யானைகளின் மர்ம மரணங்கள் தும்பிக்குளம் காட்டில் சோதனை
ஹபரனை - ஹிரிவட்டுன, தும்பிக்குளம் காட்டில் 7 பெண் யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் கீழ் சீகிரிய வனஜீவராசிகள் அலுவலகம் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யானைகளின் மரணத்தின் பின்னணியில் பாரிய குற்றமொன்று இருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் அதுதொடர்பில் விசாரணைகள் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான…