இலங்கையின் பிரபல சிரேஷ்ட ஊடக­வி­ய­லாளர் காதிரி இஸ்­மாயில் அமெ­ரிக்­காவில் கால­மானார்

0 519

ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்­கையில் பிர­பல ஊட­க­வி­ய­லா­ள­ராக பணி­யாற்றி பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­ட­வரும், பின்பு இலங்­கை­யி­லி­ருந்து வஷிங்­ட­னுக்கு குடி­பெ­யர்ந்து மின­சோட்டா பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­றி­ய­வ­ரு­மான காதிரி இஸ்­மா­யிலின் திடீர்­ம­றைவு குறித்து சர்­வ­தேச மட்­டத்­திலும், இலங்­கை­யிலும் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் அனு­தாபச் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளார்கள்.

காதிரி இஸ்­மாயில் இலங்­கையில் பிறந்­தவர். பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆங்­கில மொழியில் பயின்று BA சிறப்புப் பட்டம் பெற்றார். பின்பு கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் MA, PHD பட்­டங்­களைப் பெற்றுக் கொண்டார்.

இவர் 1987 ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்­தி­ரி­கையின் ஊட­க­வி­ய­லாளர் பத­விக்கு விண்­ணப்­பித்தார். அப்­போது அவர் சிறப்புப் பட்­ட­தா­ரி­யாவார். சண்டே டைம்ஸ் பத்­தி­ரி­கையில் இவ­ருக்கு வாராந்தம் பத்தி எழு­து­வ­தற்கும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. இலங்கை – இந்­தியா உடன்­ப­டிக்கை, எல்­ரி­ரி­ஈயின் யுத்தம், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் புரட்சி எனும் கால கட்­டத்தில் இலங்­கையில் அவ­ரது ஊடகப் பணி தொடர்ந்­தது.

எல்­ரி­ரிஈ யினர் தாம் அர­சு­டனும், இந்­திய அமை­திப்­ப­டை­யு­டனும் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை மிகவும் மோச­மாக மீறிய கால­மது. அதனால் இந்­திய அமைதிப் படை தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­தனர். இந்­நி­லை­மையில் இது தொடர்­பான செய்­தி­களை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து சேக­ரித்து அனுப்­பு­வ­தற்கு அவர் பணி­யாற்­றிய ஊடக நிறு­வனம் காதிரி இஸ்­மா­யிலை தெரிவு செய்­தது. காதிரி இஸ்­மா­யிலும் யாழ்ப்­பா­ணத்­துக்குச் செல்­வ­தற்கு உடன்­பட்டார். யாழ் சென்ற காதிரி, முத­லா­வது செய்­தியை கொழும்பு, ஊடக நிறு­வ­னத்­துக்கு அனுப்பி வைத்தார். பின்­னர்­அ­வ­ரி­ட­மி­ருந்து கொழும்­புக்கு எந்தத் தக­வலும் கிடைக்­க­வில்லை.

அவர் எங்­கி­ருக்­கிறார்? அவ­ருக்கு என்ன நடந்­தது? அவர் இந்­திய அமை­திப்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்டு விட்­டாரா? இல்­லையேல் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் பிடி­பட்­டு­விட்­டாரா? என்று ஊடக நிறு­வனம் தேடு­தல்­களைச் செய்­தது.

இலங்கை இரா­ணுவம் மற்றும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் மூலம் காதிரி பற்றி அறிந்­து­கொள்ள அவர் பணி­யாற்­றிய ஊடக நிறு­வனம் முயற்­சி­களை மேற்­கொண்­டது. ஆனால் அவர் தொடர்பில் எந்தத் தக­வலும் கிடைக்­க­வில்லை. இந்­நி­லையில் காதிரி இஸ்­மா­யிலின் தந்­தை­யான சட்­டத்­த­ர­ணடி சகீர் இஸ்­மாயில், குறிப்­பிட்ட ஊடக நிறு­வ­னத்­துக்கு கோபத்­துடன் சென்றார். தனது மகன் தொடர்­பான தக­வல்­களை வின­வினார்.

பின்பு அவர் யாழ் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக தகவல் கிடைத்­தது. இந்­திய அமைதிப் படை­யினர் ஹெலி­கொப்­டரில் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் போரா­ளி­களைத் தேடிச் சென்று துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்ட போது காதிரி இஸ்­மாயில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் டிரக் வண்­டியில் பய­ணித்­துள்ளார். துப்­பாக்கி ரவை­யொன்று அவ­ரது கழுத்தில் பாய்ந்து காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யதால் அவர் யாழ் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கழுத்தை ஊட­றுத்துச் சென்ற துப்­பாக்கி குண்டு காதிரி இஸ்­மா­யிலின் சுவாச குழாய்க்கு அருகில் தங்கி விட்­டது. அக்­குண்­டினை அகற்­றினால் அவ­ரது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் இன்றேல் அவர் மாற்றுத் திற­னா­ளி­யாவார் என வைத்­தி­யர்கள் அறி­வித்­தனர்.

இவ்­வி­பரம் கொழும்பு பத்­தி­ரிகை காரி­யா­ல­யத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டது. இலங்கை இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் அவர் உட­ன­டி­யாக ஆகாய மார்க்­க­மாக கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டார். அவர் மர­ணிக்கும் வரை கழுத்தில் அந்த துப்­பாக்கி குண்­டு­ட­னேயே வாழ்ந்தார்.

பின்பு வாஷிங்­டனில் வாழும் தனது உற­வு­மு­றை­யான சகோ­த­ர­ருடன் வாழ்­வ­தற்­காக அவர் அங்கு சென்றார். 1997ஆம் ஆண்டு மின­சோட்டா பல்­க­லைக்­க­ழ­கத்தில் உதவி ஆசி­ரி­ய­ராக (Professor) இணைந்து கொண்டார். அவர் இணைந்து கொண்ட திணைக்­க­ளத்தில் பல பத­வி­களை வகித்­த­துடன் தலைமைப் பத­வி­யையும் வகித்தார்.

அன்று காதிரி இஸ்­மாயில் தனது நண்­பர்­களைச் சந்­திக்க வரு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார். என்­றாலும் அவ­ருக்கு நண்­பர்­களைச் சந்­திக்கக் கிடைக்­க­வில்லை. அவர் தம்மைச் சந்­திக்க வரா­ததால் நண்­பர்கள் அவ­ருக்கு தொலை­பேசி அழைப்­பு­களை எடுத்­தார்கள். ஆனால் அவ­ரி­ட­மி­ருந்து எந்த பதிலும் கிடைக்­க­வில்லை. அன்று மாலை நண்­பர்கள் அவரைத் தேடி வீட்­டுக்குச் சென்­றார்கள். அங்கு அவ­ரது உயிர் பிரிந்­தி­ருந்­தது.

காதிரி இஸ்­மாயில் பணி­யாற்­றிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், விரி­வு­ரை­யா­ளர்கள், மாண­வர்கள், பீடா­தி­ப­திகள் என பலரும் அவ­ரது மறைவு குறித்து அனு­தாபம் தெரி­விக்­கி­றார்கள். கவலை வெளி­யிட்­டுள்­ளார்கள்.

‘பேரா­சி­ரியர் க்வாதிரி இஸ்­மாயில் வகுப்­ப­றைக்­குள்ளும், வெளி­யிலும் தாராள மனப்­பான்மை கொண்­டவர்’ என அவ­ரது மாண­வர்­களில் ஒரு­வ­ரான மொய்ப் சௌத்ரி தனது டுவிட்­டரில் பதி­விட்­டுள்ளார். ‘அவர் பட்­ட­தாரி மாண­வர்­க­ளுக்­காக குரல் கொடுப்­பதில் அச்சம் கொள்­ளா­தவர். எனக்கு அவர் மிகவும் உதவி செய்­துள்ளார். எமக்கு வழி­காட்­டிய பேரா­சி­ரி­யரை மாண­வர்­க­ளான நாம் இழந்­துள்ளோம்’ எனவும் அவர் குறி­பிட்­டுள்ளார்.

‘காதி­ரியை பத­விக்­காக தெரிவு செய்த குழுவில் நானும் ஒருவன். அவர் அறிவு கூர்மையுள்ளவர் என்பதை அவரது செயற்பாடுகள் மூலம் அறிந்துகொண்டேன். வருடாந்தம் அவரது கற்கை நெறிகளில் மாணவர்கள் பெரிதும் நன்மையடைந்தார்கள். அவரை நாம் இழந்துவிட்டோம்.’ என ஆங்கிலதுறையின் தலைவர் அன்ட்ரூ எல்பென்பில் தெரிவித்துள்ளார்.

காதிரி அறிவுத் திறன் மிக்கவர். சிந்தனையாளர். வியக்கத்தக்க அர்ப்பணிப்புக் கொண்ட ஆசிரியர். தாராளமனப்பான்மை கொண்டவர். அவரது மறைவு பல வகைகளிலும் பாரிய இழப்பாகும் என புவியியல், சூழல், சமூகவியல் துறை பேராசிரியர் வினே கிட்வானி தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.