போதிய சட்­டங்கள் இன்­மையே சுயா­தீன தேர்­தலை நடத்த சவால்

தேர்தல் வன்­மு­றைகள் தொடர்பில் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு வலு­வான சட்­டங்கள் இல்­லா­மையும், நடை­மு­றையில் இருக்­கின்ற சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதில் உள்ள தாம­த­முமே சுதந்­தி­ர­மா­னதும், நீதி­யா­ன­து­மான தேர்­தல்­களை நடத்­து­வதில் காணப்­ப­டு­கின்ற முதன்­மை­யான சவா­லாகும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தி­ருக்­கிறார்.  மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் கண்­கா­ணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றிய காலஞ்­சென்ற துசிதா சம­ர­சே­க­ரவை…

திரு­மலை சண்­மு­கா­: புதிய ஆசி­ரி­யைகளும் அபாயா அணிந்து செல்ல எதிர்ப்பு

ஆசி­ரி­யை­க­ளாக நிய­மனம் பெற்று திரு­கோ­ண­மலை சண்­முகா தேசிய பாட­சா­லைக்கு சென்­றுள்ள மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு அபாயா அணிந்து செல்­வதில் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் கல்­வி­யியற் கல்­லூரி டிப்­ளோ­மா­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. இதன்­போது நிய­ம­னம்­பெற்ற மூன்று முஸ்லிம் ஆசி­ரி­யைகள் கட­மை­களை பொறுப்­பேற்க கடந்த 20 ஆம் திகதி குறித்த பாட­சா­லைக்கு அபாயா அணிந்து சென்­ற­போது, அதி­பரால் அபாயா அணிந்­து­வர முடி­யா­தெனக் கண்­டிப்­பாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.…

வஹா­பிஸம், அர­பு­ம­ய­மா­த­லுக்கு எதி­ராக நட­வ­டிக்கை வேண்டும்

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை பூர்த்தி செய்­துள்ள பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு, அதன் இறுதி அறிக்­கையில் வஹா­பிஸம் மற்றும் அரபு மய­மாதல் போன்­ற­வற்­றினால் ஏற்­படும் பாதிப்­பு­களைத் தடுப்­பது குறித்த சிபா­ரி­சு­களை முன்­வைக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் இடம்­பெற்ற தெரி­வுக்­கு­ழுவின் கூட்­டத்­தி­லேயே இது­கு­றித்து ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக ஆங்­கில ஊட­க­மொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. குழுவின் தலை­வரும் பிரதி…

கிழக்கு மாகாண பாடசாலைகளில் 3C, 2S திட்டமும் தட்டுத்தடுமாறும் கல்விப் புலமும்

க.பொ.த. (உ/த) வகுப்புகளுக்கு அனுமதி பெறும் தகைமைகள் தொடர்பில் தேசிய நியமங்களுக்கு முரணாக, கிழக்கு மாகாணத்தில் புதிய நியமங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இதனால் கிழக்கு மாகாண அதிபர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். உயர்தர வகுப்புகளுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள இம்முரண்பாடுகள் தொடர்பில், தேசிய நியமங்களைப் பின்பற்றுவதா ? அல்லது மாகாண அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படும் மாகாண நியமங்களைப் பின்பற்றுவதா என்ற தீர்மானச் சிக்கலில் பாடசாலைகளின் நிர்வாகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அத்துடன்…