ஹிஜாஸ் கைதாகி ஒரு வருடம் நிறைவு

விடுவிக்குமாறு மன்னிப்பு சபை கோரிக்கை

0 390

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கைது செய்­யப்­பட்டு நேற்று முன்­தினம் 14 ஆம் திக­தி­யுடன் ஒரு வருடம் பூர்த்­தி­யா­கின்­றமை தொடர்பில் சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் தெற்­கா­சிய அலு­வ­லகம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

உரிய சட்ட ரீதி­யான பொறி­மு­றை­க­ளின்மை, நியா­ய­மான நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளின்மை, குடும்­பத்­தி­ன­ரையும் சட்­டத்­த­ர­ணி­க­ளையும் சந்­திப்­ப­தற்­கான வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டாமை ஆகி­ய­வற்­றுடன் எந்­த­வி­த­மான நம்­ப­க­மான ஆதா­ரங்­க­ளு­மின்­றியும் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டாமல் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார் என்றும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் தெற்­கா­சிய அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் ஹிஜாஸ் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும் என்றும் மன்­னிப்புச் சபை கோரி­யுள்­ளது.

2020 ஏப்ரல் 14 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவின் வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.