உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை.
சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படுகொலை - இன, மத நல்லிணக்கம் - அறிதலும் புரிதலும்’ என்பதாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.