அஹ்னாப் விவகாரம் விசாரணைகள் பிற்போடப்பட்டன

0 301

கவிஞர் அஹ்னாப் ஜசீ­மிற்கு எதி­ரான வழக்கு கொழும்பு பிர­தான நீதவான் நீதி­மன்­றத்தில் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை விசா­ர­ணைக்கு எழுத்­துக்­கொள்­ளப்­பட்ட நிலையில், விசா­ர­ணைகள் எதிர்­வரும் 13 ஆம் திக­தி­வரை (செவ்­வாய்­கி­ழமை) பிற்­போ­டப்­பட்­டுள்­ளன. அஹ்னாப் ஜசீமை பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தின் 7(1) அல்­லது 7(2) ஆகிய சரத்­துக்­களில் எதன்கீழ் நீதிவான் முன்­னிலையில் ஆஜர்­ப­டுத்­து­வது என்­பது குறித்த தெளி­வைப்­பெறல் மற்றும் அஹ்னாப் ஜசீ­மிற்கு எதி­ரான ஆதா­ரங்­களின் சுருக்­கத்தை சமர்ப்­பித்தல் ஆகி­ய­வற்­றுக்­காக அவர் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு பிர­தான நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.

இதன்­போது எதிர்­வரும் 10 ஆம் திக­தி­யி­லி­ருந்து (சனிக்­கி­ழமை) சிறைச்­சா­லை­க­ளுக்கு கைதி­களின் உற­வி­னர்கள் உள்­ளிட்ட தரப்­பி­ன­ரதும் வரு­கைகள் மற்றும் பார்­வை­யிடல் என்­பன இடை­நி­றுத்­தப்­ப­டு­வது குறித்த அறிக்கை சிறைச்­சாலை அதி­கா­ரி­யினால் நீத­ிமன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. குறித்த அறிக்­கையில் சட்­டத்­த­ர­ணிகள் தமது தரப்பு கைதி­களை அரை­ம­ணித்­தி­யாலம் வரையில் சந்­திப்­ப­தற்கு சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்­தினால் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பான விப­ரங்­களும் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதே­வேளை, அஹ்­னாபை, பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் நீண்­ட­காலம் தடுத்து வைத்­தமை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில், தமது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சே­ப­னை­களை அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் நீதி­மன்­றுக்கு அரி­விக்­கு­மாறு உயர் நீதி­மன்றம் நேற்று சட்ட மா அதி­ப­ருக்கு அறி­வித்­தது.

அஹ்­னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு கடந்த திங்­க­ளன்று பரி­சீ­ல­னைக்கு வந்த போது, நீதி­மன்றம் இதனை அறி­வித்­தது.

அன்­றைய தினம் குறித்த மனு மீதான பரி­சீ­ல­னைகள் உயர் நீதி­மன்ற நீதி­யரசர் ப்ரீத்தி பத்மன் சுர­சேன, எஸ், துறை ராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்­கிய நீதி­யரசர்கள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

அதன்­பின்னர் மன்றில் விட­யங்­களை முன் வைத்த சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, குறித்த மனு தொடர்பில் தமக்கு மட்­டுப்­ப­டுத்­தப்பட்ட ஆட்­சே­ப­னைகள் இருப்­ப­தாக கூறினார். அதனை முன் வைக்க அவ­காசம் வழங்க வேண்டும் என குறிப்­பிட்ட அவர், தற்­போது அஹ்னாப் ஜசீம் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

இதன்­போது அஹ்னாப் ஜசீம் சார்பில் மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கணக ஈஸ்­வரன், அஹ்னாப் ஜசீம் கைது செய்­யப்­பட்­ட­போது , அர­சியல் அமைப்பின் 19 ஆவது திருத்தம் அமுலில் இருந்­தது. அதன் பிர­காரம் ஜனா­தி­பதி அஹ்­னாபை தடுத்து வைக்க தடுப்புக் காவல் உத்­த­ரவில் ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்­டுள்­ளமை சட்ட விரோ­த­மா­னது. அந்த தவறை விளக்­க­ம­றியல் ஊடாக சரி செய்ய முடி­யாது. அவர் விடு­விக்­கப்­பட வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் சட்ட மா அதி­பரின் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சே­ப­னை­களை ஆராய்ந்து அதற்கு பதி­ல­ளிக்­கவும் தயார் என குறிப்­பிட்டார்.

இந் நிலை­யி­லேயே விட­யங்­களை ஆராய்ந்த உயர் நீதி­மன்றம் சட்ட மா அதிபருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன் வைக்க இரு வார கால அவகாசம் வழங்கியதுடன், அதிலிருந்து ஒரு வாரம் முறைப்பாட்டாளர் தரப்புக்கு பதில் வாதங்களை முன் வைக்க சந்தர்ப்பம் அளித்தது, அதன்படி மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும், ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.