சவூ­தியில் உம்ரா தடை; ஈரானில் ஜும்ஆ இடை­நி­றுத்தம்

முஸ்­லிம்­களின் வணக்க வழி­பா­டு­க­ளையும் பாதித்­துள்ள கொரோனா வைரஸ்

0 1,035

உலக மக்கள் தற்­போது சனக்­கூட்­ட­மிக்க இடங்­க­ளுக்கு செல்­வதைத் தவிர்­தது வரு­கின்­றனர். அவ­சி­ய­மற்ற பய­ணங்­களை இரத்துச் செய்­கின்­றனர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வீட்­டி­லி­ருந்­த­வாறே கட­மை­யாற்றும் முறை­யி­னையும் கைக்­கொண்டு வரு­கின்­றனர்.

ஒரு­வ­ரை­யொ­ருவர் வாழ்த்­திக்­கொள்­ளுதல் அல்­லது குறித்த சில பண்­டி­கை­களைக் கொண்­டா­டு­வதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­மாறு பல நாடுகள் தமது பிர­ஜை­க­ளுக்கு வேண்­டுகோள் விடுத்­துள்­ளன. கொவிட் -– 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று ஏற்­படும் ஆபத்­தி­லி­ருந்து தவிர்ந்து கொள்ளும் வகையில் எவ்­வாறு தொழு­கையில் ஈடு­பட வேண்டும் அல்­லது புனித தினங்­களை அனுஷ்­டிக்க வேண்டும் சமயம் சார்ந்த நிறு­வ­னங்கள் ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்­ளன.

சீனாவில் ஆரம்­பித்த இந்த வைரஸ் தாக்கம் உல­க­ளவில் 93,000 இற்கும் அதி­க­மா­னோ­ருக்கு தொற்­றி­யுள்­ள­தோடு 3,000 இற்கும் அதி­க­மா­னோரைக் காவு­கொண்­டுள்­ளது. தொழு­கையில் ஈடு­ப­டு­ப­வர்கள் மற்றும் புனித யாத்­தி­ரை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு முஸ்லிம் நாடுகள், அமைப்­புக்கள், இஸ்­லா­மிய இணையத் தளங்கள் வழங்­கி­யுள்ள ஆலோ­ச­கைளை ஊட­கங்கள் வெளி­யிட்­டுள்­ளன.

உம்ரா கட­மையை நிறை­வேற்றத் தடை

சவூதி அரே­பியா உம்ரா கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக புனிதத் தலங்­க­ளுக்கு வெளி­நாட்­ட­வர்கள் விஜயம் செய்­வ­தற்கு முதலில் தடை விதித்­தது.
பின்னர் கடந்த புதன்­கி­ழமை முதல் சவூதி அரே­பியா தனது நாட்டுப் பிர­ஜை­க­ளுக்கும் ஏனைய நாட்­ட­வர்­க­ளுக்கும் உம்ரா கட­மை­யினை நிறை­வேற்ற தடை விதித்­துள்­ள­தாக சவூதி ஊடக முக­வ­ரகம் அறி­வித்­தது.

இந்த நகர்வு வளை­குடா நாடு­களில் வைரஸ் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சவூதி அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை என சவூதி ஊடக முக­வ­ரகம் தெரி­வித்­தது.

கடந்த வாரம் மக்­கா­வுக்கும் பெரிய பள்­ளி­வா­சலின் மத்­தியில் அமைந்­தி­ருக்கும் கஃபா­வுக்கும் வெளி­நாட்­ட­வர்கள் வரு­வதை சவூதி அர­சாங்கம் தடை செய்­தி­ருந்­த­தோடு மதீ­னாவில் அமைந்­துள்ள இறைத் தூதரின் பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­வ­தற்கும் இடைக்­காலத் தடை விதித்­தி­ருந்­தது.

இவ்­வ­ருட ஹஜ் கடமை ஜூலை 28 ஆந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதில் வழக்­க­மாக மூன்று மில்­லியன் மக்கள் கலந்து கொள்வர். ஏற்­க­னவே இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக 60,000 இற்கும் மேற்­பட்டோர் விண்­ணப்­பித்­துள்ள போதிலும் இது­வரை சவூதி அர­சாங்க அதி­கா­ரிகள் எவ்­வித கட்­டுப்­பா­டு­க­ளையும் அது தொடர்பில் அறி­விக்­க­வில்லை.

சவூதி அரே­பி­யாவில் இரு­வ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்­ளமை இதுவரை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஈரானில் ஜும்ஆ தொழுகை  இடை­நி­றுத்தம்

ஈரானின் பிர­தான நக­ரங்­களில் வெள்­ளிக்­கி­ழமைத் தொழுகை இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. நாளாந்தம் ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்­ப­டு­வோ­ரி­னதும் உயி­ரி­ழப்­போ­ரி­னதும் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றது. கடந்த புதன்­கி­ழமை மாலை வரை கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­னோரின் எண்­ணிக்கை 2,922 ஆகவும் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 92 ஆகவும் காணப்­பட்­டது. இத­னை­ய­டுத்து ஈரானில் அனைத்து மாகா­ணங்­களின் தலை­ந­க­ரங்­க­ளிலும் வெள்­ளிக்­கி­ழமை தொழுகை இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நோய் பர­வக்­கூ­டிய ஒன்­றாகும் என தனது அமைச்­ச­ரைவைக் கூட்­டத்தில் தெரி­வித்த ஈரானின் ஜனா­தி­பதி ஹஸன் ரூஹானி, கிட்­டத்­தட்ட எமது நாட்டின் அனைத்து மாகா­ணங்­க­ளையும் அது ஆக்­கி­ர­மித்­துள்­ளது. உலகின் பெரும்­பா­லான நாடுகள் இத் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளன. எவ்­வ­ளவு விரை­வாக முடி­யுமோ அவ்­வ­ளவு விரை­வாக இதனைக் கட்­டுப்­ப­டுத்த நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வேண்டும் எனவும் தெரி­வித்தார்.

சொந்­த­மாக தொழுகை விரிப்பை பயன்­ப­டுத்த வேண்டும் சொந்­த­மாக தொழுகை விரிப்பை பயன்­ப­டு­த­து­மாறும் கைலாகு கொடுப்­பதை தவிர்ந்­து­கொள்­ளு­மாறும் சிங்­கப்பூர் முஸ்லிம் தலை­வர்கள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

சிங்­கப்­பூரின் முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரான மசாகொஸ் ஸுல்­கிப்லி முஸ்­லிம்­களை பள்­ளி­வா­ச­லுக்கு தொழுகை விரிப்­புக்­களைக் கொண்­டு­வ­ரு­மாறும் ஒரு­வ­ரோடு ஒருவர் கைலாகு கொடுப்­பதை தவிர்ந்­து­கொள்­ளு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக த ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

இந்த சூழ்­நி­லையில் நாம் கைலாகு கொடுக்கக் கூடாது, அவ்­வாறு செய்தால் கைகளை கழுவிக் கொள்­ளுங்கள், முகத்தில் கை வைப்­பதைத் தவிர்ந்து கொள்­ளுங்கள். இதனை எப்­போதும் மறந்­து­வி­டு­கின்ற எம்மைப் போன்ற பல­ருக்­கான முன்­னெச்­ச­ரிக்கை ஆலோ­சனை இது­வாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.

தொழு­கைக்கு வரு­ப­வர்கள் அனை­வ­ரி­னதும் உடல் வெப்­ப­நி­லையைப் பரி­சோ­திப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகக் காணப்­ப­டு­கின்­றது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்­ள­மைக்­கான அறி­கு­றிகள் தென்­படும் முஸ்­லிம்கள் தமது வீடு­க­ளி­லேயே இருந்­து­கொள்­ளு­மாறு மசாகொஸ் மேலும் தெரி­வித்­துள்ளார்.

சிங்­கப்­பூரில் 100 இற்கும் மேற்­பட்­டோ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்ள போதிலும் பெரும்­பா­லான நோயா­ளர்கள் குண­ம­டைந்­துள்­ளனர்.
சுத்தம் தொடர்­பான ஆலோ­ச­னை­களைப் பின்­பற்­றுக சுத்தம் தொடர்­பான ஆலோ­ச­னை­களைப் பின்­பற்­று­மாறு ஐக்­கிய இரச்­சி­யத்­தி­லுள்ள முஸ்லிம் நிறு­வ­னங்கள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளன.

பிரித்­தா­னி­யாவில் பல முஸ்லிம் நிறு­வ­னங்­களை ஒன்­றி­ணைத்துச் செயற்­படும் பெரிய அமைப்­பான பிரித்­தா­னிய முஸ்லிம் கவுன்ஸில் அர­சாங்­கத்தின் ஆலோ­ச­னை­களைப் பின்­பற்­று­வ­தோடு ஒன்­று­கூ­டல்­க­ளின்­போது அவ­தா­ன­மா­கவும் இருக்­கு­மாறு பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் இஸ்­லா­மியப் பாட­சா­லை­க­ளுக்கும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. மத­ர­ஸாக்கள், பாட­சா­லைகள் கை கழு­வு­வதை ஊக்­கு­விக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்ள பிரித்­தா­னிய முஸ்லிம் கவுன்ஸில் பள்­ளி­வா­சல்கள் விஷே­ட­மாக வுழு செய்யும் இடங்­களில் போதி­ய­ளவு சவர்க்­கா­ரங்­களை வைக்­கு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

பிரித்­தா­னி­யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

வீட்டிலேயே தொழுங்கள்

முஸ்லிம்களை வீட்டிலேயே தொழுதுகொள்ளுமாறு தஜிகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒன்­பது மில்­லியன் மக்கள் வாழும் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட தஜி­கிஸ்தான் அண்டை நாடு­க­ளான சீனா மற்றும் ஆப்­கா­னிஸ்தான் அதே­போன்று தென்­கொ­ரியா, ஈரான் மற்றும் இத்­தாலி ஆகிய நாடு­க­ளு­ட­னான தனது எல்­லையை மூடி­யுள்­ளது. மார்ச் 21 தொடக்கம் 25 வரை அந் நாட்டில் கொண்­டா­டப்­படும் நௌருஸ் அல்­லது பேர்­சியன் புது­வ­ருடக் கொண்­டாட்­டத்தை இரத்துச் செய்துள்ளது. தஜிகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இல்லாதபோதிலும் வெள்ளிக்கிழமைத் தொழுகை இடைநிறுத்தப்பட்டுள்ளது.-Vidivelli

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.