இந்தியா: பாபரி மஸ்ஜிதைத் தொடர்ந்து மற்றுமொரு பள்ளிவாசல் இடித்து அழிப்பு

0 521

(எம்.ஐ.அப்துல் நஸார்)
இந்­தி­யாவின் உத்­தரப் பிர­தே­சத்­தி­லுள்ள உள்ளூர் நிரு­வாகம் நீதி­மன்ற உத்­த­ர­வையும் புறந்­தள்ளி நூற்­றாண்­டு­கால பழ­மை­யான பள்­ளி­வா­சல் இடிக்­கப்­பட்­டமை முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அயோத்தி நகரில் அமைந்­தி­ருந்த 16 ஆம் நூற்­றாண்டின் பாபரி மஸ்­ஜித்தை கும்­ப­லொன்­றினால் 1992 ஆம் ஆண்டு இடிக்­க­ப்­பட்­டதன் பின்னர் பரா­பங்கி மாவட்­டத்தில் உள்ள ராம் சனேஹி காட் நகரில் 112 ஆண்­டுகள் பழ­மை­யான பள்­ளி­வா­ய­லொன்று இடிக்­கப்­பட்­டுள்­ளமை முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான மிக மோச­மான நட­வ­டிக்­கை­யாகும்.

மே 31 வரை எந்த வித­மான இடிப்புச் செயற்­பா­டு­களும் இடம்­பெறக் கூடாது என உயர்­நீ­தி­மன்றம் ஆணை­யிட்­டி­ருந்த போதிலும், உள்ளூர் நிர்­வாகம் திங்­கட்­கி­ழ­மை­யன்று ‘சட்­ட­வி­ரோத நிர்­மாணம்’ எனத் தெரி­வித்து புல்­டே­ச­ரினால் கட்­ட­டத்­தினை இடித்துத் தள்­ளி­யது.

‘இது பல தசாப்­தங்­க­ளாக மக்கள் தொழு­கையில் ஈடு­பட்­டு­வந்த ஒரு பள்­ளி­வா­ய­லாகும், இந்த இடிப்பு நட­வ­டிக்­கையை எதிர்த்தால் நிரு­வா­கத்­தினால் கைது செய்­யப்­பட்டு பழி­வாங்­கப்­ப­டுவோம் என்ற அச்சம் மக்கள் மத்­தியில் அதிர்ச்­சி­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது’ என பள்­ளி­வா­யலின் குழு உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான முக­மது நாசிம் அரப் நியூ­ஸுக்குத் தெரி­வித்தார்.

‘ஒட்­டு­மொத்த மாநி­லமும் உல­க­ளா­விய தொற்­று­நோய்க்கு எதி­ரான கடு­மை­யான போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்­கும்­போது பள்­ளி­வா­யலை இடிக்க வேண்­டிய அவ­சரம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

இந்­தி­யாவின் மிகப்­பெ­ரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநி­ல­மான உத்­த­ர­பி­ர­தேசம், முஸ்லிம் எதிர்ப்பு உணர்­வுக்கு பெயர் பெற்ற நாட்டின் ஆளும் பார­திய ஜனதா கட்­சியின் (பிஜேபி) அர­சி­யல்­வா­தி­யான யோகி ஆதித்­ய­நாத்தால் நிரு­வ­கிக்­கப்­ப­டு­கி­றது.

எந்தத் தவறும் நிக­ழ­வில்லை எனத் தெரி­வித்­தி­ருக்கும் உள்ளூர் நிரு­வாகம், இடிக்­கப்­பட்ட இடத்தில் பள்­ளி­வாயல் எதுவும் இருக்­க­வில்லை எனவும் தெரி­வித்­துள்­ளது.

‘பள்­ளி­வாயல் எதுவும் இடிக்­கப்­பட்­டது தொடர்பில் எனக்குத் தெரி­யாது’ என பரா­பங்கி மாவட்ட நீதவான் டாக்டர் ஆதர்ஷ் சிங் அரப் நியு­ஸிற்குத் தெரி­வித்தார். ‘இது ஒரு சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்புப் பகுதி’ எனவும் அவர் தெரி­வித்தார்.

‘பள்­ளி­வாயல் பல ஆண்­டு­க­ளாக உப­பி­ரிவு மாவட்ட நீதவான் இல்­லத்­திற்கு முன்னால் பல ஆண­்டு­க­ளாக இருந்­துள்­ளது, அதனை மறுக்க முடி­யாது. அப்­பள்­ளி­வாயல் எப்­படி திடீ­ரென சட்­ட­வி­ரோத கட்­ட­ட­மாக மாறி­யது? இது சுன்னி வக்ப் பிரிவில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என சுன்னி வக்ப் சபையின் தலை­வ­ரான ஸுபர் பாரூக்கி தெரி­வித்தார்.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி மாவட்ட நிர்­வாகம் பள்­ளி­வாயல் நிரு­வாக சபை­யிடம் அதன் உரி­மையைப் பற்றி தெளி­வு­ப­டுத்­து­மாறு கேட்டுக் கொண்­டது. தேவை­யான அனைத்து ஆவ­ணங்­க­ளையும் சமர்ப்­பித்­த­தா­கவும், பள்­ளி­வாயல் ‘இடிக்­கப்­படும் ஆபத்­தினை’ எதிர்­நோக்­கி­யுள்­ளதை உணர்ந்து அதே தினத்தில் உயர் நீதி­மன்­றத்தை நாடி­ய­தா­கவும் நிரு­வாக சபை தெரி­வித்­தது. மாவட்ட நிர்­வாகம் ஆவ­ணங்­களை மட்­டுமே கோரு­வ­தாக நீதி­மன்றம் தெரி­வித்­தது.

அடுத்த மாதம், மாநி­லத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்­தொற்­றுகள் துரி­த­மாக அதி­க­ரித்­ததன் அடிப்­ப­டையில், வெளி­யேற்­றப்­ப­டுதல், அகற்­றப்­ப­டுதல் அல்­லது இடிக்கும் எந்­த­வொரு உத்­த­ரவும் மே 31 வரை இடை­நி­றுத்­தப்­பட வேண்டும் என அல­காபாத் உயர்­நீ­தி­மன்றம் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தது,

‘தொற்­று­நோயை கட்­டுப்­ப­டுத்தத் தவ­றி­யமை பாஜ­கவின் முக்­கிய வாக்கு வங்­கி­யினைப் பாதித்­துள்­ளது, அடுத்த தேர்­த­லுக்கு முன்னர் வாக்­கா­ளர்­களைத் திசை­தி­ருப்ப அவர்கள் மீண்டும் பிரித்­தாளும் அர­சி­யலை நாடு­கின்­றனர்’ என்று லக்னோ மாநில தலை­ந­கரைச் சேர்ந்த சமூக செயற்­பாட்­டா­ள­ரான தீபக் கபீர் தெரி­வித்தார்.

இந்த இடிப்பு சம்­பவம் ‘பள்­ளி­வாயல் மீதான திட்­ட­மிட்ட தாக்­குதல்’, ஏனெனில் அயோத்தி மற்றும் பராபங்கி அண்டை மாவட்டங்களாகும் என லக்னோவை தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் அசாத் ரிஸ்வி தெரிவித்தார்,

‘கொவிட் -19 இன் இரண்டாவது அலைகளை கையாண்ட விதம் தொடர்பில் மத்திய மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு முன்னொருபோதும் இல்லாத வகையில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது,’ என அவர் குறிப்பிட்டார். ‘இன்னும் ஒன்பது மாதங்களில் மாநிலத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளமையை அவர்கள் அறிந்துள்ளதால், தோல்வியைத் தவிர்ப்பதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது’ எனவும் அவர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.