சமூக ஊடகங்களில் வெளிப்படும் சீன அரசின்: கொரோனா கட்டுப்பாட்டு முகாமைத்துவம் மீதான கோபம்

0 936

சோங்கிங், சீனா – ஜியாங்­குவோ வூஹான் நகரின் சுவாச நோய்­க­ளுக்­கான வைத்­தி­ய­சா­லையில் தனது நீண்ட நேரப் பணிக்குப் பின்னர் மிகவும் சோர்­வுடன் வீட்­டுக்குத் திரும்­பினார். இவ்­வைத்­தி­ய­சாலை புதிய வகை கொரோனா வைரஸ் தொற்­றுக்கு உள்­ளான நோயா­ளர்­க­ளுக்கு சிகிச்சை மேற்­கொள்­வ­தற்­காக செயற்­படும் மருத்­து­வ­ம­னை­களில் ஒன்­றாகும். 

52 வயது நிரம்­பிய இந்த சுத்­தி­க­ரிப்புத் தொழி­லாளி மருத்­துவப் பரா­ம­ரிப்பு நாடும் நோயா­ளர்­க­ளினால் இவ் வைத்தியசாலை நிரம்பிக் காணப்­ப­டு­வ­தாகக் கூறினார். வைத்­தி­யர்கள் மற்றும் தாதி­யர்கள் மேல­திகப் பணி புரியும் இவ்­வைத்­தி­ய­சா­லைக்­கான வழங்­கல்கள் குறை­வ­டைந்து வரு­கின்­றன.

கடந்­தாண்டு டிசம்பர் மாத இறு­திப்­ப­கு­தியில் அடை­யாளம் காணப்­பட்ட இந்த புதிய வகை வைரஸ் இது­வரை 400 உயிர்­களைக் காவு கொண்­டுள்­ள­தோடு 17,000 க்கும் அதி­க­மான மக்­களைத் தொற்­றி­யுள்­ளது. அதி­க­ள­வான உயி­ரி­ழப்­புக்கள் மற்றும் தொற்­றுகள் ஹூபேய் மாகா­ணத்­தி­லேயே ஏற்­பட்­டுள்­ளன.

வூஹான் நகரம் இம்­மா­கா­ணத்தின் தலை­ந­க­ராகக் காணப்­ப­டு­கின்­றது.

மிகவும் விரை­வாகப் பரவும் இந்த வைரஸ் ஹூபேய் மாகா­ணத்தின் மருத்­துவப் பரா­ம­ரிப்பு முறை­மையை புரட்­டிப்­போட்­டுள்­ளது. சில வைத்­திய அதி­கா­ரிகள் சீன அரசு இந்நோய் முகா­மைத்­து­வத்­துக்கு தயா­ரற்ற நிலையில் இருந்­த­தாகக் கூறு­வ­துடன், சீன அரசின் நோய் முகா­மைத்­துவ நட­வ­டிக்­கை­களை ஒழுங்­கற்­றது எனவும் விப­ரிக்­கின்­றனர்.

எனினும், ஜியாங்­குவோ கடந்த ஜன­வரி 28 ஆம் திகதி தனது தொலைக்­காட்­சியை நோக்­கிய போது அதில் செய்தி வாசிப்­பா­ளர்கள் அரசின் “வெளிப்­ப­டைத்­தன்­மை­யான மற்றும் துரி­த­மான” நோய் முகா­மைத்­துவ செயற்­பா­டு­களைப் புகழ்­வ­தையும் வூஹான் நக­ர­வா­சிகள் சிலர் சீன கம்­யூ­னிஸ்ட் கட்­சியின் நோயைக் கட்­டுப்­ப­டுத்தும் இய­லு­மையில் மகிழ்­வுடன் நம்­பிக்கை தெரி­விப்­ப­தையும் கண்­ணுற்றார். 

அல்-­ஜ­ஸீறா அலை­வ­ரி­சை­யுடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய ஜியாங்­குவோ தனது ஒற்றைப் பெயரை மாத்­தி­ரமே வழங்க விரும்­பினார். அச்­சந்­தர்ப்­பத்தில் அவர் சீனாவின் மைக்ரோ வலைப்­ப­திவுத் தள­மான வீபோ வினை (Weibo) தொடர்ந்து பயன்­ப­டுத்தும் தனது மகனை உட­ன­டி­யாகத் தொடர்பு கொண்­ட­தாகக் கூறினார். மக­னு­ட­னான உரை­யாடல் இன்னும் அவ­ரது மனதில் எதி­ரொ­லித்துக் கொண்­டி­ருந்­தது.

“நீ செய்­தி­களைக் காண்­கி­றாயா? அவர்கள் இதனை உண்­மை­யாகக் கூறு­கின்­ற­னரா? எனது வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்றும் வைத்­தி­யர்கள் மற்றும் தாதி­யர்கள் சோர்வின் உச்ச கட்­டத்­துக்கே சென்­று­விட்­டனர். அவர்கள் உடைந்து விழும் நிலையை அடைந்து விட்­டனர். அந்தக் காணொ­லி­களில் மகிழ்­வுடன் பேட்­டி­ய­ளிக்கும் மனி­தர்கள் வேறொரு உலகில் வாழ்­கின்­ற­னரா?” ஜியாங்­கு­வோவின் மகன் தனது வீபோ கணக்கில் உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­யர்கள் மற்றும் தாதி­யர்கள் கதி­ரை­களில் தெளி­வான சோர்­வுடன் உறங்கும் புகைப்­ப­டத்­துடன் ஒரு செய்­தியைப் பதி­விட்டார். “CCTV (சீன தொலைக்­காட்சி நிறு­வனம்) எதைச் சொல்­கி­றது என நான் அலட்­டிக்­கொள்­ள­வில்லை. எனினும் வூஹானின் நிலை­வரம் மிகவும் மோச­மா­கவே உள்­ளது” எனப் பதி­விட்டார். 

அப்­பு­கைப்­படம் துரித கதியில் ஆயி­ரக்­க­ணக்­கான வீபோ பயன்­ப­டுத்­து­நர்­களால் பகி­ரப்­பட்­ட­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான விருப்­பு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது. அது கடந்த சில நாட்­களில் சீனாவின் சமூக ஊடக வலைத்­த­ளத்தில் இடப்­பட்ட இவ்­வி­டயம் தொடர்­பான பல பதி­வு­களில் ஒன்­றாகக் காணப்பட்டதுடன் சீன அரசின் மிகவும் தணிக்கை மிக்க ஊட­கத்தின் கதை­யினை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்­றது.

சீன அர­சாங்கம் இந்­நோய்ப்­ப­ரம்பல் பற்­றிய விட­யங்­களை மிகவும் இறுக்­க­மான கட்­டுப்­பாட்­டுடன் பேணி வரு­கின்­றது. மனித உரிமைக் கண்­கா­ணிப்­பகம் கடந்த ஜன­வரி 30 ஆம் திகதி சீன அதி­காரத் தரப்­புகள் மக்­க­ளுக்கு தக­வல்­களை மறைப்­ப­தாகக் குற்றம் சாட்­டி­யுள்­ளது. நோய்த் தொற்­றுக்கு உள்­ளா­ன­வர்­களின் எண்ணிக்கையை குறைத்து வெளி­யி­டு­வ­தா­கவும் தொற்றின் தீவி­ரத்­தன்­மையை குறைத்துக் கூறு­வ­தா­கவும் அப்­ப­ணி­யகம் குறை கூறு­கின்­றது. நியூயோர்க் நகரைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் மனித உரி­மைகள் குழு சீனப் பொலிசார் நோய்ப்­ப­ரம்பல் பற்றி “வதந்­தி­களைப் பரப்­புவோர்” என்ற குற்றச் சாட்டில் மக்­களை தொல்­லைப்­ப­டுத்­து­வ­தா­கவும் வைத்­தியர் ஒருவர் இப்­பு­திய வைரஸ் சீனாவில் 2003 ஆம் ஆண்டு 349 மக்­களை உயி­ரி­ழக்­கவும் 5,300 மக்­க­ளுக்கு தொற்­றி­ய­து­மான “சார்ஸ்” வைர­சுக்கு ஒப்­பா­னது என தனது சக பணி­யா­ளர்­களை எச்­ச­ரித்­த­மைக்­காக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறு­கின்­றது.

கடந்த ஜன­வரி 20 இற்குப் பின்னர் சீன அதிபர் ஸீ ஜின்பிங் தான் இந்த வைரஸ் தொற்­றினைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ர­வுள்­ள­தா­கவும் தக­வல்கள் நேரத்­துக்கு ஏற்ப வெளி­யி­டப்­படும் எனவும் கூறினார். அதன் பின்­னரே அரச ஊடகம் இந்த அவ­சர நிலை பற்­றிய தக­வல்­களை வெளி­யிட ஆரம்­பித்­தது. சில நாட்­களின் பின்னர் 11 மில்­லியன் சனத்­தொகை கொண்ட வுஹான் நகரம் நோய்த்­தடைக் காப்பு மற்றும் வெளி­யு­லகத் துண்­டிப்பு என்­ப­வற்றை எதிர்­கொண்­டது. இத்­துண்­டிப்பு 50 மில்­லியன் மக்கள் வரை அதி­க­ரிக்­கப்­பட்­டது. இந்­ந­கர்­வு­க­ளுக்­காக சீன அர­சாங்கம் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பாராட்­டி­னையும் பெற்­றுக்­கொண்­டது.

எனினும், அதனைத் தொடர்ந்து வந்த நாட்­களில் அதி­க­மான வுஹான் நகர மக்கள் சீன அர­சாங்கம் இந்த அவ­சர நிலை­யினைக் கையாளும் விதத்தைக் குறை கூற சமூக ஊட­கத்தை நாடத் தொடங்­கினர். சமூக ஊடகப் பாவ­னை­யா­ளர்கள் வைத்­தி­ய­சா­லை­களில் போதிய கவ­னிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் அத்­துடன் இந்­நோய்ப் பரம்பல் பற்­றிய தக­வல்கள் மக்­களை அடை­வது தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது எனவும் கூறு­கின்­றனர்.

கடந்த புதன்­கி­ழமை இன்­னொரு வீபோ பாவ­னை­யாளர் தனது தாத்தா வைத்­தி­ய­சாலை ஒன்றின் நடை­பாதை மண்­ட­பத்தில் வீழந்து கிடக்கும் புகைப்­ப­டத்­துடன் பின்­வரும் பதி­வேற்­றத்தை மேற்­கொண்­டி­ருந்தார். “எனது தாத்தா மூன்று நாட்­க­ளாகக் காய்ச்­ச­லுடன் காணப்­ப­டு­கின்றார். எந்த ஒரு வைத்­தி­ய­சா­லையும் அவரை அனு­ம­திக்­க­வில்லை. அர­சாங்கம் எம் அனை­வ­ரையும் இவ்­வாறு மர­ணிக்க விடப் போகின்­றதா?”

கடந்த ஜன­வரி 22 ஆம் திகதி ஒரு சமூக ஊடகப் பாவ­னை­யாளர் பின்­வரும் கேள்­வி­யினைக் கொண்ட பதி­வேற்றம் ஒன்றை மேற்­கொண்டார். “இந்­நோய்ப்­ப­ரம்பல் மக்­களின் கவ­னத்தைக் கவர ஏன் இவ்­வ­ளவு கால தாமதம் ஆகி­யது?”

இக்­கட்­டு­ரைக்கு வழங்­கப்­பட்ட பதில்­களில் பின்­வரும் விட­யமும் காணப்­பட்­டது. “இந்நோய் மனி­தர்­களில் இருந்து மனி­தர்­க­ளுக்கு தொற்றக் கூடி­யது என்ற விட­யத்தை அர­சாங்கம் ஜன­வ­ரியின் ஆரம்பப் பகு­தி­யி­லேயே அறிந்து கொண்­டது. எனினும் இன்று வரை செய்தி அறிக்­கைகள் அவ்­வா­றான சாத்­தியம் எது­வு­மில்லை என்றே கூறி வரு­கின்­றன. அவர்கள் இந்த தக­வலை ஆரம்­பத்தில் பகிர்ந்த எட்டு நபர்­களை வதந்­தி­களைப் பரப்­பு­கின்­றனர் எனக் கூறி கைது செய்­தனர். 200 நபர்­க­ளுக்கு மேல் இறந்த பின்­னரே அர­சாங்கம் பதில் வழங்க ஆரம்­பித்­தது. அர­சாங்­கமே இதற்குப் பொறுப்­புக்­கூற வேண்டும்”.

வூஹானின் அயல் நக­ர­மான ஹுவாங்காங் நகரைச் சேர்ந்த இளம் நபர் ஒருவர் கடந்த ஜன­வரி 30 அன்று தான் பதி­வேற்­றிய இணையக் காணொலி ஒன்றில் பின்­வ­ரு­மாறு கூறினார்: “இக்­கா­ணொ­லியை பதி­வேற்றம் செய்­த­மைக்­காக நான் கைது செய்­யப்­ப­டலாம். எனினும் ஹுவாங்காங் நகரின் தீவிர நிலை எவ்­வாறு உள்­ளது என நீங்கள் அனை­வரும் அறிய வேண்டும் என நான் விரும்­பு­கின்றேன். நாங்கள் நாதி­யற்ற நிலையில் உத­வியை எதிர்­பார்த்­துள்ளோம். அர­சாங்கம் எம்மைக் கருத்தில் கொள்­ள­வில்லை”.
இந்தக் காணொலி பின்னர் அகற்­றப்­பட்­டி­ருந்­தது.

சீன அதி­காரத் தரப்பு வீபோ மற்றும் ஏனைய இயங்கு தளங்­களில் பகி­ரப்­படும் அனைத்து தக­வல்­க­ளையும் தீவி­ர­மாகக் கண்­கா­ணித்து வரு­கின்­றது. அரசின் கதை­க­ளுக்கு எதி­ரான அனைத்துப் பதி­வு­க­ளையும் அழிப்­ப­துடன் அதனை பதி­விடும் பய­னர்­களை தடை செய்து வரு­கின்­றது. இச்­சூ­ழ­மைவில் மேற்­கொள்­ளப்­படும் இவ்­வா­றான செயற்­பா­டு­களின் கார­ண­மாக வீபோ பாவ­னை­யா­ளர்கள் இடையே காணப்­படும் கோபம் மற்றும் வெறுப்பு என்­பன அசா­தா­ரண நிலை­களில் காணப்­ப­டு­கின்­றன.

சீனாவின் அதிக தொழில்­நுட்ப அறி­வு­கொண்ட மக்கள் அந்­நாட்டில் தடை செய்­யப்­பட்­டுள்ள டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இயங்­கு­த­ளங்­களை வீ. பீ. என் (VPN) தொழில்­நுட்பம் மூலம் அணுகி செய்­தி­களை வெளியில் கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

கியூஷி சென் என்ற மிகவும் பிர­சித்­த­மான வழக்­க­றிஞர் வூஹான் நக­ரத்­துக்கு நோய்ப்­ப­ரம்பல் பற்றி அறிக்­கை­யிடப் பயணம் மேற்­கொண்­டி­ருந்தார். தனது டுவிட்டர் பக்­கத்தில் அங்­குள்ள வைத்­தி­ய­சா­லை­களில் காணப்­பட்ட மருத்­துவப் பொருட்­களின் பற்­றாக்­குறை பற்றி தனது மனக்­கு­றையை வெளி­யிட்ட பதிவில் பின்­வரும் விட­யமும் காணப்­பட்­டது. “நான் சாவுக்கே அஞ­்சு­ப­வ­னல்ல, நான் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்கு அஞ்­சுவேன் என எண்­ணு­கின்­றீர்­களா?”

யூடியூப் பக்­கத்தில் வெளி­யு­லகத் துண்­டிப்­புக்­குள்­ளான வூஹான் நகர நிலை­யினை விப­ரிக்கும் காணொ­லி­யொன்றைப் பதி­வேற்­றிய அந்­ந­க­ர­வாசி ஒருவர் பின்­வ­ரு­மாறு கூறு­கின்றார். “இங்கு வாழ்­வது நர­கத்தில் வாழ்­வது போலவும் சாவை எதிர்­பார்த்­தி­ருப்­பது போன்றும் உள்­ளது.”

இவ்­வா­றான மற்றும் ஏனைய சமூக ஊடகப் பதி­வுகள் வூஹான் நக­ரத்தில் இடம்­பெறும் விட­யங்கள் பற்­றிய நெருக்­க­மான பார்­வையை வழங்­கு­வது மாத்­தி­ர­மன்றி, அம்­மக்கள் அனு­ப­விக்கும் துன்­பங்­களின் மனிதப் பரி­மா­ணத்­தையும் எடுத்துக் காட்­டு­கின்­றது.

உதா­ர­ண­மாக, வீ சட் (WeChat)) வலைத்­த­ளத்தில் ஒரு பெண் தனது தாயின் மரணம் பற்றி கட்­டுரை ஒன்றை விப­ர­மாக வெளி­யிட்­டி­ருந்தார்.

”எனது தாயாரின் இறந்த உடலை ஒரு வாகனம் வேக­மாக எடுத்துச் சென்­றது. அவ்­வா­க­னத்தின் பின்னால் நான் அழுது கொண்டே ஓடினேன். அவ்­வாறு நான் ஒரு­போதும் என் வாழ்வில் அழ­வில்லை. நான் மனக்­க­சப்­பையும் நம்­பிக்­கை­யற்ற நிலை­யையும் உணர்ந்தேன்.”

வூஹான் நகரில் நிலவும் இத்­தெ­ளி­வான ஏமாற்­றத்­துக்கு மத்­தியில் சீனாவின் சில தனியார் உடைமை ஊட­கங்கள் நோய்ப்­ப­ரம்பல் பற்­றிய உத்­தி­யோ­க­பூர்­வ­மான கதை­களை கேள்­விக்­குட்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளன. மருத்­துவப் பொருட் பற்­றாக்­குறை பற்­றிய விட­யங்கள் மற்றும் உள்ளூர் செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை கேள்­விக்­குட்­ப­டுத்தும் செய்­தி­களை அவை வெளி­யிட ஆரம்­பித்­துள்­ளன. இச்­செஞ்­சி­லுவைச் சங்கம் நன்­கொ­டை­களை பகிர்ந்­த­ளிக்கத் தவ­றி­யுள்­ள­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

கைக்சின் என்ற பர­வ­லாக வாசிக்­கப்­படும் செய்தி இணை­யத்­தளம் புதிய வைரஸ் பரம்பல் பற்றி பேசி­ய­தற்­காக விசா­ரிக்­கப்­பட்ட வைத்­தி­ய­ரு­ட­னான நேர்­கா­ணலை வெளி­யிட்­டி­ருந்­தது. இவ்­வி­ணை­யத்­தளம் சீனாவில் நிலவும் பேச்சுச் சுதந்­திரம் மீதான கட்­டுப்­பா­டுகள் இந்­நோய்ப்­ப­ரம்­பலை கட்­டுப்­ப­டுத்தும் முயற்­சி­களைப் பாதித்­துள்­ள­தாகக் கூறு­கின்­றது.

இருந்த போதிலும் கொரோனா வைரஸ் பற்றி அரச ஊட­கங்கள் வெளி­யிடும் தக­வல்கள் மிகவும் நேர்­ம­றை­யா­ன­தாகக் காணப்­ப­டு­கின்­றன. வூஹான் நகரில் நிலவும் தெளி­வான கோப­நிலை பற்றி குறிப்­பி­டப்­ப­டாத நிலையில் அரச தொலைக்­காட்சி செய்தி வாசிப்­பா­ளர்கள் மணி நேரத்­துக்கு ஒரு முறை ஒளி­ப­ரப்பும் செய்­தி­களில் நோய்ப்­ப­ரம்­பலைக் கட்­டுப்­ப­டுத்தும் சீனாவின் துரித முயற்­சிகள் சர்­வ­தேசச் சமூ­கத்தின் கவ­னத்தை மிகவும் ஈர்த்­துள்­ள­தா­கவும் செய்­திகள் வாசிக்­கப்­ப­டு­கின்­றன.

குளோபல் டைம்ஸ் என்ற அரச உடைமை­யான ஆங்­கில செய்­திப்­பத்­தி­ரிகை அவ­சர நிலை­யினை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர சீன அரசு மேற்­கொள்ளும் பரம்­ப­லான வெளி­யு­லகத் துண்­டிப்பு மற்றும் வூஹான் நகரில் 10 நாட்­க­ளுக்குள் கட்­டப்­பட்ட வைத்தியசாலை போன்ற விடயங்களில் தனது கவனத்தை குவித்து செய்திகளை வெளியிடுகின்றது.

அப்பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகின்றது. “சாதாரண நிலைகளில் நம்பமுடியாத சில நடவடிக்கைகள் மிகவும் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் ஒட்டுமொத்த சமுதாயமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்நோய்ப் பரம்பலுக்கு எதிரான பாரிய ஆனால் வரிசைக்கிரமமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.”

அத்துடன் குறித்த கட்டுரை ஐக்கிய அமெரிக்கா அண்மையில் சீன நாட்டிலிருந்து வருகைதரும் பிரயாணிகளை தடுப்பதற்கு அந்நாடு மேற்கொண்ட தீர்மானத்தை சாடுகின்றது.

“இறுதியாக இந்நோய்ப்பரம்பல் இல்லாதொழிந்துவிடும். 17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சார்ஸ் நோய்ப்பரம்பலின் பொழுது அதிகமான மக்கள் சீனாவைக் குறை கூறினர். ஆனால் இறுதியாக என்ன நடந்தது? எவரும் பொதுமக்கள் சுகாதாரத் தீவிர நிலை ஒன்றுக்கு எதிராகப் போராடும் சீனாவின் வல்லமையை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஏனைய நாடுகளினால் எடுக்க முடியாத பல நடவடிக்கைகளை எமது நாட்டினால் எடுக்க முடியும் என்பதால் இத்தீவிர நிலை முடிவடைந்த பின்னர் நாம் விரைவாக வழமைக்குத் திரும்புவோம்” என்று அக்கட்டுரை மேலும் கூறுகின்றது.-Vidivelli

  • மூலக் கட்டுரை:
    ஷாவ்ன் யுவான்,
    தமிழாக்கம்: அதீக் சம்சுதீன்

Leave A Reply

Your email address will not be published.