சவூதி: பள்­ளிவாசலின் வெளிப்­புற ஒலி­பெ­ருக்­கி­களை அதான், இகா­மத்­துக்கு மட்டும் பயன்­ப­டுத்த தீர்­மானம்

0 542

(எம்.ஐ.அப்துல் நஸார்)
பள்­ளி­வா­யல்­களில் உள்ள வெளிப்­புற ஒலி­பெ­ருக்­கிகள் பயன்­ப­டுத்­து­வதை கட்­டுப்­ப­டுத்­து­மாறு சவூதி அரே­பி­யாவின் இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள், அழைப்பு மற்றும் வழி­காட்டல் அமைச்சர் ஷேக் டாக்டர் அப்­துல்­லதீப் பின் அப்­துல்­அஸீஸ் அல்-ஷேக் நாட்­டி­லுள்ள அனைத்து அமைச்சுக் கிளை­க­ளுக்கும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரு சுற்­ற­றிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டதன் மூலம் ஊழி­யர்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கினார்.

மேலும், ஒலி­பெ­ருக்­கி­களின் சத்தம் முழு­மை­யான ஒலி­ய­ளவின் மூன்றில் ஒரு பகு­தியை தாண்­டக்­கூ­டாது. இந்த சுற்­ற­றிக்­கையை மீறு­வோ­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அமைச்சர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

தொழுகை நடத்தும் போது வெளிப்­புற ஒலி­பெ­ருக்­கிகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது அமைச்­சினால் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அமைச்­சரால் இச் சுற்­ற­றிக்கை வெளி­யி­டப்­பட்­டது. இது பள்­ளி­வா­யல்­க­ளுக்கு அரு­கி­லுள்ள வீடு­களில் உள்ள நோயா­ளிகள், வய­தா­ன­வர்கள் மற்றும் குழந்­தை­க­ளுக்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இது தவிர, பள்­ளி­வா­யல்­களின் இமாம்­களின் ஓதல் மற்றும் பாரா­ய­ணங்கள் தொந்­த­ர­வுக்­குட்­ப­டு­கின்­றன. இது பள்­ளி­வா­யல்­களில் உள்ள தொழு­கை­யா­ளி­க­ளுக்கும் பள்­ளி­வா­யல்­களின் சுற்­றுப்­பு­றங்­களில் உள்ள வீடு­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது,

இந்த சுற்­ற­றிக்கை ஷரி­யா­வி­லி­ருந்து பெறப்­பட்ட சான்­று­களின் அடிப்­ப­டை­யிலும் காணப்­ப­டு­கின்­றது, அவற்றில் மிக முக்­கி­ய­மா­னது, அனைத்து தொழு­கை­யா­ளி­களும் சர்­வ­வல்­ல­மை­யுள்ள அல்­லாஹ்­விடம் பிரார்த்­தனை செய்­கி­றார்கள், எனவே அவர்கள் தொழு­கையில் ஈடு­ப­டும்­போது உரத்த பாரா­ய­ணங்­களால் அவர்கள் தொந்­த­ர­வுக்­குட்­ப­டுத்­தப்­படக் கூடாது.

‘மற்­ற­வர்­க­ளுக்கு நீங்கள் தீங்கு செய்­யவோ அல்­லது மற்­ற­வர்­களால் நீங்கள் தீங்கு செய்­யப்­ப­டவோ கூடாது’ என்ற நீதித்­துறை (பிக்ஹ்) கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக இது காணப்­ப­டு­கின்­றது.

தொழு­கையின் போது இமாமின் குரல் பள்­ளி­வா­ய­லுக்குள் உள்ள அனை­வ­ராலும் கேட்­கப்­பட வேண்டும், ஆனால் இஸ்­லா­மிய சட்­டத்தின் பிர­காரம், இமாமின் குரல் வெளியில் உள்ள அயல் வீடு­க­ளுக்கும் கேட்க வேண்டும் என்ற எந்த அவ­சி­யமும் கிடை­யாது.

மேலும், புனித குர்­ஆனை வெளிப்­புற ஒலி­பெ­ருக்­கி­களைப் பயன்­ப­டுத்தி சத்­த­மாக ஓதும்­போது, அந்த வச­னங்­களை யாரும் கேட்­கா­மலும், சிந்­திக்­கா­மலும் இருக்­கும்­போது அதற்கு அவ­ம­ரி­யாதை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இந்த சுற்­ற­றிக்கை மறைந்த இஸ்­லா­மிய அறிஞர் ஷேக் முஹம்­மது பின் சலேஹ் அல்-­ஒத்­தெய்மீன் அவர்கள் வழங்­கிய ‘அதான் மற்றும் இகா­மத்-­உல்-­ச­லாவைத் தவிர வெளிப்­புற ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படக்கூடாது என்ற மார்க்கத் தீர்ப்புக்கு (பத்வா) அமைவாகக் காணப்படுகின்றது,

இது தவிர இந்த சுற்றறிக்கை சிரேஷ்ட மார்க்க அறிஞர்கள் சபை உறுப்பினரும் நிரந்தரக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் சலே அல்-பௌஸான் மற்றும் பல அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.