மரண தண்­ட­னை­யி­லி­ருந்து அப்துல் ரஹீமை காப்­பாற்ற 34 கோடி ரூபா திரட்­டிய கேரள மக்கள்

சவூதி அரே­பி­யாவில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கேர­ளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்­றி­ணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்­டிய சம்­பவம் அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

புனித உம்ரா மற்றும் சுற்றுலா மன்றம் ஏப்ரல் 22ஆம் திகதி மதீனா நகரில் நடைபெற தீர்மானம்

உம்ரா யாத்திரை மற்றும் சவூதிக்கான வருகைகள் தொடர்பான தொடக்க மன்றம் ஒன்றை வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நடாத்த, சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சகம் தீர்மானித்துள்ளது. மதீனா பிராந்திய ஆளுநரான இளவரசர் சல்மான் பின் சுல்தான் பின் அப்துல்அஸீஸ் தலைமையில், மன்னர் சல்மான் சர்வதேச மாநாட்டு மையத்தில் இம் மன்றம் நடைபெறவுள்ளது.

மஹர பள்ளிவாசல் விவகாரம் : புதிதாக விசாரணை நடாத்தி சுமுகமான தீர்வு பெற்றுத் தருக

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து மஹர சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள, சிறைச்­சாலை வளா­கத்­தினுள் அமைந்­துள்ள மஹர ஜும்ஆ பள்­ளி­வாசல் தொடர்பில் புதி­தாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்து சுமு­க­மான தீர்­வொன்­றினைப் பெற்­றுத்­த­ரு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வாகம் வக்பு சபையின் தலை­வரைக் கோரி­யுள்­ளது.

காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பான மீளாய்வு சபை மீண்டும் இயங்கும் சாத்தியம்

தேசிய வீட­மைப்பு அதி­கார சபையின் கீழ் உள்ள உடை­மை­களில் (வீடு மற்­றும்­காணி) குடி­யி­ருப்போர் மற்றும் உரிமை கோருவோர் தொடர்பில் தக­ரா­றுகள் எழும்­போது அவை­பற்றி விசா­ரித்த பின்னர், வீட­மைப்பு ஆணை­யாளர் மேற்­கொள்­கின்ற தீர்­மா­னத்தில் திருப்­தி­ய­டை­யாத பட்­சத்தில் அவை சம்­பந்­த­மாக முறை­யீடு செய்­வ­தற்கு முடி­யாத விதத்தில் மீளாய்வு மேன்­மு­றை­யீட்டு சபைக்கு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­டா­தி­ருந்­த­மை­யினால் கடந்த காலங்­களில் அந்தச் சபை முற்­றாகச் செய­லி­ழந்­தி­ருந்­தது.