ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகளும் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை; பாதுகாப்பு நடைமுறைகளும் இறுக்கம்

0 610

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­க­ளுக்கு சட்­டத்­த­ர­ணி­களும் கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்டு செல்ல தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வாரம் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உதவிப் பொதுச் செய­லாளர் முர்சித் முளப்பர், சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கைய­டக்கத் தொலை­பே­சியை எடுத்துச் சென்று, ஞான­சார தேரரின் சாட்­சி­யத்தை பதிவு செய்த விவ­கா­ரத்தைத் தொடர்ந்தே இத்­தடை அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன்  குறித்த மௌல­விக்கும் அவ­ருக்கு உத­விய இளம் சட்­டத்­த­ர­ணிக்கும் எதி­ராக ஆணைக்­குழு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதே­வேளை இவ்­வி­வ­காரம் தொடர்பில் உலமா சபை பிரத்­தி­யே­க­மான விசா­ர­ணை­களை நடாத்தி வரு­வ­தா­கவும் உலமா சபையின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்தார். இச் சம்­பவம் உலமா சபைக்கு பெருத்த தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குறித்த முக்­கி­யஸ்தர் மேலும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை ஆணைக்­குழு விசா­ர­ணைகள் இடம்­பெறும் வளா­கத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆணைக்குழுவின் 5 உறுப்பினர்களதும் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப் படையினர் நியமிக்கப்படவுள்ளனர். – Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.