தங்­களை பாது­காக்­கு­மாறு மஹிந்த தரப்பினர் கோரினர்

ஒக்­டோபர் அர­சியல் கிளர்ச்­சி­யின்­போது சுதந்­திரக் கட்­சியை கைவிட்டு மொட்­டுவுடன் இணைந்த சிலர் பாரா­ளு­மன்­றத்தில் எந்த கட்­சியைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­கி­றார்கள் என்று சபா­நா­ய­கரால் கேள்­வி­யெ­ழுப்­பப்பட்­டது. அதன்­போது மஹிந்த ராஜபக் ஷவுடன் அவ­ரது தரப்­பினர் என்னை சந்­தித்து அவர்­களை பாது­காக்­கு­மாறு கோரி­னார்கள். அவர்­களை நாமே பாது­காத்தோம். இன்றும் அவர்­களை நாமே பாது­காத்துக் கொண்­டி­ருக்­கின்றோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் சீவலி மைதா­னத்தில்…

சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்க தயார்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஐக்­கிய தேசிய முன்னணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கினால் அவருக்காகத் தமது ஆத­ரவை வழங்கத் தயா­ரென ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன.  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் நேற்று முன்­தினம் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். இதே­வேளை, அன்­றைய தினம் இரவு அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் கொழும்பு இல்­லத்தில் இந்த சந்­திப்பு…

அவுஸ்திரேலியாவின் முதலாவது முஸ்லிம் திரைப்பட விழா பேர்த்தில் ஆரம்பம்

முஸ்­லிம்கள் பற்­றிய கதை­களை அல்­லது முஸ்­லிம்­களால் படைக்­கப்­பட்ட கதை­களை உள்­ள­டக்­கிய முத­லா­வது முஸ்லிம் திரைப்­பட விழா அவுஸ்­தி­ரே­லி­யாவின் பேர்த்தில் இவ்­வார இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய ஊட­க­மான எஸ்.பி.எஸ். தெரி­வித்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு சுவா­ரஷ்­ய­மாக இருக்­கு­மென நாம் நினைத்­தோமோ அந்த விட­யங்­களை உல­கெங்­கி­லு­முள்ள முஸ்­லிம்­களின் திரைப்­ப­டங்­களின் மூலம் பார்க்கும் சந்­தர்ப்­பத்­தினை வழங்­கு­வதும் உல­கெங்­கி­லு­முள்ள முஸ்­லிம்­க­ளுக்கு ஆர்­வ­முள்ள தலைப்­பு­களை உள்­ள­டக்கும்…

பள்ளிவாசலில் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் கிரிஸ்ட்சேர்ச் வாராந்த நடை பவனி

ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யிலும் பாரா­ளு­மன்றப் படிக்­கட்­டுக்­களில் ஒன்­று­கூடும் சிறு குழு­வினர், கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 51 முஸ்­லிம்­களை நினை­வு­கூரும் வகையில் கிரிஸ்ட்சேர்ச் வீதியில் நடந்து செல்­கின்­றனர். பாரா­ளு­மன்றப் படிக்­கட்­டுக்­களில் ஒன்­று­கூடும் அவர்கள் பொவன் வீதிச் சந்­தி­வரை சென்று வைட்டோர் வீதிக்கு இறங்கி பின்னர் கட­லோ­ர­மாக நடந்து வந்து டீயி பபா­வினை நோக்கி செல்­கின்­றனர். அவ்­வி­டத்­திற்கு அவர்கள் வந்து சேர்ந்­ததும் 51 நிமி­டங்கள் தமது தலை­களைத்…