உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : குற்றமற்ற இளைஞர்களை விடுதலை செய்ய முடியுமா?

பிரதி சொலிசிட்டர் ஜெனரலுடன் முஸ்லீம் எம்.பி.க்கள் சந்தித்து பேச்சு

0 845

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு இது­வரை காலம் எது­வித குற்­றப்­பத்­தி­ரி­கையும் தாக்கல் செய்­யப்­ப­டாது விசா­ர­ணை­க­ளுக்­கென தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் இளை­ஞர்­களின் விடு­தலை தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரோஹன்த அபே­சூ­ரி­யவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

இந்தச் சந்­திப்பு பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரோஹன்த அபே­சூ­ரி­ய­வுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்­தபா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோ­ருக்­கு­மி­டையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.

முஸ்லிம் இளை­ஞர்கள் ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி இது­வரை எவ்­வித குற்­றப்­பத்­தி­ரி­கையும் தாக்கல் செய்­யப்­ப­டாமல் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர்கள் பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தா­கவும் சுட்டிக்காட்­டினர்.

இவ்­வாறு அவர்கள் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதால் சமூ­கத்தில் அவர்­க­ளது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டு­கி­றது.
இவர்­களில் சிலர் மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியை எதிர்­நோக்­கி­யி­ருப்­ப­வர்கள் மேலும் சிலர் கற்கை நெறி­களை தொடர்ந்­த­வர்கள். இதனால் கல்­வித்­து­றை­யிலும் இவர்கள் பின் தங்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என்று விளக்­க­ம­ளித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது விடு­தலை தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் வேண்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை செவிமடுத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதாக உறுதியளித்தார்.-vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.