பாகிஸ்தானின் மூன்றிலொரு பங்கு நீரில் மூழ்கியது

பாகிஸ்தான் என்­று­மில்­லா­த­வாறு வர­லாறு காணாத வெள்ள அனர்த்­தத்தில் சிக்­குண்­டுள்­ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்­சியை விடவும் பயங்­க­ர­மா­ன­தாகும். நாட்டின் மூன்­றி­லொரு பாகம் தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ளது.

அசரிகம பள்ளிக்கு விசேட நிர்வாக சபை

அநு­ரா­த­புரம் அச­ரி­கம ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை முன்னெடுப்பதற்கு தற்­போ­தைய நிர்­வாக சபைக்குப் பதி­லாக விஷேட நிர்­வா­கி­களை நிய­மிப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது.

சிறுபான்மை மக்கள் தாம் சிறுபான்மையினர் என்ற மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும்

‘இந்­நாட்டு மக்கள் அனை­வரும் சம­மா­ன­வர்­களே. எங்­க­ளுக்குள் ஏற்­றத்­தாழ்வு மற்றும் வேறு­பா­டுகள் கூடாது. சிறு­பான்மை மக்கள் தாம் சிறு­பான்­மை­யினர் என்ற மனோ நிலை­யி­லி­ருந்தும் விடு­ப­ட­வேண்டும். நாங்கள் எம்மை இனம், மதம், குலம் என்ற ரீதியில் வேறு­ப­டுத்திக் கொள்­கிறோம். இது தவறு. பெரும்­பான்மை மக்கள் சிறு­பான்­மை­யுடன் ஒன்­றாக இணைந்து வாழ வேண்டும். இவ்­வா­றான நிலைமை மூலமே எமது நாட்­டைக்­ கட்­டி­யெ­ழுப்ப முடியும்’ என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏரான் விக்­கி­ர­ம­ர­த்ன தெரி­வித்தார்.

மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் அசாதாரண முறையில் அதிகரிப்பு

அனைத்து மத ஸ்­த­லங்­க­ளுக்­கு­மான மின் கட்­டணம் அசா­தா­ரண முறையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மதஸ்­த­லங்­களின் மின் பாவனை 180 அல­கு­க­ளுக்கு மேற்­பட்டால் தற்­போ­தைய கட்­ட­ணத்தை விட 691 வீதம் அதி­க­மாக செலுத்­த­வேண்­டி­யுள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று ஆற்­றிய உரை­யின்­போது சுட்டிக் காட்­டினர்.