சஜித்தின் மேடையில் டாக்டர் இல்லியாஸ்

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் மேடையில் சுயேச்­சை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் முன்னாள் பார­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் இல்­லியாஸ் நேற்­றைய தினம் ஏறினார்.

அதுரலியே ரதன தேரர் உள்ளிட்டவர்களின் கோரிக்கைக்கு அமையவே பொது மன்னிப்பு

ரோயல் பார்க் கொலை குற்­ற­வா­ளிக்கு மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு மதத் தலை­வர்கள் மற்றும் உயர் நீதி­மன்ற நீதி­ப­திகள் உள்­ளிட்ட பலர் எழுத்து மூலம் விடுத்­தி­ருந்த கோரிக்­கை­க­ளுக்கும் பரிந்­து­ரை­க­ளுக்கும் அமை­யவே குறித்த குற்­ற­வா­ளிக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கி­ய­தாக ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு நேற்று விடுத்த ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் மாத்திரம் முகத்தை திறந்துகொண்டால் போதும்

தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு வரு­கை­தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்­ள­வர்­க­ளாக இருந்தால் முகத்தை மூடி வரலாம். ஆனால், வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு முகத்தை திறந்து அடை­யா­ளப்­ப­டுத்­தினால் போது­மா­ன­தென்று தேர்தல் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ன­ஜீவன் ஹூல் தெரி­வித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடக்கும் என நான் கூறவில்லை

குறிப்­பிட்­ட­தொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிக்கும் தீவி­ர­வாத சக்­திகள் நவம்பர் 16 ஆம் திகதி தேர்­த­லுக்குப் பின்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை மீள ஆரம்­பிக்கக் கூடு­மென தான் தெரி­வித்­த­தாக ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திகள் அப்­பட்­ட­மான பொய் எனவும் அவ்­வா­றான கருத்­தினை தான் ஒரு­போதும் வெளி­யி­ட­வில்லை எனவும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முன்னாள் இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.