சமூகம் ஒன்றை குற்றவாளிகளாகக் காண்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதியை மறுத்தல்

0 624

ஷ்ரீன் அப்துல் சரூர்
(பெண்கள் உரிமைகள் மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்)

கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்­டக்­க­ளப்பின் சியோன் இவான்­க­லிக்கல் தேவா­ல­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலில் முப்­பத்­தி­யொரு பேர் தமது உயிர்­களை இழந்­தனர், அவர்­களில் 14 சிறு­வர்­களும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர். இன்று வரை மூடப்­பட்டுக் காணப்­படும் அத்­தே­வா­ல­யத்தின் கத­வு­களில் “இரா­ணு­வத்தின் கட்­டு­மானத் தளம்” என்ற அறி­வித்தல் ஒட்­டப்­பட்­டுள்­ளது. பலி­யா­ன­வர்­களின் படங்­களைக் கொண்ட பதாதை உட்­புறம் நோக்கித் திருப்­பப்­பட்­டுள்­ளது, வெளிப்­பு­ற­மி­ருந்து அதனைக் காண முடி­யாது. அர­சாங்கம் இது தொடர்பில் சிறிய அள­வி­லேயே செயற்­படும் வேளை தமது குழந்­தையை தாக்­கு­தலில் பறி­கொ­டுத்த சுதாவும் பிர­பாவும் ஏனைய குடும்­பங்­க­ளுடன் இணைந்து கல்­லடிப் பாலம் அருகே இந்த ஏப்ரல் 21 இல் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்­பி­யுள்­ளனர். அண்­மையில் உள்ள காத்­தான்­கு­டியில் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய குடும்­பங்கள் என அரச அதி­கார சபை­களால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 130 முஸ்லிம் சிறுவர் சிறு­மியர் சமூக ஒதுக்­க­லினால் அவ­தி­யு­று­வ­துடன் மிகவும் வறு­மை­யான சூழ்­நி­லை­களில் வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­களில் சிலர் பாட­சா­லை­களில் இருந்து இடை வில­கி­யுள்­ள­துடன் சிலர் உண­வுக்கு கூட சிர­மப்­படும் நிலையில் வாழ்­கின்­றனர்.

இங்கு ஒரு விடயம் தெளி­வாகத் தெரி­கின்­றது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம் பெற்று இரு வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு இன்னும் நீதி கிடைக்­க­வில்லை, அத்­துடன் அவர்­களின் துயரம் மோச­மான ஆட்­சியில் இருந்து மக்­களின் கவ­னத்தை திசை திருப்பப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. பொறுப்­பா­ன­வர்­களை வகை கூற வைப்­பதை அரசு தாம­தப்­ப­டுத்தும் அதே வேளை உரிய தொடர் செயன்­மு­றைகள் எவையும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் அரசு ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் தண்­டித்து வரு­கின்­றது.

கடந்த மார்ச் 12 ஆம் திகதி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் (PTA) கீழ் புதிய ஒழுங்கு விதி­களை அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்றின் மூலம் வெளி­யிட்டார். ‘வன்­மு­றை­யான மட்­டு­மீ­றிய மதக்­கொள்­கை­களைக் கொண்­டி­ருப்­ப­தற்­கெ­தி­ரான தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல்’ எனத் தலைப்­பி­டப்­பட்ட இவ்­வொ­ழுங்கு விதி­களில் “வெவ்­வேறு சமு­தா­யத்­தி­ன­ரி­டையே அல்­லது இன அல்­லது மதத் தொகு­தி­யி­ன­ரி­டையே வன்­மு­றை­யான அல்­லது மத, இன அல்­லது சமு­தாயச் சுமு­க­மின்மைச் செயல்கள் புரி­யப்­ப­டு­தலை அல்­லது தீய எண்ண அல்­லது பகைமை உணர்ச்­சி­களை” விளை­விக்­கின்ற அல்­லது விளை­விப்­ப­தற்கு உட்­க­ரு­து­கின்ற ஆளொ­ரு­வ­ருக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காக “மீள ஒன்­றி­ணைத்தல் நிலை­யங்­களை” உரு­வாக்­கு­வ­தற்கு பாது­காப்பு அமைச்­சுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வர்த்­த­மானி பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் ஏற்­க­னவே கொண்­டுள்ள கடு­மை­யான ஏற்­பா­டு­களை மேலும் வலுப்­ப­டுத்தும்.

இரண்டாம் உலக யுத்­தத்­துக்கு பின்னர் இன மற்றும் மதச் சிறு­பான்­மை­யி­னரை பாரிய அளவில் தடுத்து வைக்கும் நிலை­யங்­க­ளாக அமைந்­துள்ள இர­க­சி­ய­மான “மீள் கற்­பித்தல் நிலை­யங்­களில் சீனாவின் உய்குர், கஸாகாஸ் மற்றும் ஏனைய முஸ்­லிம்கள் அந்­நாட்டு அர­சாங்­கத்­தினால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதை அண்­மைய வரு­டங்­களில் முழு உலகும் அவ­தா­னித்­தது. உய்குர் மக்­களில் மூன்றில் ஒரு பகு­தி­யினர் “மதத் தீவி­ர­வாதச் சக்­தி­களால் மாசு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்” எனவும் அவர்­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக வெறு­மனே தண்­டிப்­ப­தற்கு மேல­தி­க­மாக அவர்கள் கோட்­பாடு ரீதி­யாக சுத்­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என சீன அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

சீனா அரசு மேற்­கொள்ளும் வலிந்த தடுப்­புக்­கா­வல்கள், பய­ணத்­த­டைகள், மதச் செயற்­பா­டு­களை ஒடுக்­குதல் மற்றும் பல­வந்த குடும்ப கட்­டுப்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­டங்கள் போன்­ற­வற்றை ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ‘இன அழிப்பு’ என வர்­ணிக்­கின்­றன. ஐக்­கிய அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம், ஐக்­கிய இராச்­சியம் மற்றும் கனடா போன்­றன இந்தத் தடுப்­புக்­காவல் கொள்­கையை உரு­வாக்­கிய கம்­யூ­னிசக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு தடை­களை விதித்­துள்­ள­துடன் சிங்­ஜியாங் பிர­தே­சத்தில் இருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் தக்­காளி மற்றும் பருத்தி என்­ப­ன­வற்­றுக்கு தடை­க­ளையும் விதித்­துள்­ளன.

சிங்­ஜியாங் பிர­தே­சத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் கொள்­கை­களை இலங்­கையின் சிரேஷ்ட அதி­கா­ரிகள் நியா­யப்­ப­டுத்தும் நிலையில் இலங்­கையும் அவ்­வ­ழி­யினைப் பின்­பற்றும் எனத் தோன்­று­கின்­றது. சீனாவின் “மீள் கல்வி வழங்கும் நிலை­யங்கள்” போன்று புதிய ஒழுங்கு விதி­களின் கீழ் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள முகாம்கள் தெளி­வான நட­வ­டிக்­கை­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­வ­தற்கும் அப்­பாற்­சென்று சிந்­த­னை­களைத் தடை செய்ய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ளன. தற்­கால தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல் வர்த்­த­மானி எதனைத் தடை செய்­கின்­றது என்­பதில் தெளி­வற்­ற­தாக உள்­ள­துடன் ஆதா­ரங்­க­ளற்ற முறையில் காரண காரி­ய­மின்றி ஒரு­வரை குற்­ற­முள்­ள­வர்­க­ளாக மாற்­று­வ­தற்கு ஏற்­ற­தாக உள்­ளது. இது பரந்த பிர­யோகம் மற்றும் அடிப்­படை உரி­மைகள் மறுக்­கப்­படல் என்­ப­வற்­றுக்கு வழி­வ­குக்கும். மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் இலங்கை உச்ச நீதி­மன்­றத்தில் இந்த விட­யங்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர்ந்­துள்­ள­துடன் அவ்­வ­ழக்­குகள் நிலு­வையில் உள்­ளன.

இப்­பு­திய ஒழுங்­கு­வி­திகள் எவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தன்­னிச்­சை­யாக அமுல்­ப­டுத்­தப்­படும் எனக் காண்­பது இல­கு­வா­னது. அவர்கள் ஏற்­க­னவே பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் பெரும் எண்­ணிக்­கையில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். காத்­தான்­கு­டியில் மாத்­திரம் 15 பெண்கள் மற்றும் 02 குழந்­தைகள் உள்­ள­டங்­க­லாக 125 முஸ்­லிம்கள் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 2019 தாக்­கு­தல்­களை அடுத்துக் கைது செய்­யப்­பட்ட அவர்கள் சன நெரிசல் மிக்க தடுப்புக் காவல் நிலை­யங்­களில் வழக்கு விசா­ர­ணைகள் அல்­லது சட்ட உத­விக்­கான அணுகல் எவை­யு­மின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மன்­னாரில் முஸ்லிம் கவி­ஞ­ரான அஹ்னாப் ஜெஸீம் ‘தீவி­ர­வா­தத்தை’ ஊக்­கு­வித்­த­தற்­காக பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் கடந்த வருடம் கைது செய்­யப்­பட்டார். அவரைக் கைது செய்த அதி­கா­ரிகள் அவரின் கவி­தையை ஒரு போதும் வாசித்­தி­ருக்­க­வில்லை. அக்­க­விதை தீவி­ர­வா­தத்தை எதிர்ப்­ப­தா­கவே அமைந்­தி­ருந்­தது. இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை எதிர்த்து எழு­தப்­பட்ட அவ­ரது கவி­தை­யுடன் இணைந்­தி­ருந்த தலிபான் பாணியில் உடை­ய­ணிந்­தி­ருந்த நப­ரொ­ரு­வரின் புகைப்­படம் கார­ண­மா­கவே அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இன்­று­வரை ஜெஸீம் நீதி­ப­தி­யொ­ரு­வரின் முன் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மிகவும் மோச­மான சிறைக் கூடத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அவர் எலிக் கடி­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்ளார். தனது சட்­டத்­த­ர­ணி­யுடன் உரை­யா­டு­வ­தற்கு அவ­ருக்கு 20 நிமிட அவ­கா­சமே வழங்­கப்­பட்­ட­துடன் அவ்­வு­ரை­யா­டலை அதி­கா­ரிகள் ஒலிப்­ப­திவு செய்­தனர். இது இலங்­கையின் சட்ட வழி­முறைக் கொள்­கை­களை மீறும் செய­லாகும்.

புற்று நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள 55 வயது நிரம்­பிய ஜுபை­தியா தற்­போது தங்­காலை கடற்­படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார், அவ­ருக்கு சிகிச்­சைக்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. தடை செய்­யப்­பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பிரச்­சா­ரத்தை ஒரு­முறை செவி­யுற்­ற­தா­லேயே அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். அதே முகாமில் 15 மாதங்­க­ளே­யான யூனுஸ் மற்றும் 12 மாதங்கள் நிரம்­பிய இமாரா ஆகியோர் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள தமது தாய்­மா­ருடன் மழலைப் பரு­வத்தை தடுப்­புக்­கா­வலில் கழிக்­கின்­றனர். யூனுஸின் கையில் எரி காயம் ஏற்­பட்ட போது அது எவ்­வாறு ஏற்­பட்­டது என அவ­னது தாயா­ரினால் தனது உற­வி­னர்­க­ளிடம் கூற முடி­ய­வில்லை, ஏனெனில் அங்கு வருகை தரும் உற­வி­னர்­க­ளுடன் தடுப்­புக்­கா­வலில் உள்ளோர் தனி­யாக உரை­யா­டு­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் முஸ்லிம் சமூ­கத்தின் நிலை மோச­ம­டைந்து காணப்­படும் நிலையில் தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்கும் புதிய ஒழுங்­கு­வி­திகள் நிலை­மை­களை மேலும் மோச­மாக்­கு­கின்­றன. இவ்­வி­திகள் நபர் ஒரு­வரின் வார்த்­தை­களை அல்­லது செயற்­பா­டு­களை அதி­காரி ஒருவர் எதேச்­சை­யாக (அத்­துடன் பெரும்­பாலும் பிழை­யாக) புரிந்து கொள்ளும் நிலையில் அவரைத் தடுத்து வைப்­ப­தற்­கான அதி­கா­ரத்தை கோவைப்­ப­டுத்தி வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

‘புனர்­வாழ்வு’ என்­பதால் கரு­தப்­ப­டு­வது என்ன மற்றும் அதனை அடை­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­படும் வழி­மு­றைகள் என்ன என்­பது பற்றி இங்கு எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. மேலும், அபா­ய­க­ர­மாக, பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ்க் காணப்­படும் நீதித்­துறை மேற்­பார்வை மற்றும் முன்­பா­து­காப்­புகள் என்­பன இவ்­வொ­ழுங்கு விதி­க­ளினால் அகற்­றப்­பட்­டுள்­ளன. பொலிசார், ஒரு­வரைக் காரணம் தெரி­விக்­காமல் கைது செய்ய முடி­வ­துடன் அவர்கள் விசா­ர­ணை­களை அந்­ந­பரைக் கைது செய்­ததன் பின்னர் ஆரம்­பிக்­கலாம். தடுப்புக் காவலில் உள்­ளோ­ருக்கு சட்ட ஆலோ­சனை தடுக்­கப்­பட முடியும் அல்­லது அவர்­க­ளுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­தப்­படும் சான்­றினை பெறு­வ­தற்­கான உரி­மையும் மறுக்­கப்­பட முடியும். சட்­டமா அதிபர் திணைக்­களம் குறித்த நபர் புனர்­வாழ்­வுக்குப் பொருத்­த­மா­னவர் எனக் கரு­தினால் நீதிவான் ஒரு­வரின் அனு­ம­தி­யுடன் குறித்த நபர் ஒரு வரு­டத்­துக்கு (அது இன்­னொரு வரு­டத்­துக்கு நீடிக்­கப்­படும் சாத்­தி­யமும் உண்டு) தடுத்து வைக்­கப்­ப­டலாம். பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் குவான்­ட­னாமோ சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதிகள் கூட எதிரிப் போரா­ளிகள் என்ற தமது நிலை­யினை சவா­லுக்கு உட்­ப­டுத்­தவும் தமது தொடர்ச்­சி­யான தடுத்து வைப்­புக்கு எதி­ராக ஆட்­கொ­ணர்வு எழுத்­தா­ணையைக் கோரவும் உரிமை உள்­ள­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். இலங்­கையில் தடுத்து வைக்­கப்­படும் இலங்கைப் பிர­ஜை­க­ளுக்கு அவ்­வா­றான அடிப்­படை பாது­காப்­புகள் கூட இல்­லாத நிலை உரு­வா­கலாம்.

இவ்­வா­றான பாரிய எண்­ணிக்­கை­யான தடுத்து வைப்­பு­க­ளுக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதிக்கும் இடையில் எவ்­விதத் தொடர்­பு­க­ளு­மில்லை. முஹம்­மது நவ்பர், முஹம்­மது றிஸ்கான் மற்றும் அஹ­மது மில்ஹான் ஆகிய மூன்று பேரும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தூண்­டி­ய­தா­கவும் அதற்கு உடந்­தை­யாக இருந்­த­தா­கவும் கடந்த நவம்பர் 12, 2020 அன்று அமெ­ரிக்க லொஸ் ஏன்ஜல்ஸ் பெடரல் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யது. இம்­மூ­வரும் இலங்கைப் பொலி­சாரின் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினால் (TID) தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை பர­வ­லாக அறி­யப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் ஏப்ரல் 20, 2021 அன்றே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
அண்­மையில் அர­சாங்கம் வெளி­யிட்ட பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி வழங்­குவோர் பட்­டி­யலில் 400 இற்கும் மேற்­பட்ட மனித உரிமை சார்ந்து வாதி­டலில் ஈடு­படும் புலம் பெயர் தமிழ் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் நிறு­வ­னங்கள் உள்­ள­டங்­கி­யுள்ள நிலையில் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என அமெ­ரிக்­கா­வினால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட மூவ­ரி­னது பெயர்­களும் உள்­ள­டக்­கப்­ப­டாமல் இருப்­பது வியப்­புக்­கு­ரி­ய­தாகும். இது இவ்­வா­றி­ருக்க, கடந்த வாரம் காத்­தான்­கு­டியில் தொழி­லாளர் வர்க்­கத்தைச் சேர்ந்த முஹம்­மது இர்பான் என்ற பெயர் கொண்ட நபர் பிர­தான தற்­கொலைத் தாக்­குதல் நபர்­களில் ஒரு­வ­ருக்கு தனது முச்­சக்­கர வண்­டியில் உணவு கொண்டு சென்ற குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்டார்.

இலங்­கையில் இதற்கு முன்­னரும் புனர்­வாழ்வு முகாம்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன, அவை எமக்கு வழங்­கி­யுள்ள உதா­ர­ணங்கள் ஆழ்ந்த கரி­சனை கொண்­ட­ன­வாக அமைந்­துள்­ளன. யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் ஒரு நாளா­வது LTTE அமைப்பின் உறுப்­பி­ன­ராக இருந்த எவரும், அவர் வலுக்­கட்­டா­ய­மாக ஆட்­சேர்க்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவர் புனர்­வாழ்வு முகா­முக்கு அனுப்­பப்­படும் நிலை காணப்­பட்­டது. ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள், யுவ­திகள் மற்றும் சிறு­வர்கள் அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட புனர்­வாழ்வு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டனர். அவர்­களில் பலர் காணாமற் போயினர். ஜெயக்­கு­மாரி என்ற தமிழ்த்தாய் காணாமற் போன தனது மகன் புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட முன்னாள் LTTE போரா­ளிகள் உள்ள புகைப்­படம் ஒன்றில் தோன்­றி­யதைக் கண்­ட­றிந்தார். அவர் அதற்­கான பதில்­களைக் கோரினார், தனது மகன் அர­சாங்க புனர்­வாழ்வு முகாம் ஒன்றில் இருந்­ததை அவர் சுட்­டிக்­காட்­டினார், அவர் அப்­போ­தைய ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளை­யையும் சந்­தித்தார். ஜெயக்­கு­மாரி பயங்­க­ர­வாத சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு அடைக்­கலம் கொடுத்தார் என்ற ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து அர­சாங்கம் அவரைக் கைது செய்து அமை­தி­யாக்­கி­யது. ஒரு வரு­டத்தை சிறையில் கழித்த ஜெயக்­கு­மா­ரியின் பதின்ம வயது மகள் அநாதை இல்லம் ஒன்­றுக்கு அனுப்­பப்­பட்டார். பல குடும்­பங்­க­ளுக்கு “புனர்­வாழ்வு” என்­பது காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தற்கு ஒத்­த­தா­கவே அமைந்­தி­ருந்­தது. அவற்­றுக்­கான விடை­களைத் தேடு­வது தண்­ட­னைக்கு உள்­ளாக்­கப்­படும் விட­ய­மாக அமைந்­தி­ருந்­தது.

பல தமிழ்ப் பெண்கள் அறிந்து கொண்­டதன் படி புனர்­வாழ்வு முகாம்­க­ளுக்கு செல்­ப­வர்கள் இன்­னு­மொரு விலை­யி­னையும் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. பெண்கள் குழுக்கள் மற்றும் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் வடக்­கிலும் கிழக்­கிலும் புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பெண் போரா­ளி­களின் வாழ்வை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உதவும் நோக்கில் அவர்­க­ளுடன் நெருக்­க­மாகச் செயற்­ப­டு­கின்­றனர். இது விசே­ட­மாக 2010 தொடக்கம் 2019 வரை­யான காலப்­ப­கு­தி­களில் நிகழ்ந்­தது. அதி­க­மான பெண்­க­ளுக்கு, விசே­ட­மாக யுத்­தத்­தினால் அங்­க­வீ­ன­முற்­ற­வர்­க­ளுக்கு பாரம்­ப­ரி­ய­மான தமிழ் சமூ­கத்­துடன் மீளி­ணை­வ­தற்­கான வழிகள் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. பாரம்­ப­ரிய பால்­நிலை நெறி­மு­றை­களை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் பாதையைத் தெரிவு செய்த அவர்­க­ளுக்கு சமூக வாழ்வு சவால் மிக்­க­தா­கவே அமைந்­துள்­ளது. சமூ­கத்­தினால் ஒதுக்­கப்­படும் அவர்கள் திரு­மணம் செய்தல், பிள்­ளை­களை வளர்த்தல் மற்றும் கலாச்­சா­ரத்­தினால் ஏற்­கப்­ப­டாத வேலை­களைப் பெறு­வதில் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். புனர்­வாழ்வுக் கொள்­கைகள் உண்­மையில் அவர்­களின் சவால்­களை மேலும் கடி­ன­மாக்­கி­யுள்­ளது. முன்னாள் பெண் போரா­ளி­களை இளம் இரா­ணுவ வீரர்கள் எப்­போதும் சந்­திக்க வரு­வதால் சமூகம் அவர்­களை ஒழுக்­க­மற்­ற­வர்­க­ளாக நோக்­கு­வ­துடன் எதிர்­கா­லத்தில் தாமும் உளவு பார்த்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவோம் என்ற அச்­சத்­தினால் எவரும் அவர்­க­ளுடன் நெருங்­காத நிலையும் காணப்­ப­டு­கின்­றது. “புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள்” என்ற அடை­யாளம் நம்­பிக்­கை­யீ­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன் ஏற்­க­னவே ஓரங்­கட்­டப்­பட்ட சமு­தா­யத்­தினுள் மேலும் பிரி­வி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது, இது குடும்­பங்கள் மற்றும் சமூ­கத்தை பிள­வு­ப­டுத்­து­கின்­றது.

நேற்று தமி­ழர்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர், இன்று முஸ்­லிம்­க­ளுக்கு அந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. சீனாவின் உய்குர் பிர­தே­சத்தைச் சேர்ந்த அனார் சாபித், தான் சீனாவின் மீள் கல்வி வழங்கல் முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்ட போது எவ்­வாறு தனது குடும்பம் “கவ­னிக்­கப்­படும் நபர்கள்” என முத்­திரை குத்­தப்­பட்­டது என விப­ரிக்­கின்றார். அவ­ரது உற­வி­னர்கள் அதி­கா­ரி­க­ளுக்கு மது­பான விருந்து வைக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர் (இது முஸ்­லிம்­களின் வழக்­கா­று­க­ளுக்கு முர­ணா­னது) அத்­துடன் வாராந்த கொடி­யேற்ற நிகழ்­வு­க­ளுக்கு செல்ல நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர் (தமது நாட்­டுப்­பற்றை காண்­பிப்­ப­தற்கு). சாபித் விடு­தலை செய்­யப்­பட்ட பின்னர் அவளின் முன்னாள் நண்­பர்கள் மற்றும் உற­வி­னர்கள் அவ­ளுடன் இடை­வெ­ளியைப் பேணினர், அவ­ளுடன் சேர்­வது தம்­மையும் முகாம்­க­ளுக்குள் தள்ளி விடும் என அவர்கள் அஞ்­சினர் (New Yorker (Feb. 26, 2001), supra). இதை­யொத்த போக்­கு­களை இங்கும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. முஸ்லிம் சமூகம் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களை ஒதுக்­கு­கின்­றது. அவ்­வா­றா­ன­வர்கள் மதத் தீவி­ர­வா­தத்­துடன் கொண்­டி­ருந்த தொடர்­புகள் கார­ண­மாக அல்­லது குற்றப் புல­னாய்வுத் துறையின் தேவை­யற்ற பார்­வைகள் தம்­மீது விழு­வதைத் தவிர்க்கும் நோக்கில் மக்கள் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர். மாவ­னல்­லையில் (கேகாலை மாவட்டம்) அதிக எண்­ணிக்­கை­யான முஸ்­லிம்கள் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் குடும்­பங்கள் குர­லற்ற நிலை மற்றும் தனி­மைப்­ப­டுத்தல் என்­ப­வற்றால் துய­ரு­று­கின்­றன. அவர்­களின் சொந்தச் சமூக மக்கள் கூட அவர்­களைப் பற்றிப் பேசு­வ­தற்கோ அல்­லது அவர்­களைப் பற்­றிய தக­வல்­களைச் சேக­ரிக்க விரும்­பு­வோ­ருக்கு வீடு­களைக் காண்­பிக்­கவோ அச்­சத்­தினால் பின்­வாங்­கினர். இந்த வகையில் புனர்­வாழ்வு முகாம்கள் தடுப்­புக்­கா­வலில் உள்­ள­வரை மாத்­தி­ர­மன்றி அவ­னது அல்­லது அவ­ளது பரந்த சமூ­கத்­திலும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அத்­துடன், நீண்ட கால தடுப்பு வைப்­புகள் காணாமல் ஆக்­கப்­ப­டு­த­லையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன, இதன் விளை­வாக சில குடும்­பங்கள் உடை­வ­துடன் அவர்கள் எப்­போதும் விடை­களைத் தேடிக்­கொண்­டி­ருக்கும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர்.

தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல் முத­லா­வது படி­நிலை மாத்­தி­ரமே. கடந்த ஏப்ரல் 13 அன்று அர­சாங்கம் 11 நிறு­வ­னங்­களை தேசிய பாது­காப்பு அடிப்­ப­டையில் தடை செய்யும் புதிய பயங்­க­ர­வாதத் தடைச் சட்ட ஒழுங்கு விதி­களை அறி­முகம் செய்­தது. ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் குவைதா அமைப்­பு­க­ளுடன் வேறு­பட்ட தவ்ஹீத் ஜமாத் குழுக்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­புள்­ளவை எனக் கரு­தப்­படும் கொடை நிறு­வ­னங்­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இக்­கு­ழுக்­களில் சில பயங்­க­ர­வா­தத்­துடன் நிச்­ச­ய­மான தொடர்­பு­களைக் கொண்­டி­ருக்கக் கூடும், அத்­துடன் அவ்­வா­றான தொடர்­புகள் பற்றி ஒழுங்­கான மற்றும் சட்ட ரீதி­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். எவ்­வா­றா­யினும், 11 முஸ்லிம் நிறு­வ­னங்கள் தடை செய்­யப்­பட்­டமை அவற்­றினைப் பின்­பற்­றிய பலர் புனர்­வாழ்வு முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­படும் அச்­சு­றுத்­த­லையும் உரு­வாக்­கி­யுள்­ளது. உள்ளூர் மதக் குழுக்­களை சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளான ISIS மற்றும் அல் குவைதா போன்­ற­வற்­றுடன் ஒன்­றாகக் கரு­து­வது மேற்­கு­லகில் வளர்ந்து வரும் இஸ்­லாத்தின் மீதான வெறுப்­பு­ணர்வை (இஸ்­லா­மோ­போ­பியா) இலங்­கை­யிலும் வளர்ப்­ப­தற்கு அர­சாங்கம் மேற்­கொள்ளும் உத்­தி­யொன்­றா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது. மேலும், இப்­பட்­டி­யலின் உள்­ள­டக்கம் மாறு­வ­தற்கும் இட­முள்­ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவின் ஆட்­சிக்­கா­லத்தில் 16 தமிழர் புலம் பெயர் அமைப்­புக்கள் மற்றும் 424 தனி நபர்கள் “பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­ய­ளித்தல்” என்ற அடிப்­ப­டையில் தடை செய்­யப்­பட்­டன. அடுத்து வந்த அர­சாங்­கத்­தினால் பல பெயர்கள் அப்பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன. அவை மீண்டும் இவ்வருடம் மீள பட்டியலில் உட்புகுத்தப்பட்டன. இவ்வருடம் வெளிவந்த ஆவணத்தில் முதல் தடவையாக 50 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பெயர்கள் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டன. அவ்வாறு தடை செய்யப்பட்ட பின்னர் தனிநபர்கள் தமது தடையை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு, பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்ட நிறு­னங்­க­ளு­ட­னான தமது உறுப்­பு­ரி­மையை மறுப்­ப­தற்கு, அல்­லது உண்­மையில் குறித்த குழு பயங்­க­ர­வாதத் தொடர்­பு­களைக் கொண்­டுள்­ளதா எனக் கேள்­வி­களை எழுப்­பு­வ­தற்கு சில வழிகள் மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றன. எந்­த­வித நீதி மேற்­பார்­வை­யு­மின்றி அவர்­களின் சுதந்­திர நட­மாட்டம் மற்றும் ஒருங்­கி­ணைதல் என்­ப­வற்­றுக்­கான உரி­மை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது. இந்­நிலை ஏற்­ப­டு­வ­தற்கு அர­சாங்கம் தேசிய பாது­காப்பை மேம்­ப­டுத்தல் என்ற கூற்றே போது­மா­ன­தாக உள்­ளது.

தற்­கா­லத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் நாட்டை விட்டு வெளி­யே­றுதல் அல்­லது சுய தணிக்­கை­யினைப் பின்­பற்­றுதல் போன்ற தெரி­வு­க­ளையே மேற்­கொள்­கின்­றனர். விசா­ர­ணை­யா­ளர்கள், அர­சியல், சமூக மற்றும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் தாக்­கு­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். பரந்த தடை செய்யும் அதி­கா­ரங்கள் எதிர்ப்­பு­களை இல்­லா­ம­லாக்க பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான சாத்­தியம் தென்­ப­டு­கின்­றது. குழு­வொன்றின் தடையை சவா­லுக்கு உட்­ப­டுத்த, அல்­லது குற்றம் சாட்­டப்­பட்ட உறுப்­பு­ரி­மைக்கு எதி­ராக வாதிட குறைந்த சிவில் தளம் அல்­லது உத்­தி­யோக பூர்வ பொறி­மு­றைகள் காணப்­ப­டாத நிலையில் அண்­மைய ஒழுங்கு விதிகள் அதி­காரத் துஷ்­பி­ர­யோகம் மற்றும் அடிப்­படை சிவில் உரி­மை­களை மட்­டுப்­ப­டுத்தல் என்­ப­வற்­றுக்­கான வழி­க­ளா­கவே நோக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

சுருக்­க­மாகக் கூறு­வ­தாயின், பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் மோச­மா­னது, மேலும் அண்­மைய தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்கல் ஒழுங்­கு­வி­திகள் அதை இன்னும் மோச­மாக்­கி­யுள்­ளது. இலங்கை அபா­ய­க­ர­மான வழி­யொன்றில் பய­ணிக்­கின்­றது, உண்­மை­யான பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் வகைப் பொறுப்புக் கூறு­வதில் இருந்து பாது­காக்­கப்­பட்டு சிறு­பான்மைச் சனத்தொகை ஒன்று பாரிய அளவில் தண்டிக்கப்படுகின்றது.

மோசமான தாக்குதல் நடந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கெளரவத்துடன் நடத்தப்படுவதுடன் முறையான நீதி துரிதமாக வழங்கப்படவும் வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.