கொவிட் ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோத்தா!

நாட்டில் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்த கோத்­தா­பய ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் மாத்­தி­ர­மல்ல தமிழ் சமூ­கமும் பல்­வேறு நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குள்­ளா­கின. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை அடக்கி ஒடுக்கும் செயற்­திட்­டங்­க­ளி­லேயே அவர் கவனம் செலுத்­தினார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் எமது சமூகம் பீதி­யு­டனே காலத்தை கடத்­தி­யது.

நாசர் வைத்தியசாலையில் பலஸ்தீன டாக்டர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை

“நாங்கள் கண்கள் கட்­டப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்டு பல­வந்­த­மாக ஆடை­யினைக் களையச் செய்து இஸ்­ரே­லியப் படை­யி­னரால் தொடர்ச்­சி­யாகத் தாக்­கப்­பட்டோம். அண்­மையில் எமது வைத்­தி­ய­சா­லையில் இஸ்­ரே­லிய படை­களால் திடீ­ரென தாக்­குதல் மேற்­கொண்­டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்­பட்­டது” என காஸாவின் பலஸ்­தீன நாசர் வைத்­தி­ய­சாலை டாக்­டர்கள் உட்­பட வைத்­திய சேவை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.

அரச ஹஜ் குழுவுக்கு எதிராக வழக்கு: ஹஜ் யாத்திரைக்கு சவாலா?

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­ம­னத்தில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ளதாகவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து உயர் நீதி­மன்றில் வழக்­கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்­யப்­படவுள்­ளது.

“நிக்காஹ்’ பயான்களை செவிமடுக்க பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்து வரும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து உட்­பட ஏனைய விவா­க­ரத்­துகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பில் இடம்­பெற்­றது.