காதி நீதிமன்ற முறை பொருத்தமில்லையெனில் குடும்ப நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்கலாம்

ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் நீதியமைச்சருக்கு பிரத்தியேக கடிதம்

0 569

ஏ.ஆர்.ஏ.பரீல்

காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பினுள் இடம்­பெறும் முறை­கே­டுகள், துஷ்­பி­ர­யோகம் கார­ண­மாக காதி நீதி­மன்ற முறைமை ஒழிக்­கப்­பட வேண்டும் என்­பது உட்­பட பல தீர்­மா­னங்கள் அமைச்­ச­ர­வை­யினால் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை நாங்கள் தெளி­வாக புரிந்து கொள்­கிறோம். அதனால் காதி நீதி­மன்ற முறை­மையை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், பலப்­ப­டுத்­து­வ­தற்கும் முஸ்லிம் சட்­டத்தைப் பற்­றிய அறிவைக் கொண்ட, பொறுப்­பான, தகு­தி­வாய்ந்­த­வர்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மி­யுங்கள் என நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­சனைக் குழுவின் உல­மாக்கள் மூவ­ரினால் இக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரப், அஷ்ஷெய்க் முயீஸ் புகாரி என்போர் கையொப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்­ளனர்.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ஆலோ­ச­னைக்­குழு உறுப்­பி­னர்­க­ளாக நாம் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு சில முக்­கிய விட­யங்கள் தொடர்பில் அமைச்­ச­ரவை ஏற்­க­னவே தீர்­மானம் மேற்­கொண்­டி­ருந்­ததால் குறிப்­பிட்ட விட­யங்கள் பற்றி எம்மால் ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

ஒரு சமூ­கத்­திற்கு காதி­நீ­தி­மன்ற முறையை வழங்­கு­வது அனைத்து குடி­மக்­க­ளுக்­கு­மான சமத்­துவக் கொள்­கையை மீறும் என்று அமைச்­ச­ரவை கரு­தினால் அனைத்து சமூ­கங்­களின் தனியார் சட்­டங்­களும், குடும்பம் தொடர்­பான சட்­டங்­களும் ஒரு சிறப்பு அமைப்பின் கீழ் உள்­வாங்­கப்­பட வேண்டும் என நாங்கள் முன்­மொ­ழி­கிறோம். ‘குடும்ப நீதி­மன்­றங்கள்’ என்று அழைக்­கப்­படும் நீதி­மன்­றங்கள் ஏனைய நாடு­க­ளிலும் மிக வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இந்த நீதி­மன்றம் அனைத்து சமூ­கங்­களின் தனியார் சட்­டங்­க­ளுக்கும் தேவை­யான விதி­களை உள்­ள­டக்கி ஒரு விசா­ரணை முறையைக் கொண்­டி­ருக்கும் அதே நேரம் அனைத்து தரப்­பி­னரின் கண்­ணியம், மரி­யாதை மற்றும் தனிப்­பட்ட விட­யங்­களை பாது­காப்­பதாய் அமையும். மேலும் ஒரு தம்­பதி விவா­க­ரத்து வழக்கை தாக்கல் செய்­வ­தற்கு முன்னர் ஒவ்­வொரு சமூ­கத்­திற்கும் ஏற்­ற­மு­றையில் மத்­தி­யஸ்தம் மற்றும் சமூக செயல் முறைகள் மற்றும் குடும்ப பிரச்­சி­னைகள் கையாள தேவை­யான பயிற்­சிகள் நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள் மற்றும் குடும்ப விவ­கா­ரங்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு வழங்­குதல் வேண்டும்.

திரு­மண வய­தெல்லை
திரு­மண வய­தெல்லை 18 என்­பதை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் 16 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுடன் விருப்­பத்­துடன் பாலியல் செயல்­களில் ஈடு­ப­டு­வது சட்­ட­பூர்­வ­மா­னது என்று சட்டம் கூறு­கி­றது. திரு­ம­ணத்­திற்­கான குறைந்த பட்ச வயது 18 ஆக உயர்த்­தப்­ப­டு­வதால் 18 வய­துக்குக் குறைந்த பாலியல் சம்­பந்­த­மான நட­வ­டிக்­கைகள் சட்­ட­வி­ரோ­த­மா­கவும், தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மா­கவும் அறி­விக்­கப்­பட வேண்­டு­மென நாம் முன்­மொ­ழி­கிறோம்.

பல­தார மணம்
அல்­குர்ஆன் நபி (ஸல்) அவர்­களின் சுன்னா மற்றும் இஸ்­லா­மிய நீதித்­துறை ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் தான் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் அமைந்­துள்­ளது என்­பதை குறிப்­பிட விரும்­பு­கிறோம். இந்த ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் பல­தார மணம் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றது. எனவே அனைத்து வித­மான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் அகற்றும் வண்ணம் கடு­மை­யான நிபந்­த­னை­களின் கீழ் இப்பலதார மணத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

ஒரு சமூகத்திற்கு மாத்திரம் இத்தகைய அனுமதி வழங்குவது அனைத்து குடிமக்களினதும் சமத்துவத்தின் கொள்கையை மீறும் என்று அமைச்சரவை கருதினால், பொது திருமண சட்டத்திலும் பலதார திருமணங்களுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.