மஹர பள்ளிவாசல் விவகாரம்: சுமுகமான தீர்வு பெற்றுத்தரப்படும்

நீதி சட்ட மறு சீரமைப்பு அமைச்சர் உறுதியளிப்பு

0 972

மஹர சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்டு, முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­டுள்ள மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வு பெற்றுத் தரு­வ­தாக நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்­துடன் கலந்­து­ரை­யா­டு­வ­துடன் அமைச்­ச­ரவை கூட்­டத்­திலும் ஆராய்ந்து தீர்­மானம் மேற்­கொள்­வ­தா­கவும் மேலும் அவர் தெரி­வித்தார்.

நேற்று முன்னாள் அமைச்­சரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பைசர் முஸ்­த­பாவின் தலை­மையில் மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் உட்­பட மூன்று பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவை நீதி­ய­மைச்சில் சந்­தித்து இவ்­வி­வ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர்.

100 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட பழை­மை­யான பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ள­துடன் அங்கு புத்தர் சிலை வைக்­கப்­பட்டு சமய வழி­பா­டுகள் இடம்­பெ­றுவ தாகவும் குறிப்­பிட்­டனர். முஸ்­லிம்­களின் சமய வழி­பா­டு­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வா­சலை மீண்டும் சிறைச்­சாலை நிர்­வா­கத்­தி­ட­மி­ருந்து விடு­வித்துத் தரு­மாறும் கோரிக்கை விடுத்­தனர்.

100 வரு­டங்­க­ளுக்கும் மேல் பழை­மை­யான பள்­ளி­வா­சலை இவ்­வா­றான நிலை­மைக்கு உட்­ப­டுத்த முடி­யா­தென்­பதை ஏற்­றுக்­கொண்ட நீதி­ய­மைச்சர் இதற்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

‘நூற்­றாண்டு காலம் பழைமை வாய்ந்த முஸ்­லிம்கள் பயன்­ப­டுத்தி வந்த பள்­ளி­வாசல் மூடப்­பட்­டி­ருக்­க­வில்லை. மூடி­யி­ருந்­த­தாக காரணம் கூறி சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஓய்வு அறை­யாக மாற்­றி­யுள்­ளமை சட்­டத்­திற்கு முர­ணா­ன­தாகும். இதனால் இப்­ப­கு­தியைச் சேர்ந்த நூற்றுக் கணக்­கான குடும்­பங்கள் தங்கள் சமய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா நீதியமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.