கோப் குழு முன் ஆஜராகுமாறு ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அவரின் மகன் ஹிராஸுக்கும் அழைப்பு
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் பற்றிகலோ கெம்பசின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வையும் அவரின் மகனையும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி அரச நிறுவனங்கள் தொடர்பான விசாரணைக்குழுவான கோப் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோப் குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு நேற்று முன்தினம் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் இருவரும் வெளிநாடு சென்றிருப்பதால் கோப் குழுவின் முன்னால் ஆஜராகவில்லை.…