ஜெய்லானி பள்ளி வளாகத்தில் பலவந்தமாக பௌத்த கொடி, வெசாக் கூடுகளால் அலங்கரிப்பு

தமக்கு தெரியாது என்கிறது பள்ளி நிர்வாகம்

0 550

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சுமார் 1200 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பலாங்­கொடை – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல், பள்­ளி­வாசல் நுழை­வாயில், வளாகம், ஸியாரம் என்­பன கடந்த வெசக் பண்­டி­கையின் போது பௌத்த கொடி­க­ளாலும் வெசக் கூடு­க­ளாலும் பல­வந்­த­மாக அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலங்­கா­ரங்­களும், வெசக் கூடு­களும் தொடர்ந்தும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வாசலில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பச்சை நிற கொடிகள் கழற்றி அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலில் பணி­யா­ளர்கள் இல்­லாத சந்­தர்ப்­பத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நெல்­லி­கல வட்­ட­கும்­புற தம்மா ரதன தேரரின் வழி­காட்­டல்­களின் படியே பள்­ளி­வா­சலில் வெசக் அலங்­கா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் தற்­போ­தைய பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஏதும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும், பள்­ளி­வாசல் தலைவர் உட்­பட நிர்­வா­கிகள் பலர் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­டுள்­ளதால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஸ்தம்­பித நிலையை அடைந்­துள்­ள­தா­கவும் அப்­ப­குதி மக்கள் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்­தனர்.

இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தற்­போ­தைய தலைவர் எம்.எஸ்.எம்.நபீ­ஸிடம் ‘விடி­வெள்ளி’ வின­விய போது, ‘தனக்கு எதுவும் தெரி­யாது’ எனத் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை முன்னாள் தலைவி ரொசானா அபு­சா­லியை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­விய போது பள்­ளி­வாசல் அலங்­கா­ரங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்­த­துடன் இது தொடர்பில் தற்­போ­தைய நிர்­வா­கமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

தற்போதைய நிர்வாக சபை வக்பு சபையினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.