சமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது?
நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிறு சிறு இனவாத தாக்குதல் சம்பவங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த வாரம் மாத்தறை மாவட்டத்தின் கிரிந்த பிரதேசத்திலும் நேற்று முன்தினம் அவிசாவளை, நாபாவலவிலும் இடம்பெற்ற சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.