உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய விசாரணை ஆணைக்குழு நியமித்தார் ஜனாதிபதி
4/21 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் இந்த ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல்…