்தம் சிறு­வர்­க­ளுக்­கெ­தி­ரான 4 வன்­மு­றைகள் தொடர்­பான வழக்­குகள் பதி­வா­கி­யுள்­ளன.
1. 15 வயது சிறுமி இணை­ய­வ­ழியில் விற்­பனை செய்­யப்­பட்ட கொடுமை.
2. 16 வயது சிறுமி சட்­ட­வாக்­கத்­துறை பிர­தி­நி­தியின் வீட்டில் வேலைக்கு அமர்த்­தப்­பட்ட நிலையில் தீக்­கா­யங்­க­ளுடன் மரணம்.
3. 14, 12 வயது சொந்த மகள்­களை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய 36 வயது தந்தை.
4. 13 வயது நாவ­லப்­பிட்­டியைச் சேர்ந்த சிறுமி அவ­ளது 7 வயதில் இருந்து சொந்தத் தகப்பன் உட்­பட பல­ரினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்ப்­பட்­டுள்­ளமை.

இவை அனைத்தும் நம் நாட்டில் இம்­மா­தத்தில் இடம்­பெற்ற கொடு­மைகள். சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை மற்றும் பெண்கள், சிறு­வர்கள் நலன் பொலிஸ் பிரிவின் கட்­ட­மைப்பும் சிறு­வர்கள் தொடர்­பான வன்­முறை முறைப்­பா­டுகள் தொடர்­பான பார­பட்சம் காட்­டாமல் நியாயம் கிடைப்­ப­தற்கு கட்­டாயம் நீதி­யுடன் செயற்­பட வேண்டும். காரணம் பய­ணக்­கட்­டுப்­பாடு அமுலில் இருந்த காலப்­ப­கு­தியில் சிறுவர் தொடர்­பான அதி கூடிய வன்­முறை இடம்­பெற்ற போதும் மேற்­கு­றிப்­பிட்ட கட்­ட­மைப்­புக்கள் எதுவும் சீரா­கவும் வினைத்­தி­ற­னுள்ள முறை­யிலும் தங்­க­ளது கட­மை­களை நிறை­வேற்­ற­வில்லை.

பெண்­ணு­ரிமை செயற்­பாட்­டா­ளர்­க­ளாக நாங்கள் பல அணு­கு­மு­றை­களை நாடியும் இந்தக் கட்­ட­மைப்­புக்கள் சீராக இயங்­க­வில்லை. அதனால் சிறு­வர்கள் தொடர்­பான பாரிய வன்­மு­றைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற இந்த கட்­ட­மைப்­பு­க­ளது வினைத்­தி­ற­னற்ற செயற்­பா­டுகள் ஒரு­வ­கையில் வழி­வ­குத்­துள்­ளன. இந்த நிகழ்வின் பின்­ன­ரேனும் இந்தக் கட்­ட­மைப்­புக்கள் அவர்­க­ளது கட­மை­களை சரி­யாக வினைத்­தி­ற­னுள்ள வழியில் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­கக்­கூ­டிய வகையில் செய்ய வேண்டும். மேலும் அதன் துறை சார்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதித்துறை சார்ந்த பல மாற்றங்களை பேசி வரும் கொண்டிருக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களும் சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் தொடர்பான மாற்றங்கள் தொடர்பாகவும் கருத்திற் கொள்ள வேண்டும்.

அதற்­கான செயற்­திறன் மிக்க பொறி­மு­றை­களை உரு­வாக்கி, நீதித்­துறை சார்ந்த கட்­ட­மைப்பில் சிறு­வர்கள் சார்ந்து கையா­ளப்­படும் வழக்­கு­களை கால­தா­ம­த­மில்­லாமல் விரை­வாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு தண்­ட­னை­களை வழங்கக் கூடிய செயல்­மு­றை­களைக் கொண்டு வர வேண்டும். துரி­தப்­ப­டுத்­தப்­பட்ட செயன்­மு­றையை (Expedited process) நடை­மு­றைப்­ப­டுத்தி விரை­வாக நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உதவ வேண்டும். இவ்­வாறு செய்தால் மாத்­தி­ரமே சிறுவர் துஸ்­பி­ர­யோ­கத்­தையும் அவர்­க­ளுக்­கெ­தி­ரான வன்முறைகளையும் இலங்கையில் குறைக்க முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.