பொறுப்புக் கூறலிலிருந்து விலகத் தொடங்கும் புதிய அரசாங்கம்.

0 625

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று விடுத்­துள்ள உத்­தி­யோ­க­பூர்­வ­ அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் அமர்­வுகள் எதிர்­வரும் 24 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யி­லேயே அர­சாங்­கத்தின் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இலங்கை இரா­ணுவத் தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் ஷவேந்­திர சில்வா மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு அமெ­ரிக்கா செல்ல பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டுள்ளதைக் கருத்திற் கொண்டே அர­சாங்கம் இந்த தீர்­மா­னத்தை எட்­டி­யுள்­ள­தாக பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையில் இடம்­பெற்ற இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது ஷவேந்­திர சில்வா மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டுள்­ளமை தொடர்பில் உறு­தி­யான தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்து அமெ­ரிக்கா கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் இரா­ணுவ தள­பதியும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு அமெ­ரிக்­கா­விற்குள் பிர­வே­சிக்க பய­ணத்­தடை விதித்­தி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே இலங்கை அர­சாங்கம் நேற்று மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­தி­லி­ருந்து விலகத் தீர்­மா­னித்­துள்­ளது.

2015 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணைக்கு அப்­போ­தைய இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இலங்கை படை­யினர் மனித உரி­மை­களை மீறி­ய­தாகக் குற்றம் சுமத்தி, ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யினால் 2015ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கைக்கு இலங்கை அர­சாங்கம் ஆத­ரவை வழங்­கி­ய­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் விதி­மு­றை­க­ளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லா­ள­ரினால் நிய­மிக்­கப்­பட்ட மூவர் அடங்­கிய குழுவின் அறிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே 2015 ஆம் ஆண்டு பிரே­ரணை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் யுத்தம் நிறை­வ­டைந்த காலம் முதல் இலங்கை பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு எதி­ராக பல்­வேறு தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்ட அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்­களை, ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­யன உள்­ள­டங்­கிய நல்­லாட்சி அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டி­ருந்­த­தா­கவும் அவர் குற்றஞ்சாட்­டி­யுள்ளார்.

அந்­த­வ­கையில் புதிய அர­சாங்கம் ஏலவே எதிர்­பார்க்­கப்­பட்­டதைப் போன்றே ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னங்­க­ளுக்குக் கட்­டுப்­ப­டாத போக்கை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளது. இதன் முதல் கட்­டமே பிர­த­மரின் இந்த அறி­விப்­பாகும். இதன் மூலம் பொறுப்புக் கூற­லி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான சமிக்­ஞையை அர­சாகம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது எதிர்­கா­லத்தில் இலங்கை அர­சாங்கம் மீதான சர்­வ­தேச நெருக்­கு­தல்­களை அதி­க­ரிக்­கவே வழி­வ­குக்கும்.

கடந்த அர­சாங்கம் ஐ.நா. தீர்­மா­னங்­க­ளுக்குக் கட்­டுப்­பட்டு நடப்­ப­தற்­கான அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த போதிலும் நடை­மு­றையில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் காண்­பிக்­க­வில்லை. எனினும் மைத்­திரி – ரணில் அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திடம் நாட்டை அடகு வைத்­து­விட்­ட­தாகப் பிர­சாரம் செய்தே இவ்­வ­ர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. இந் நிலை­யி­லேயே தற்­போது சர்­வ­தே­சத்­துடன் முரண்­ப­டு­கின்ற போக்கை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளது.
இந் நிலையில் கடந்த கால போர்க்­குற்­றங்கள் குறித்தோ அல்­லது மனித உரிமை மீறல்கள் குறித்தோ எந்­த­வித வெளிப்­ப­டைத்­தன்­மை­யையும் பேணு­வ­தற்கு தாம் தயா­ரில்லை என்­பதை புதிய அர­சாங்கம் மீளவும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்­திலும் தனது அக்­க­றை­யற்ற போக்கை இவ்­வ­ர­சாங்கம் தொடர்ச்­சி­யாக வெ ளிப்படுத்தியே வந்துள்ளது.

ஆக, புதிய ஆட்­சி­யா­ளர்கள் கடந்த காலங்­களில் கடைப்­பி­டித்த அதே இறுக்­க­மான சர்­வ­தேச கொள்­கை­க­ளி­லேயே தொடர்ந்தும் பய­ணிக்கப் போகி­றார்கள் என்­பது தெளிவா­கி­யுள்­ளது. இது உள்­நாட்டில் இவ்­வ­ர­சாங்­கத்­திற்கு நற்­பெ­யரைக் கொடுப்­பினும் சர்­வ­தேச நாடுகள் மத்­தியில் அதி­ருப்­தி­யையே கொண்டு வரும். இந்த சவால்­களை அர­சாங்கம் எப்­படிச் சமா­ளித்து முன்­னே­றப்­போ­கி­றது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.