இறையன்பை இலக்காகக் கொண்ட இளமைப்பருவம்

மனித வாழ்வின் மூன்று பிர­தான கட்­டங்­களில் இளமைப் பருவம் என்­பது அல்­லாஹ்வின் மிகப்­பெரும் ஓர் அரு­ளாகும், இப்­ப­ரு­வத்தின் சிறப்­பையும் பெறு­ம­தி­யையும் அறிந்து கொள்ள, முதலில் நாம் இறைச்­செய்­தி­களை அவ­தா­னிக்க வேண்­டி­யி­ருக்­கி­றதுஇலக்காகக் . அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறு­கிறான் ; அல்­லாஹ்தான் உங்­களைப் பல­வீ­னத்­தி­லி­ருந்து படைத்தான். பின்பு, அவனே பல­வீ­னத்தின் பின்னர் பலத்தை ஏற்­ப­டுத்­தினான். பின்பு, பலத்தின் பின்னர் பல­வீ­னத்­தையும் (முது­மையின்) நரை­யையும் அவன் ஏற்­ப­டுத்­தினான். அவன் நாடு­வதைப் படைப்பான். அவன்…

மறுமைக்காக வாழும் மனிதனின் பார்வையில் மரணம்

உலகில் பிறந்த ஒவ்­வொரு மனி­த­னுக்கும் மரணம் என்­பது நிச்­ச­ய­மா­னது. உல­கி­லுள்ள எந்த தரப்­பி­னரும் கருத்­து­வேற்­று­மைக்கு இட­மின்றி உறு­தி­யாக ஏற்­றுக்­கொண்ட ஒரு விடயம் மரணம் மட்­டுமே. உலகில் பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் அதனை சுவைத்தே தீர­வேண்டும் என்­ப­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். ஆனால், அந்த மரணம் பற்­றிய யதார்த்­த­மான பார்­வையும் அதற்குப் பின்­னா­லுள்ள உண்­மை­யான வாழ்வு பற்­றி­யுமே மனி­தர்­களில் பல தரப்­பினர் அறி­யா­மையில் உள்­ளனர். மரணம் உறு­தி­யா­னது என்­ப­தனை பல குர்­ஆ­னிய வச­னங்­களும் நபி­மொ­ழி­களும் எமக்கு…

அர்ஷின் நிழலை அடைய அல்லாஹ்வுக்காக அன்பு கொள்வோம்

அன்பு கொள்­ளுதல், நேசம் பாராட்­டுதல் போன்­ற­வை­யெல்லாம் இவ்­வு­லகில் இரண்டு வித­மான கார­ணங்­க­ளுக்­கா­கவே நடை­பெ­று­கின்­றன, ஒன்று தன்­னைப்­ப­டைத்த ரப்புல் ஆல­மீ­னா­கிய அல்­லாஹ்­வுக்­காக. மற்­றது உலக இலா­பங்­க­ளுக்­காக என்று எம்மால் வகைப்­ப­டுத்த முடியும், இதில் முத­லா­வது வகையே இஸ்­லாத்தில் ஊக்­கு­விக்­கப்­பட்ட வணக்க வழி­பா­டாக கரு­தப்­ப­டு­கி­றது, அதுவே அல்­லாஹ்வின் அன்­பையும் அரு­ளையும், நாளை மறுமை நாளில் அல்­லாஹ்­வு­டைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்­லாத அந்த சந்­தர்ப்­பத்தில் அவ­னது அர்ஷின் நிழலைப் பெற்றுத் தரும்…

மிம்பர் அருள் நிறைந்த ஓர் அமானிதம்

மிம்பர் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் பரிபூரணத்தன்மையையும் அதன் முழுமையான வாழ்க்கைத் திட்டத்தையும் அது இந்த உலகத்திற்கு சொல்கின்ற தூதுச் செய்தியையும் எடுத்துரைப்பதற்கான மிகப்பெரும் பெறுமதி வாய்ந்த ஓர் ஊடகமாகும். இந்த ஊடகம் விலைமதிப்பற்றது, இங்கு பேசப்படுகின்ற செய்திகள் வானவர்களால் சூழப்பட்ட ஒரு சபையை நோக்கியே பேசப்படுகின்றன, அல்லாஹ்வின் அருளும் அமைதியும் இறங்கிக் கொண்டிருக்கும் உயர்ந்த சபையை நோக்கியே பேசப்படுகின்றன. மிம்பரும் மிம்பரில் கதீப் உரையாற்றுவதற்காக வழங்கப்பட்டிருக்கும் நேரமும் அமானிதங்களாகும். அதுபற்றி…