மஹர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை எப்படி வந்தது?

0 686

‘பள்­ளி­வா­ச­லுக்குள் எங்­களைத் தடை­செய்­வ­தற்கு நாங்கள் அடிப்­ப­டை­வா­தி­களோ, பயங்­க­ர­வா­தி­களோ அல்ல. எங்­க­ளது பள்­ளி­வாசல் மீண்டும் எங்­க­ளுக்கு திருப்­பித்­த­ரப்­பட வேண்டும். எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்­ளி­வா­சலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்­சாலை வளாக ஜும்ஆ பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.

100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்­கி­வந்த பள்­ளி­வாசல் தற்­போது சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அங்கு புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்டு, சிறைச்­சாலை அதி­கா­ரிகள் மத­வ­ழி­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­கி­றார்கள். ராகம பகு­தியில் வாழும் சுமார் 290 குடும்­பங்கள் இப்­பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்தி வந்­த­தாக பள்­ளி­வாசல் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரி­விக்­கிறார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ பக் ஷ, பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ, நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷரப், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகி­யோ­ருக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.

4/21 தாக்­கு­தலின் பின்பு தடை

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலின் பின்பு சிறைச்­சாலை அதி­கா­ரி­களால், பள்­ளி­வாசல் முஸ்­லிம்­களால் பயன்­ப­டுத்­து­வது தடை செய்­யப்­பட்­டது. பாது­காப்பு கார­ணங்­களின் நிமித்தம் பள்­ளி­வாசல் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை நிர்­வாகம் தெரி­வித்­தது.

பாது­காப்பு கார­ணங்­களை முன்­வைத்து பள்­ளி­வாசல் தடை­செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் நிலைமை சீர­டைந்த பின்பு, அவ­ச­ர­கா­ல­சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு பள்­ளி­வாசல் மத கட­மை­க­ளுக்­காக திறந்து வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆனால் அவ்­வாறு திறந்­து­வி­டப்­ப­ட­வில்லை. தொடர்ந்தும் தடை உத்­த­ரவு அமு­லிலே இருந்­தது. இந்த கால எல்­லை­யிலே பள்­ளி­வாசல் புனர்­நிர்­மாணம் செய்து ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

ஆனால் பள்­ளி­வாசல் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­ட­மையை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக பள்­ளி­வாசல் நீண்­ட­கா­ல­மாக கைவி­டப்­பட்­டி­ருந்­த­தாலே ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­ட­தாக சிறைச்­சாலை நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.

சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு ஓய்வு நேரங்­களைக் கழிக்க ஓய்வு அறை இல்­லாத குறையை தீர்ப ்­ப­தற்­காக மேற்­கொண்ட தீர்­மானம் என்றும் சிறைச்­சாலை அதி­காரி ஜகத் சந்­தன வீர­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மலே சிறைச்­சாலை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களின் பள்ளி

மஹர சிறைச்­சா­லையில் 1902 களில் மலே இனத்தைச் சேர்ந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களே கட­மையில் இருந்­தனர். அந்தக் காலத்தில் சிறைச்­சாலை வளா­கத்தில் மலே உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான பள்­ளி­வாசல் நிறு­வு­வ­தற்கு காணி ஒதுக்­கப்­பட்டு 1903 ஆம் ஆண்டு இப்­பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. அக்­கா­லத்தில் மலே பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னாலே இப்­பள்­ளி­வாசல் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. 1967 ஆம் ஆண்டு இப்­பள்­ளி­வாசல் முஸ்லிம் சமயப் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

பிற்­பட்ட காலத்தில் மஹர சிறைச்­சா­லைக்கு அண்­மித்த பகு­திகள் மற்றும் ராக­மயில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­ரித்­தது. அம்­முஸ்­லிம்கள் தமது சமய நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இப்­பள்­ளி­வா­ச­லையே பயன்­ப­டுத்தி வந்­தனர். ஆனால் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்தே இப்­பள்­ளி­வாசல் பாது­காப்பு கார­ணங்­களைக் கருத்­திற்­கொண்டு தடை செய்­யப்­பட்­டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் தாக்­கு­தல்­களின் பின்பு முஸ்­லிம்கள் தீவி­ர­வா­திகள் எனக்­க­ரு­தியே இத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

கடந்த பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி இலங்­கையின் சுதந்­திர தின நிகழ்­வினை இலங்கை மக்கள் அனை­வரும் இன, மத வேறு­பா­டு­க­ளின்றி ஒன்­றி­ணைந்து கொண்­டா­டிய மறு­தி­னமே இப்­பள்­ளி­வாசல் ஓய்வு அறை­யாக திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. புத்தர் சிலையும் வைபவ ரீதி­யாக நிறு­வப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­ச­லின்றி முஸ்­லிம்­க­ளுக்கு அசெ­ள­க­ரியம்

மஹர சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்பு சிறைச்­சாலை வளா­கத்­தினுள் இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு முஸ்லிம்கள் பிர­வே­சிப்­ப­தற்கு தடை­வி­தித்­தனர். பாது­காப்பு கருதி முஸ்­லிம்­களை அங்கு அனு­ம­திக்க முடி­யா­தென்றும் கூறப்­பட்­டது. சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கமே இந்த உத்­த­ர­வினைப் பிறப்­பித்­தி­ருப்­ப­தா­கவும் மஹர சிறைச்­சாலை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இந்த ஜும்ஆ பள்­ளி­வா­சலை ராகம பகு­தியைச் சேர்ந்த சுமார் 290 முஸ்லிம் குடும்­பங்கள் பயன்­ப­டுத்தி வந்­தன. நூறு வரு­டங்­க­ளுக்கும் மேலாக இப்­பள்­ளி­வா­சலில் நாளாந்த ஐவேளை தொழுகை, வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழு­கைகள், தராவிஹ் தொழுகை மற்றும் ஜனாஸா தொழுகை என்­பன நடை­பெற்று வந்­துள்­ளன.

பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்கு தடை­செய்­யப்­பட்­டதன் கார­ண­மாக முஸ்­லிம்கள் பல மைல்­க­ளுக்­கப்பால் இருக்கும் வேறு பள்­ளி­வா­சல்­க­ளுக்குச் செல்லும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. பள்­ளி­வா­சலில் நடை­பெற்று வந்த அஹ­தியா வகுப்­பு­களும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­ச­லுக்குள் பிர­வே­சிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளதால் பள்­ளி­வா­சலை துப்­பு­ரவு செய்­வ­தற்கோ, பள்­ளி­வா­சலில் இருக்கும் பொருட்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கோ இய­லாது இப்­ப­குதி மக்கள் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

ஜனா­ஸாக்கள் இடம்­பெற்ற போது ஜனா­ஸாக்­களை சுமந்து செல்­வ­தற்­கான சந்தூக் மற்றும் ஜனா­ஸாவை குளிப்­பாட்­டு­வ­தற்­கான மேசை போன்­ற­வற்றை பள்­ளி­வா­ச­லி­ருந்து பெற்று பயன்­ப­டுத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டதால் ஜனாஸா நல்­ல­டக்­கத்­திலும் அண்­மைக்­கா­ல­மாக இப்­ப­குதி மக்கள் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டார்கள்.

அண்­மையில் ஐந்து ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

இச்­சந்­தர்ப்­பத்தில் சந்தூக் மற்றும் ஜனாஸா குளிப்­பாட்டும் மேசை பெற்றுக் கொள்ள முடி­யாமற் போனதால் இரண்டு ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்­கத்­துக்­காக மாபோல மைய­வா­டிக்கே எடுத்துச் செல்­லப்­பட்­டன. பின்பு ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்­கத்­துக்­காக வேறு மைய­வா­டி­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­டக்­கூ­டாது.

மஹர மைய­வா­டி­யிலே நல்­ல­டக்கம் செய்ய வேண்­டு­மென மஹர பள்­ளி­வாசல் நிர்­வாகம் தீர்­மா­னித்­தது. இந்த மைய­வாடி மஹர ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மை­யிலே அமை­யப்­பெற்­றுள்­ளது.

இரண்டு ஜனா­ஸாக்கள் மஹர மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. இதற்­கென சந்தூக் மற்றும் ஜனாஸாக்கள் குளிப்­பாட்டும் மேசை என்­பன மாபோலை பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தே எடுத்து வரப்­பட்டு ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்கு தடை­செய்­யப்­பட்­டி­ருந்­ததால் ஜனாஸா தொழுகை ஜனாஸா வீட்­டி­லேயே நடத்­தப்­பட்­டது. இறு­தி­யாக இப்­ப­கு­தியில் நிகழ்த்த ஜனா­ஸாவின் தொழுகை மைய­வா­டி­யிலே நடாத்­தப்­பட்­டது.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்பு இவ்­வா­றான சவால்­க­ளையும் அசெ­ள­க­ரி­யங்­க­ளை­யுமே இப்­ப­குதி முஸ்­லிம்கள் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. 100 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு நேர்ந்த கதியே இது. அர­சாங்கம், தேசிய ஒரு­மைப்­பாடு, இன நல்­லி­ணக்கம், மத உரி­மைகள், அனை­வ­ருக்கும் சம­மான நீதி என்­றெல்லாம் பட்­டி­ய­லிட்டு கவர்ச்­சி­யான உறு­தி­மொ­ழிகள் வழங்­கி­னாலும் கள­நி­லைமை இவ்­வாறே அமைந்­தி­ருக்­கி­றது. இந்­நி­லை­மை­களை அர­சியல் தலை­வர்கள், ஆட்­சி­யா­ளர்கள் அறி­யா­தி­ருக்­கி­றார்­களா?

இவற்­றுக்­கெ­தி­ராக அமைச்­ச­ர­வையில் குரல்­கொ­டுக்க முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் எவரும் இல்லை. முஸ்லிம் அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­டாமை ஓர் திட்­ட­மிட்ட செய­லா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவே பதவி வகிக்­கிறார். அவர் தன்னைச் சூழ பல முஸ்லிம் விவ­கார ஆலோ­ச­கர்­க­ளாக பலரை இணைத்துக் கொண்­டுள்ளார். ஏன் அவர்கள் இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் வாய் மூடி மெள­னி­க­ளாக இருக்­கி­றார்கள் என்­பது புரி­ய­வில்லை.

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களில் வாய் திறக்கக் கூடாது என்ற நிபந்­த­னையில் கீழ் அவர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­களா? இல்­லையேல் அவர்கள் வாய்­தி­றக்­கப்­ப­யப்­ப­டு­கி­றார்­களா? எனும் வினாக்­க­ளுக்கு அவர்கள் தான் சமூ­கத்­துக்குப் பதி­ல­ளிக்க வேண்டும்.

தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல் தலைவர்

தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தலைவர் ரியாஸ்­சாலி இந்தப் பள்­ளி­வா­சலின் பிரச்­சி­னையை சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யாடி விரைவில் சுமுக தீர்வு பெற்­றுத்­த­ரு­மாறு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவை வேண்­டி­யுள்ளார்.

இதே­வேளை மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமை­யப்­பெற்­றுள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்­துக்­குட்­பட்­ட­தாகும், அந்தச் சந்­தர்ப்­பத்தில் இவ்­வி­வ­காரம் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தற்­போது திடீ­ரென வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. இவ்­வாறு தற்­போது திடீ­ரென இவ்­வி­வ­காரம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தற்­போ­தைய அர­சாங்­கத்தை அவப்­பெ­ய­ருக்கு உட்­ப­டுத்­து­வ­தாகும். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட்டு தீர்வு வழங்­க­வேண்டும் என ரியாஸ்­சாலி தெரி­வித்­துள்­ள­துடன் இவ்­வி­வ­கா­ரத்­துக்கு நல்­லாட்சி அர­சையே குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு முன்பே சிறைச்­சாலை மற்றும் பொலிஸ் அதி­கா­ரிகள் பல­வந்­த­மாக மஹர பள்­ளி­வா­சலை பொறுப்­பேற்­றி­ருக்கி றார்கள். நான் இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களைக் கலந்து பேசினேன். அவர்­களின் கூற்­றுப்­படி இச்­சம்­ப­வங்கள் நல்­லாட்சி அரசின் ஆட்­சிக்­கா­லத்­திலே நிகழ்ந்­துள்­ளன. தற்­போ­தைய அர­சாங்­கத்தின் காலத்தில் அல்ல எனவும் ரியாஸ்­சாலி தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

பள்­ளி­வா­ச­லினுள் புத்தச் சிலை நிறு­வப்­பட்­டதன் மூலம் இரு இனங்­க­ளுக்­கிடை யிலான உறவு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு பள்­ளி­வா­ச­லுக்குள் எவரும் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளினால் அனு­ம­திக்கப் பட­வில்லை. தொழு­கை­க­ளுக்கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. தொடர்ந்து பள்­ளி­வாசல் தடை­செய்­யப்­பட்­டி­ருந்த இக்­கா­ல­கட்­டத்­திலே மேல­திக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த காலங்­களில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. தற்­போ­தைய அர­சாங்கம் இன­வா­தத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு முன்­னின்று செயற்­ப­டு­கி­றது. இந்த வகையில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் சுமுக தீர்­வினை விரைவில் பெற்­றுத்­தர வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்ளார்.

முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

நாட்டில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலின் பின்பு முஸ்­லிம்கள் பல்­வேறு சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டது. நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டார்கள். புர்கா, நிகாப் ஆடை­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டது. பல்­வேறு பகு­தி­களில் இன­வா­தி­களால் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டார்கள். வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்­திலே இடம்­பெற்­றன. இத்­தாக்­கு­தல்­களின் பின்பு மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­தி­ருந்த ஜும்ஆ பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் தடை­செய்­யப்­பட்­டது. தொழு­கைகள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. வளா­கத்­திற்குள் பிர­வே­சிக்க முஸ்­லிம்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் அப்­போ­தைய முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அப்­போ­தைய முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி என்­போ­ருக்கு முறைப்­பாடு செய்­தது. அப்­போ­தைய நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் புன­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­வின் கவ­னத்­திற்கும் இவ்­வி­வ­காரம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

மஹர ஜும்ஆ பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்­களின் தொழு­கை­க­ளுக்கும், சமய நிகழ்­வு­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட்­ட­மை­யை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­க­ளுடன் நீதி மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு (முன்னாள்) அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்­து­டனும் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன என முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

பேச்­சு­வார்த்­தை­களில் பல முன்­னேற்­றங்கள் காணப்­பட்­டன. பள்­ளி­வா­சலில் மீண்டும் தொழு­கைகள் நடாத்­தவும், ஏனைய சமய நிகழ்­வுகள் நடத்­தவும் முஸ்­லிம்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் அர­சாங்­கத்­தினால் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. சுமு­க­மான தீர்வு எட்­டப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு நில­விய சந்­தர்ப்­பத்­தி­லேயே ஆட்சி மாற்றம் இடம்­பெற்­று­விட்­டது. எமது நல்­லாட்சி அர­சாங்கம் பத­வியில் இருந்­தி­ருந்தால் மஹர பள்­ளி­வாசல், சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்றம் பெற்­றி­ருக்­காது. புத்­தர்­சி­லையும் நிறு­வப்­பட்­டி­ருக்­காது. பள்­ளி­வாசல் பள்­ளி­வா­ச­லா­கவே இருந்­தி­ருக்கும். இதுவே எமது முன்­னைய நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கும் இன்­றைய அர­சாங்­கத்­துக்கும் இடை­யி­லான வேறு­பாடு என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கவலை வெளி­யிட்டார்.
நீதி­ய­மைச்சர்– பள்­ளி­வாசல் நிர்­வாகம் ‘பேச்­சு­வார்த்தை

பள்­ளி­வாசல் நிர்­வாகம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­த­பாவின் தலை­மையில் நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்­ட­ம­று­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவை நீதி­ய­மைச்சில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை சந்­தித்து இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றது. பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக அமைச்சர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை எதிர்­வரும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டு­வ­தா­கவும் சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார். இது முஸ்­லிம்­க­ளுக்கு ஆறு­தலை வழங்­கி­யுள்­ளது.

100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த பள்­ளி­வாசல் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளமை குறித்து கவலை வெளி­யிட்ட பள்­ளி­வாசல் நிர்­வாகம் மீண்டும் பள்­ளி­வா­சலைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தி­யினைப் பெற்­றுத்­த­ரு­மாறு அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­தது. 100 வரு­டங்­க­ளுக்கும் மேலான பள்­ளி­வா­சலை இவ்­வா­றான நிலை­மைக்கு உட்­ப­டுத்த முடி­யா­தென்­பதை ஏற்­றுக்­கொண்ட அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா இவ்­வி­வ­கா­ரத்­துக்கு விரைவில் தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா ‘100 வரு­டங்­க­ளுக்கும் மேல் பழைமை வாய்ந்த முஸ்­லிம்கள் பயன்­ப­டுத்தி வந்த பள்­ளி­வாசல் ஏப்ரல் தாக்­கு­த­லுக்கு முன்பு எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் மூடப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஏப்ரல் தாக்­கு­தலின் பின்பு சிறைச்­சாலை அதி­கா­ரி­களே பள்­ளி­வா­ச­லுக்குத் தடை­வி­தித்­தனர். பள்­ளி­வாசல் நீண்­ட­காலம் மூடி­யி­ருந்­த­தா­கக்­கூறி சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஓய்வு அறை­யாக மாற்­றி­யுள்­ளமை சட்­டத்­திற்கு முர­ணா­ன­தாகும். இப்­ப­கு­தியைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான குடும்­பங்கள் தங்கள் சமய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர் என நீதி­ய­மைச்­ச­ரிடம் விளக்­கி­யுள்ளார்.

நீதி­ய­மைச்­சரின் உறு­தி­மொழி நிலை­மையைச் சமா­ளிப்­ப­தற்­காக வழங்­கப்­பட்­ட­தாக இருக்­கக்­கூ­டாது. அமைச்சர் நகர்­வு­களைத் துரி­தப்­ப­டுத்த வேண்டும். ஒரு மதத்­த­லத்தை மூடி­விட்டு அங்கே வேறு மத வழி­பா­டுகள் இடம்­பெ­று­வதை எந்­த­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. அவ்­வா­றான நிலைமை இன முரண்­பா­டு­களை போஷிப்­ப­தாக அமையும். இவ்­வி­வ­கா­ரத்தில் அரசு துரித நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

மஹர ஜும்ஆ பள்­ளி­வாசல் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்டு, அங்கு புத்தர் சிலை வைக்­கப்­பட்டு மத வழி­பா­டுகள் நடை­பெ­று­கின்­றமை முஸ்­லிம்­களை ஆழ்ந்த துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.
ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ நாட்டு மக்கள் அனை­வ­ரையும் அர­வ­ணைத்துச் செல்­வதே தனது இலக்கு எனத் தெரி­வித்­துள்ளார். இம்­மாதம் 4 ஆம் திகதி அவர் ஆற்­றிய சுதந்­திர தின உரை­யின்­போது கூட சகல மக்­க­ளி­னதும் மத சுதந்­திரம் உறு­திப்­ப­டுத்­தப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அவ­ரது உரை இடம்­பெற்று மறு­தி­னமே பள்­ளி­வா­ச­லொன்று ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அரச அதி­கா­ரி­களே இதை அரங்­கேற்­றி­யி­ருக்­கி­றார்கள். அரச அதி­கா­ரி­களின் பொறுப்­புகள், கட­மைகள் மீது கூடு­த­லான அழுத்­தங்­களைப் பியோ­கித்து வரும் ஜனா­தி­பதி இவ்­வி­வ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்வு காணப்­போ­கிறார்? முஸ்லிம் சமூகம் தீர்வை நோக்கிக் காத்­தி­ருக்­கி­றது.

ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ரு­டனும் அவர்­க­ளது கட்­சி­யு­டனும் நெருங்­கிய உற­வினைப் பேணும் முஸ்லிம் தலை­வர்கள் தீர்­வுக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும்.

சிறைச்­சாலை வளா­கத்­தினுள் இருக்கும் பள்­ளி­வாசல் 100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக முஸ்­லிம்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. அதனால் அனைத்து உரித்­து­களும் முஸ்­லிம்­க­ளுக்கு உள்­ளன. இந்­நி­லையில் பள்­ளி­வாசல் சிறைச்­சாலை பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கி­றது என புல­னாய்வு அறிக்­கைகள் தெரி­வித்­தி­ருந்தால் அதி­கா­ரிகள் மாற்று நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வேண்டும்.

பள்­ளி­வாசல் தடை செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு அப்­ப­குதி முஸ்­லிம்­களுக் கென்று அரச செலவில் சிறைச்­சாலை வளா­கத்­துக்கு வெளியே புதிய பள்­ளி­வா­ச­லொன்று நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும். இதுவே அர­சாங்­கத்தின் தார்­மிகப் பொறுப்பு அதை­வி­டுத்து பள்­ளி­வா­ச­லுக்கு வர­வேண்டாம் தொழ வேண்டாம் என நுழை­வா­யிலை இழுத்து மூடு­வது ஜன­நா­யகப் பண்­பாக அமை­யாது. முஸ்லிம் சமூகம் நல்ல தீர்வையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.