தீவிரவாத சிந்தனைகளிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க சிறுபான்மை கட்சிகள் முன்வரவில்லை

எம்.எச்.முஹம்­மதின் நினைவு தினத்தை முன்­னிட்டு கல்வி அமைச்சர் பேரா­சி­ரியர் பீரிஸ் உரை

0 523

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மறைந்த முன்னாள் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் சிலர் தேசிய அர­சியல் கட்­சி­களில் அங்­கத்­துவம் பெற்று நாட்­டுக்கும், சமூ­கத்­துக்கும் பாரிய சேவை­யாற்­றி­யி­ருக்­கி­றார்கள். மக்­களின் சமூ­கத்தின் தேவை­களை இனங்­கண்டு அவர்­க­ளது எதிர்­பார்ப்­பு­களை உணர்ந்து செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள். இத­னாலே இளை­ஞர்கள் தீவி­ர­வாத கொள்­கை­க­ளின்பால் செல்­ல­வில்லை என கல்வி அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.முஹம்­மதின் 100 ஆவது நினைவு தினம் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், காலம் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எச். முஹம்­மதின் அர­சியல் வாழ்க்கை பின்­பற்­றப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைச்­ச­ராக பதவி வகித்து முஸ்லிம் சமூ­கத்தின் பாராட்­டு­தல்­களைப் பெற்­ற­வ­ராவார். சமூ­கத்­துக்­காக சேவை செய்­வ­தற்­காக தனி­யான இன ரீதி­யி­லான அர­சியல் கட்சி தேவை என அவர் கரு­த­வில்லை. அவர் இன­ரீ­தி­யி­லான அல்­லது சமய ரீதி­யி­லான அர­சியற் கட்­சி­யொன்­றினை உரு­வாக்கிக் கொள்­ள­வில்லை. இதில் அவர் நம்­பிக்கை கொண்­டி­ருக்­க­வு­மில்லை. அவர் எமது நாட்டின் தேசிய அர­சியல் கட்­சி­யொன்றின் மூலமே சேவை­யாற்­றினார்.

இவர் போன்று எமது நாட்டில் மேலும் சிலர் செயற்­பட்­டுள்­ளனர். இவர்­களில் எமது நாட்டின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நீண்ட காலம் சேவை­யாற்­றிய மற்றும் ஏ.சி.எஸ். ஹமீதைக் குறிப்­பி­டலாம். அவர் இன ரீதி­யான, சமய ரீதி­யான அர­சியல் கட்­சியை சார்ந்­த­வ­ராக இருக்­க­வில்லை. அவர் தேசிய அர­சியல் கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­பல உறுப்­பி­ன­ராக இருந்து சேவை­யாற்­றி­யவர். மற்றும் மாக்கான் மாக்­காரின் குடும்­பத்­தையும் இங்கு குறிப்­பிட்டுக் கூறலாம்.

இவ்­வ­கையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்­மதின் அர­சியல் வாழ்க்கை பின்­பற்­றப்­பட வேண்டும். இச்­சந்­தர்ப்­பத்தில் நாட்டில் இயங்­கி­வரும் பல்­வேறு அர­சியல் கட்­சிகள் இன, மத ரீதி­யி­லான அர­சியல் கட்­சிகள் என்­பன நாட்டின் நலனில் அதிக அக்­கறை கொள்ள வேண்டும். ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்­சியில் பல்­வேறு இன உறுப்­பி­னர்கள் பதவி வகித்து சேவை­யாற்­றி­யி­ருக்­கி­றார்கள். முன்னாள் அமைச்சர் தேசிய ரீதியில் ஆற்­றிய சேவை­களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவ­ரது உய­ரிய சேவைகள், செயற்­பா­டுகள் என்­பன பாராட்­டத்­தக்­க­ன­வாகும். அவ­ரது சேவைகள் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கவே இருந்­தன. தீவி­ர­வா­தத்­துக்கு வித்­தி­டப்­ப­ட­வில்லை. நீண்ட காலம் பொரல்லை தொகு­தியின் அங்­கத்­த­வ­ராக இருந்து அனைத்து சமூ­கத்­துக்கும் பாரிய சேவை­களைச் செய்­துள்ளார். பாமர மக்­களின் தேவை­களை உணர்ந்து இனங்­கண்டு அவர் சேவை­யாற்­றினார். மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை அவர் அறிந்­தி­ருந்தார். மக்­களின் தேவைகள் நிறை­வேற்­றப்­பட்­டதால் இளை­ஞர்கள் தீவி­ர­வா­தத்­துக்கு உட்­ப­ட­வில்லை.

எம்.எச்.முஹம்­மதின் சில சேவை­களை இச்­சந்­தர்ப்­பத்தில் குறிப்­பிட்டுக் கூறு­வது அவ­சியம் என்­ப­த­னா­லேயே அவர் பற்­றிய விபரங்களை நான் தெரிவித்தேன்.

நாட்­டி­லுள்ள சிறு­பான்மை கட்­சிகள் இளை­ஞர்­களின் மனதை வெற்றி கொண்டு செயற்­ப­டு­வ­தி­லி­ருந்தும் தூர­மா­யி­ருக்­கி­றார்கள். இந்­நி­லைமை தீவி­ர­வா­தத்தின் வளர்ச்­சிக்கு கார­ண­மாகும். எனவே இந்­நி­லை­மையை உணர்ந்து சிறு­பான்மை கட்­சிகள் செயற்பட வேண்டும் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.