வக்பு சபையின் கீழ் மக்தப்கள்

உலமா சபையுடன் உடன்படிக்கை

0 377

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாடெங்கும் இயங்கி வரும் மக்­தப்கள் வக்பு சபையின் கீழ் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. இதற்­கென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் வக்பு சபையும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளன.

ஸூம் செய­லி­யி­னூ­டாக இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது குறிப்­பிட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையின் நகல் தொடர்பில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

ஸூம் கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர், பொதுச் செய­லாளர்,பிர­தம நிர்­வாக அதி­காரி உட்­பட பல உல­மாக்கள் கலந்து கொண்­டனர். வக்பு சபை தலைவர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் உதவிப் பணிப்­பாளர் உட்­பட பல உத்­தி­யோ­கத்­தர்­களும் கலந்து கொண்­டனர்.

குர்ஆன் மத்­ர­ஸாக்கள் இஸ்­லா­மிய சின்­னங்­களில் ஒன்­றாகும். முஸ்லிம் சிறார்­க­ளுக்கு அல்குர் ஆனை ஓதக்­கற்­றுக்­கொ­டுத்து சிறு­வ­யது முதல் அற­நெறி பயிற்­சி­களை வழங்கி அவர்கள் நல்­லொ­ழுக்­க­முள்­ள­வர்­க­ளா­கவும் நற்­பி­ர­ஜை­க­ளா­கவும் உரு­வாக்­கு­வ­தற்­கான அடிப்­படை வழி­காட்­டல்கள் குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு முஸ்­லிமும் நாளாந்தம் குர்­ஆனை ஓதி ஐவேளை தொழு­தாக வேண்டும். நபி (ஸல்) காலம் முதல் வர­லாறு முழு­வ­திலும் உலக வாழ் முஸ்­லிம்கள் முஸ்லிம் சிறார்­க­ளுக்கு குர்ஆன் மத்­ர­ஸாக்­களை உரு­வாக்கி அதனைப் பேணி பாது­காத்து வரு­வதை மிகப்­பெரும் வணக்­க­மாகக் கருதி செய்து வரு­கின்­றனர்.இலங்­கை­யிலும் முன்­னோர்கள் இதனைக் கட்டி வளர்த்து பாது­காத்து வந்­துள்­ளனர். கலா­நிதி நுஃமானின் ஆய்­வின்­படி 1800 களில் 5000க்கும்­மேற்­பட்ட மத்­ர­ஸாக்கள் இயங்கி வந்­துள்­ளன.

எனினும் காலப்­போக்கில் பள்­ளி­வா­சல்கள் அக்­கறை செலுத்­தா­ததன் கார­ண­மாக சிறார்கள் அற­நெறி வாழ்வில் சிறந்து விளங்­க­வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை ஐம்இய்­யத்துல் உலமா சபை 2011 முதல் குர்ஆன் மத்­ரஸா புன­ர­மைப்­புத்­திட்­டத்தை ஆரம்­பித்து ‘மக்தப்’ என்ற பெயரில் நடாத்தி வரு­கின்­றது. மக்­தப்பில் 1200 க்கும் மேற்­பட்ட மஸ்­ஜித்கள் ஊடாக 110,000 சிறார்கள் பயில்­கின்­றனர்.

இந்­நி­லையில் பன்­முக சமூ­கங்கள் வாழும் இலங்­கையில் சிறந்த தலை­மு­றை­யி­னரைக் கட்­டி­யெ­ழுப்ப சிறார்­க­ளுக்­கான இஸ்­லா­மிய அற­நெ­றிப்­பா­ட­சா­லைகள் எனும் திட்­டத்தை வக்­பு­சபை முன்­வைத்­துள்­ளது. இதனை கவ­னத்திற் கொண்டே உலமா சபை மக்தப் புன­ர­மைப்­புத்­திட்­டத்தை கைவிட்டு, மக்தப் புன­ர­மைப்­புத்­திட்­டத்தில் பயன்­பெற்று வரும் சிறார்கள் அனை­வ­ரையும் வக்பு சபையின் ‘இஸ்­லா­மிய அற­நெ­றிப்­பா­ட­சா­லைகள்’ திட்­டத்தில் முழு­மை­யாக உள்­வாங்­கு­வதை கவ­னத்­திற்­கொண்­டுள்­ளது.

2020 மார்ச் மாதம் முதல் அதன் சாதக பாத­கங்கள் தொடர்பில் வக்பு சபையும் உலமா சபையும் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தின. இறு­தியில் இரு­த­ரப்பும் தங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்­றினைச் செய்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தா­கவும் புரிந்­து­ணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் பேணப்படும் காலமெல்லாம் உலமா சபை, வக்பு சபையின் அறநெறிப் பாடசாலைத்திட்டத்துக்கு தனது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.