ஊழல்வாத அரசியலுக்கு இனியும் இடமில்லை
வெறுமனே ஆட்சியாளர் தலைகளை மாற்றிக்கொண்டு வழமையான ஊழல்வாத அரசியலை செய்ய இனியும் இடமளிக்க கூடாது. இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் பலத்தைக்கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றமொன்றை செய்வதே எமது இலக்கு என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். ஜனநாயக மாற்றத்தையும், அதேபோல் ஜனாதிபதிகள் வசமிருந்த மக்களின் சொத்துக்களை மக்கள் மயமாக்கிக் காட்டுகின்றோம் எனவும் அவர் வாக்குறுதி…