முஸ்லிம்களின்றி எத்தீர்வும் முழுமை பெறாது

0 405

ஏ.ஜே.எம். நிழாம்

தம்­மை­விடப் பெரும்­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து அதி­காரப் பர­வ­லைக்­கோரும் தமிழ் தரப்­பினர் தம்­மை­வி­டவும் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு அதி­கா­ரப்­ப­ர­வலை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தா­தி­ருப்­பது என்ன நியாயம் என்­பதால் தான் தந்தை செல்வா 1957ஆம் ஆண்டு திரு­மலை மாநாட்டில் ஒரு தீர்வை முன்­வைத்­தி­ருந்தார். சுமந்­திரன் தந்தை செல்­வா­வைப்போல் ஒரு வழக்­க­றி­ஞரே என்­பதால் அவர் இதைப்­பு­ரிந்து கொள்வார் என நினைக்­கின்றேன். வடக்கு கிழக்கில் தமிழ் ­த­ரப்­பினர் முஸ்­லிம்­க­ளுக்­கான அதி­கா­ரப்­ப­ர­வலை நிர்­ண­யிக்­கா­விட்­டால்­அ­வர்கள் அடைய விரும்பும் தீர்வு முழுமை பெற்­று­வி­டாது.

ஒரு இனப்­பி­ரச்­சி­னைக்­கென முன்­வைக்­கப்­பட்டு அமு­லாகும் தீர்வு இன்­னொரு பிரச்­சி­னைக்கு வித்­திட்­டு­விடும் என்­ப­தற்­கா­கவே நான் அதைக்­கூ­று­கிறேன்.
அதா­வது முஸ்­லிம்­களை புறக்­க­ணித்­து­விட்டு தமி­ழர்க்கு மட்­டுமே வழங்­கப்­படும் தீர்­வா­கவும் முஸ்­லிம்­களை ஒதுக்­கி­விட்டு தமி­ழரே தமக்குள் அடைந்­து­கொள்ளும் தீர்­வா­கவும் அது ஆகி­விடும். உத்­தேச புதிய யாப்பு 1972 ஆம், 1978 ஆம் ஆண்­டு­களின் யாப்­பு­கள்போல் அமை­யாது. தமி­ழ­ரையும் முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­க­வேண்டும். இந்த யாப்­பு­களில் தமி­ழரும் முஸ்­லிம்­களும் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். உத்­தேச புதிய யாப்பு சிங்­க­ள­வரும் தமி­ழரும் இணைந்து முஸ்­லிம்­களை புறக்­க­ணித்­தது என்னும் பழிக்கு உள்­ளாகி வர­லா­றா­கி­வி­டக்­கூ­டாது. தமிழர் பேரளவில் இணைந்து கொள்­வார்­க­ளாயின் பேரி­ன­வா­தத்­தோடு சிங்­க­ளவர் முஸ்­லிம்­களைத் தொல்­லை­க­ளுக்கு உட்­ப­டுத்தி அச்­சு­றுத்­திக்­கொண்­டி­ருப்­பார்­க­ளாயின் முஸ்­லிம்­க­ளுக்கும் ஆன­தாக உத்­தேச புதிய யாப்பு அமை­யாது. முஸ்­லிம்­களைப் புறக்­க­ணித்த இந்­திய இலங்கை ஒப்­பந்­தம்போல் ஆகி­விடும். அரச சார்போ, பேரி­ன­சார்போ, கட்­சி­சார்போ இல்­லா­மல்தான் உத்­தேச பல்­லி­னப்­ பு­திய யாப்பு அமை­ய­வேண்டும். இல்­லா­விட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மல்ல தமி­ழர்­க­ளுக்கும் கூட உத்­தேச புதிய யாப்பில் பார­பட்சம் ஏற்­பட்டு விடும். தமிழ் முஸ்லிம் பகை­யும்­கூட இதில் பேரி­ன­வா­தி­க­ளுக்கு ஏற்­பட்­டு­விடும்.இது பேர­ழி­வுக்கு வாய்ப்­பா­கி­விடும்.

1984 ஆம் ஆண்­டுக்குப் பின் முஸ்­லிம்கள் தனித்­துவ மன­நி­லைக்கு வந்­ததில் வியப்பில்லை. நிறை­வேற்று அதி­கா­ரத்தை பெற்­றி­ருந்த ஜே.ஆரும் ஆயுதம் தரித்­தி­ருந்த தமிழ் ­போ­ரா­ளி­களும் திம்­புவில் முஸ்­லிம்­களைத் தவிர்த்­து­விட்டுப் பேசி­யதும் தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளிகள் ஆயுத முனையில் முஸ்­லிம்­களை அடக்கி ஒடுக்­கி­ய­துமே அதற்கு கார­ணங்­க­ளாகும். முஸ்லிம் தலை­வர்கள் 1985 ஆம் ஆண்டு பெங்­க­ளூரில் தமிழ் ஆயு­தக்­கு­ழுக்­க­ளோடு பேசியும் கூட அவர்கள் மசி­ய­வில்லை.

அவர்கள் வடக்­கையும் கிழக்­கையும் இணைத்து தமது ஆட்­சிக்­கென வழங்க வேண்டும் என்­றார்கள். பல்­லினம் வாழும் கிழக்கை வடக்­குடன் இணைத்து தமிழ் ஆயு­தக்­கு­ழுக்­க­ளிடம் வழங்­கி­விட்டால் என்­னாகும்? கிழக்­கி­லுள்ள சிங்­க­ள­வரும் தமி­ழரும் தமிழ் ஆயு­தக்­கு­ழு­விடம் ஜன­நா­யக உரி­மையை இழந்­து­வி­டு­வார்கள். வடக்கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் 1000 வரு­டங்­க­ளாக ஒன்­றி­ணைந்திருந்த முஸ்­லிம்கள் தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளி­களால் விரட்­டப்­பட்­ட­தையும் கிழக்கில் முஸ்­லிம்கள் பர­வ­லாகக் கொல்­லப்­பட்­ட­தையும் இதற்கு உவ­மை­யா­கக்­காட்­டலாம்.

1889 ஆம் ஆண்­டுக்கு முன் இலங்கை சட்ட நிர்­ணய சபையில் மேல்­மா­காணம் சார்பில் முஸ்­லிம்­க­ளுக்­கு­மாகச் சேர்த்து சேர் பொன் இரா­ம­நா­தனே பிர­தி­நி­தித்­துவம் வகித்தார். இந்­நி­லையில் தான் 1889 ஆம் ஆண்டு அறிஞர் சித்­தி­லெப்பை, அறிஞர் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ், வாப்­பிச்சி மரைக்கார் ஆகி­யோரின் கோரிக்­கைக்கு இணங்க ஆங்­கில ஆட்­சி­யாளர் முஸ்­லிம்­க­ளுக்­கெனத் தனி­யாக எம்.சி. அப்துர் ரஹ்மானை நிய­மித்­தார்கள். இது பிரித்தாளும் தந்­தி­ர­மல்ல. இன ரீதி­யான தேசிய அங்­கீ­கா­ர­மாகும். இது­பற்றி ஆத்­தி­ர­முற்ற சேர் பொன் இரா­ம­நாதன் இலங்கை முஸ்­லிம்­களும் தமி­ழர்­களே. எனவே முஸ்­லிம்­க­ளுக்குத் தனிப்­பி­ர­தி­நி­தித்­துவம் தேவை­யில்லை என எழுதி இங்­கி­லாந்தின் ரோயல் சொசைட்­டிக்கு அனுப்பி வைத்­தி­ருந்தார். உடனே அதை மறுத்து அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் ராம­நா­த­னுக்கு ஒரு மறுப்பு என்னும் நூலை எழுதி முஸ்­லிம்கள் தமி­ழர்­க­ளல்லர் தனித்­துவ சமூ­கத்­தினர் என்­பதைத் தக்க ஆதா­ரங்­க­ளோடு நிரூ­பித்தார். இரண்டும் ஆங்­கில மொழி­யி­லேயே அமைந்­தி­ருந்­தன. முடிவில் அறிஞர் ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் முன்­வைத்த ஆதா­ரங்­களே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

அக்­கா­ல­கட்­டத்தில் சேர் பொன் இரா­ம­நா­தனும் அவ­ரது சகோ­தரர் சேர் பொன் அரு­ணா­ச­லமும் சிங்­கள மக்­களின் தலை­வர்­க­ளா­கவே மதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். சேர் பொன் அரு­ணாசலம் இலங்­கைக்கு சுதந்­திரம் கோரிய தேசிய காங்­கி­ரஸின் தலை­வ­ரா­கவே செயற்­பட்டார்.

அதன்­பி­றகே 1915 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்­லிம்கள் சிங்­களப் பெரும்­பான்­மை­யி­னரால் பலத்த அழி­வுக்கு உள்­ளா­னார்கள். ஆங்­கில ஆட்­சி­யாளர் இரா­ணுவ சட்­டத்­தின்கீழ் அடக்­கி­யி­ருக்­கா­விட்டால் இலங்கை முஸ்­லிம்கள் மிகப்­பெரும் அழி­வுக்கு உள்­ளா­கி­யி­ருப்­பார்கள். அதற்­கென பஞ்சாப் முஸ்லிம் இரா­ணு­வப்­பி­ரிவு வர­வ­ழைக்கப்ப­டா­தி­ருந்தால் முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் இருந்­தி­ருக்­காது. இந்­நி­லை­யில்தான் சேர் பொன் இரா­ம­நாதன் இங்­கி­லாந்­துக்­குப் போய் பஞ்சாப் முஸ்லிம் இரா­ணுவப் பிரிவைத் திருப்பி அழைக்கச் செய்­தி­ருந்தார். இதற்­கு­ரிய நன்­றி­யாக சிங்­களப் பெரும்­பான்மைச் சமூ­கத்­த­லை­வர்கள் அவரைக் கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து தேரில் அம­ர­வைத்து இழுத்து வந்­தி­ருந்­தார்கள். இதனால் முஸ்­லிம்கள் மேலும் ஆத்­தி­ர­முற்­றார்கள். இதுவே தமிழ் முஸ்லிம் பகை­யாக இற்­றை­ வரை நீடித்­தி­ருக்­கி­றது. எனினும் தந்தை செல்வா முஸ்­லிம்­க­ளையும் தனி இன­மாக ஏற்­றி­ருந்தார்.

இலங்கை முஸ்­லிம்கள் தமி­ழரில் ஒரு பிரி­வி­ன­ரல்லர் என அறிஞர் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் நிறு­வி­யது சரிதான். அதற்­காக இலங்கை முஸ்­லிம்கள் சிங்­க­ள­வரில் ஒரு பிரி­வி­னரே என நிறு­வி­யது தவ­றாகும். அவ­ரது இத்­த­கைய கூற்றைச் சிங்­க­ள­வர்கள் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்­களை தம்­பக்கம் சேர்த்துக் கொள்­ளவே ஆத­ரித்­தார்கள். இது­வும்­கூட முஸ்­லிம்கள் சேர் பொன் இரா­ம­நா­தனை வெல்லக் கார­ண­மா­கி­யது. இது பேரி­னத்தால் சீர­ணிக்­கப்­படும் அபத்தக் கருத்­தாகும். அரபுத் தந்­தை­யர்க்கும் சிங்­கள தாய்­மா­ருக்கும் பிறந்த சந்­த­தியே இலங்கை முஸ்­லிம்கள் என்­கி­றார்கள்.அர­பிகள் தமிழ்ப் பெண்­களை மண­மு­டிக்­க­வில்­லையா? அரபுப் பெண்­களை அழைத்­து­ வ­ர­வில்­லையா? சிங்­களப் பெண்­க­ளோடு மட்டும் அவர்­களை ஏன் சம்­பந்­தப்­ப­டுத்த வேண்டும்? சிங்­கள இனத்­தோடு தேசி­யத்தை தொடர்­பு­ப­டுத்­த­வே­யாகும்.

அன்று பேரி­ன­வாத தமிழ் தலை­வர்கள் முஸ்­லிம்­களை சீர­ணிக்க முயன்­றது போலவே தற்­போது பேரி­ன­வாத சிங்­களத் தலை­வர்கள் முஸ்­லிம்­களை சீர­ணிக்க முயற்­சிப்­ப­தாகத் தெரி­கி­றது. சிங்­களம் மட்டும் என்னும் பிரே­ர­ணையை முதன் முதலில் சட்ட நிர்­ணய சபையில் முன்­மொ­ழிந்து சேர் ­மாக்கான் மாக்­காரே உரை­யாற்­றி­யி­ருந்தார். டி.பி.ஜாயாவே சிங்­களத் தலை­வ­ரிடம் நிர்­வாக முகா­மைத்­து­வத்தை வழங்­கு­மாறு சிபா­ரிசு செய்­தி­ருந்தார். சேர் ராசிக் பரீத் தனிச் சிங்­கள சட்­ட­மூ­லத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருந்தார். 29 ஆ என்னும் சிறு­பான்மைக் காப்­பீடு சட்டம் 1972ஆம் ஆண்டு நீக்­கப்­பட்டு பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத மற்றும் சாசன முன்­னு­ரி­மைகள் யாப்பில் இணைக்­கப்­பட்­ட­போது முஸ்லிம் தலை­வர்கள் ஆட்­சே­பிக்­க­வில்லை. முன்னாள் கல்வி அமைச்சர் பதி­யுதீன் மஹ்மூத் சிறு­பான்­மை­யினரின் தனியார் பாட­சா­லை­களை அர­சு­டை­மை­யாக்­கினார். சர்­வ­ க­லா­சாலைக் கல்­வியில் தரப்­ப­டுத்­தலைக் கொண்­டு­வந்து சிறு­பான்­மை­க­ளுக்­கான உயர்­கல்வி வாய்ப்பைக் குறைத்தார். ஆக சேர் பொன் இரா­ம­நா­த­னுக்கு எதி­ரான முஸ்லிம் தலை­வர்­களின் இத்­த­கைய செயற்­பா­டுகள் யாவும் சிங்­களப் பேரி­ன­வா­தத்­துக்கு மேலும் வலு­வூட்­டு­வ­தா­கவே அமைந்­தன. தமிழர் முஸ்லிம் பிளவு இன்­ற­ளவும் தொட­ரவே செய்­கின்­றது. இது சிறு­பான்­மை­க­ளுக்கு மேலும் அழி­வையே தரும்.

இப்­போது மரத்­தி­லி­ருந்து விழுந்­த­வனை மாடு முட்­டி­யது போல் சிங்­களப் பேரி­ன­வா­தி­களும் கூட முஸ்­லிம்­க­ளுக்குக் கொடு­மைகள் இழைக்­கவே செய்­கி­றார்கள். மொழியால் ஒன்­றாக இருந்த போதும் கலிமா சொல்­லி­யி­ருந்த கார­ணத்­துக்­கா­கவே 1000 ஆண்­டுக­ள் இணைந்து வாழ்ந்த முஸ்­லிம்­களை தமிழ் ஆயு­த­தா­ரிகள் வட­மா­கா­ணத்தின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் 1990இல் விரட்­டி­ய­டித்­தார்கள். இப்­போது கலி­மாவை முன்­வைத்தே சிங்­களப் பேரி­ன­வா­திகள் முஸ்­லிம்­களைக் கடு­மை­யாக வறுத்­து­கி­றார்கள். தமிழ் ஆயுதப் போரா­ளிகள் 2009ஆம் ஆண்டு முடக்­கப்­பட்ட புதிதில் ஐநாவில் வாக்­கெ­டுப்­பிலும் வென்ற பின் இதற்­கான எத்­த­னிப்பு வலு­வா­கி­யது.

2011ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­ற விமான குண்­டுத் தாக்­கு­த­லுக்குப் பின் அமெ­ரிக்கா சில அமைப்­பு­களைப் பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளாக அறி­வித்­ததில் புலி­களும் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­ததால் ஐநாவில் இலங்கை வெல்ல முடிந்­தது. அமெ­ரிக்கா சார்­பான முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்குச் சார்­பாக வாக்­க­ளித்­தி­ருக்­கா­விட்டால் அந்த வெற்றி சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­காது. எனினும் 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டின் பாதி வரை இலங்கை வாழ் முஸ்­லிம்கள் சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் கடு­மை­யான கொடு­மை­க­ளுக்கு இலக்­கா­னார்கள். சில பிக்கு அமைப்­புகள் திடீ­ரென உரு­வாகி இதில் முன்­னிலை வகித்­தன. இவற்­றுக்குப் பின்னால் சில மறை கரங்கள் இல்­லாமல் இவை நிகழ வாய்ப்பு இல்லை. இவை குறித்து இது­வரை எந்த விசா­ர­ணை­களும் இல்லை. தண்­ட­னை­களும் இல்லை. தமிழ் தரப்­பி­ன­ருக்­கு­ரி­ய­வற்றை வழங்­கு­வதை விட்டும் நாட்டு மக்களை உள ரீதியில் திசை திருப்­பவும் தமிழ் தரப்பைப் போல் முஸ்­லிம்கள் தலை தூக்­கா­தி­ருக்­க­வுமே முஸ்­லிம்­க­ளு­ட­னான பிரச்­சினை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என எண்ணத் தோன்­று­கி­றது. கிறிஸ்­தவர் மீதான தாக்­குதல் முஸ்லிம் கிறிஸ்­தவர் பகையை உரு­வாக்கி தமிழ் தரப்­பி­ன­ருக்­கான முக்­கிய இலக்கை மழுங்­க­டிப்­ப­தற்­கா­கவும் இருக்­கலாம். தமி­ழ­ருக்குப் பாடம் புகட்டும் செயற்­பா­டா­கவும் இருக்­கலாம். முஸ்­லிம்­களைக் கட்­டுக்குள் வைத்­தி­ருக்கும் செய­லா­கவும் இருக்­கலாம்.

அன­கா­ரிக தர்­ம­பா­ல­வினால் கடந்த நூற்­றாண்டில் விதைக்­கப்­பட்ட பேரி­ன­வாதம் எஸ்.டப்­ளியு. ஆர்.டி. பண்­டாரநாயக்­க­வினால் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்டு தற்­போது மதத்­து­ற­வி­களும் இதில் முன்­னணி வகிப்­பதால் தமிழ் முஸ்லிம் சிறு­பான்­மைகள் அத­ல­பா­தா­ளத்தில் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். சேர் பொன் இரா­ம­நா­தனும் இப்­போது இல்லை. சேர் பொன் அரு­ணா­சலமும் இல்லை. சேர் மாக்கான் மாக்­காரும் இல்லை. டி.பி.ஜாயாவும் இல்லை. சேர் ராசிக் பரீதும் இல்லை. பதி­யுதீன் மஹ்­மூதும் இல்லை. அவர்கள் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­காகத் தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மை­களை சிங்­களப் பெரும்­பான்மைச் சமூ­கத்­தோடு சேர்த்துவிட்­டி­ருந்­தார்கள்.

தற்­போது அவர்­க­ளின்­ அன்­றைய நோக்கம் பாழா­கியே விட்­டி­ருக்­கி­றது. பிற்­கா­லத்தில் இவ்­வாறு நிகழ்­வதைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே ஆங்­கில ஆட்­சி­யாளர் 1948 ஆம் ஆண்டு முழுச் சுதந்­தி­ர­மு­மற்ற டொமி­னியன் சுயா­தீ­னத்தை வழங்கி சிறு­பான்மைக் காப்­பீ­டாக 29 ஆ என்னும் ஷரத்­தையும் தமது சோல்­பரி யாப்­பில் சேர் ஐவர் ஜனிங்ஸ் மூலம் வழங்­கி­யி­ருந்­தார்கள். அந்த யாப்பை 1972ஆம் ஆண்டு சிங்­களத் தலை­வர்கள் மட்டும் கொழும்பு ரோயல் கல்­லூரி நவ­ரங்­க­ஹல மண்­ட­பத்தில் கூடி இரத்து செய்­ததால் தமிழ் முஸ்லிம் சிறு­பான்­மை­களை முழு­மை­யா­கவே முடக்­கி­விட்­டார்கள்.

உத்­தேச புதிய யாப்பு இந்த நிலைப்­பாட்டை மாற்­றி­ய­மைக்க வேண்டும். ஆனால் அதற்­கான எந்த அறி­கு­றி­களும் இது­வரை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. பௌத்த சிங்­க­ள­வ­ரான ஜே.ஆர். 1978ஆம் ஆண்டு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாகத் தன்னை ஆக்­கிக்­கொண்ட போதும் கூட முஸ்லிம்கள் ஆட்­சே­பிக்­க­வில்லை. அந்த அள­வுக்கு பௌத்த சிங்­களத் தலைமை மீது இவர்­க­ளுக்கு அபி­மானம் இருந்­ததே கார­ண­மாகும். 1957ஆம் ஆண்டு தமி­ழ­ரசுக் கட்­சியின் திரு­மலை மகாநாட்டில் கிழக்கில் முஸ்லிம் அலகு எனவும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது அல்­லவா? அது அப்­போது பண்டா செல்வா ஒப்­பந்­தத்தில் இடம் பெற்­றி­ருந்த போதும் பேரி­ன­வா­தி­களின் கடும் எதிர்ப்பின் கார­ண­மாகக் கிழித்­தெ­றி­யப்­பட்­டது. எனினும் சிங்­களத் தலை­வரும் தமிழ்த் தலை­வரும் செய்­தி­ருந்த அந்த ஒப்­பந்­த­மா­னது இலங்கை முஸ்­லிம்­களின் தேசிய உரி­மையை நிரூ­பிப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. அந்த வகையில் அதற்கு மாற்­ற­மாக ஆயு­த­ ரீ­தியில் முஸ்­லிம்­களின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் மறுத்த தமிழ் ஆயுதக் குழுக்­க­ளுடன் இன விவ­காரம் குறித்து திம்பு மாநாட்டில் 1984ஆம் ஆண்டு பேசி­யதன் கார­ண­மாக இலங்கை முஸ்­லிம்­களின் சுய­நிர்­ண­யமும் இறை­மையும் கேள்விக்குள்­ளா­கின.

ஆக, சிங்­களத் தரப்­பினர் அதி­கார ரீதி­யிலும் தமிழ் தரப்­பினர் ஆயுத ரீதி­யிலும் முஸ்­லிம்­களின் தேசிய அடை­யா­ளத்­தையும் அடிப்­படை உரி­மை­க­ளையும் முடக்­கி­யதே முஸ்­லிம்­களின் தனித்­துவ தேசிய உரிமை கோர­லுக்குக் கார­ண­மா­கி­யது. தமிழ் தரப்பின் ஆயுத முனைப்பு ஓய்ந்த பிறகும் கூட முஸ்­லிம்­க­ளுக்கு அவர்கள் முன்­வைக்கும் தீர்வில் தெளிவு இல்லை. முஸ்­லிம்­க­ளுக்­கு­மா­கத்தான் நாம் போரா­டு­கின்றோம் என அப்­போ­தைக்­கப்­போது அவர்கள் சொன்­னாலும் கூட 1957ஆம்­ ஆண்டு திரு­மலை மாநாட்டில் தந்தை செல்வா முன்­வைத்­தது போன்ற ஒரு தீர்வை இது­வரை முன் வைக்­க­வே­யில்லை.

இது­வரை காலமும் முஸ்­லிம்கள் தமி­ழ­ருக்கு எதி­ராக சிங்­க­ள­வ­ரோடு இருந்தார்கள் என்பதையே இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. எக்காரணம் கூறியும் முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுக்கவியலாது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.