உம்ரா கட்டணங்களை மீளளிக்க சவூதி அரசாங்கம் நடவடிக்கை

உள்ளூர் முகவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

0 986

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் கார­ண­மாக உம்ரா கட­மைக்­காக சவூதி அரே­பி­யா­வுக்குள் நுழை­வதை அந் நாட்டு அர­சாங்கம் தடை செய்­ததைத் தொடர்ந்து, உம்ரா கட்­ட­ணங்­களை மீள­ளிப்பு செய்ய சவூதி அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

அத்­துடன் இதற்­காக இலத்­தி­ர­னியல் முறை­மை­யொன்றும் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.

உம்ரா விசா மற்றும் ஏனைய சேவை­க­ளுக்­காக கட்­டணம் செலுத்தி, யாத்­தி­ரையை மேற்­கொள்ள முடி­யா­துள்­ள­வர்கள் தமது உள்­நாட்டு முக­வர்கள் மூல­மாக பணத்தை மீளப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென சவூதி ஹஜ் மற்றும் உம்ரா விவ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பான மேல­திக விப­ரங்­களை 00966920002814 எனும் தொலை­பேசி இலக்கம் வாயி­லா­கவோ அல்­லது mohcc@Hajj.gov.sa எனும் மின்­னஞ்சல் முக­வ­ரி­யூ­டா­கவோ தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ் அல்­லது COVID –19 பர­வாமல் தடுப்­ப­தற்­காக கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் உம்ரா கட­மையை நிறை­வேற்ற வெளி­நாட்­ட­வர்கள் வருகை தரு­வ­தற்கு சவூதி அரேபியா தற்காலிக தடையை விதித்திருந்தது.-Vidivelli

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.