ஓட்டமாவடி – மஜ்மா நகரில் 750 ஜனாஸாக்கள்

0 427

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘நேற்று வியா­ழக்­கி­ழமை நாட­ளா­வி­ய ­ரீ­தியில் பய­ணத்­தடை அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யினால் ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் விசேட மைய­வா­டியில் கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­ட­வில்லை. பய­ணத்­தடை கார­ண­மாக நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் கொரோனா தொற்று ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வ­டிக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை’ என ஓட்­ட­மா­வடி கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபைத் தவி­சாளர் ஏ. எம். நௌபர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

இன்று வெள்­ளிக்­கி­ழமை ஜனா­ஸாக்­களின் நல்­ல­டக்கம் மீண்டும் ஆரம்­பிக்­கப்­படும் எனவும் கூறினார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், ‘நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை வரை மஜ்மா நகர் மைய­வா­டியில் 750 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.  இவற்றில் 709 ஜனா­ஸாக்கள் முஸ்­லிம்­க­ளு­டை­ய­தாகும். மேலும் கிறிஸ்­த­வர்கள் 16 பேரி­னதும், இந்­துக்கள் 16 பேரி­னதும், பௌத்­தர்கள் 7பேரி­னதும் வெளி­நாட்­ட­வர்கள் 2 பேரி­ன­து­மாக 41 சட­லங்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

ஓட்­ட­மா­வடி பகு­தியில் கொரோனா பரவல் அதி­க­ரித்­தமை கார­ண­மாக மீரா­வோடை மேற்கு, மீரா­வோடை கிழக்கு மற்றும் மாஞ்­சோலை கிராம சேவை பிரி­வுகள் தொடர்ந்தும் இரு வாரங்­க­ளாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தற்­போ­தைய மைய­வா­டியில் விரைவில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­படும் எனக் கரு­தப்­ப­டு­வதால் கிரான் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கும் ஓட்­ட­மா­வடி பிர­தேச சபை அதி­கார எல்­லைக்கும் உட்­பட்ட சாப்­ப­மடு கிரா­மத்தில் அரச காணி­யொன்று இனங்­கா­ணப்­பட்டு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. அக்­கா­ணியை பெற்றுத் தரு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. என்­றாலும் அதற்­கு­ரிய பதில் இது­வரை கிட்­டா­ததால் பிர­தேச சபை நிர்­வாகம் மட்­டக்­க­ளப்பு அர­சாங்க அதி­பரை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது. இதற்­காக நேரம் ஒதுக்கித் தரு­மாறு அர­சாங்க அதி­ப­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அல் நூர் அமைப்பின் அனு­ச­ர­ணை­யுடன் காத்­தான்­குடி நகர சபை இரு கூடா­ரங்­களை அமைத்துத் தந்­துள்­ளது. ஒரு கூடாரம் மைய­வா­டிக்குள் பாது­காப்பு பிரி­வி­னரின் உப­யோ­கத்­துக்கு விடப்­பட்­டுள்­ளது. அடுத்த கூடாரம் மைய­வா­டியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்­ற­ருக்கு அப்பால் ஜனா­ஸாக்­க­ளுடன் வரு­கை­தரும் உற­வி­னர்கள் தங்கி ஓய்­வெ­டுப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு மைய­வா­டிக்குள் பாதுகாப்பு பிரிவினரின் உபயோகத்துக்கு விடப்பட்டுள்ளது. அடுத்த கூடாரம் மையவாடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் ஜனாஸாக்களுடன் வருகைதரும் உறவினர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.